என் மலர்
நாகப்பட்டினம்
- குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
- அனைவரும் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், ஆயக்காரன்புலம்-3 ஊராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது.
முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
1 மற்றும் 2 வயதுடையோருக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதுடையோருக்கு ஒரு மாத்திரையும் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.
இந்த மாத்திரைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி- கல்லூரிகள் மூலம் வழங்கப்படும் என்றார்.
பின்னர், தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க மாணவிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி, வட்டார மருத்துவர் சுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம்.
- இந்த ஆண்டு மாசிமக விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேதாரண்யம்:
வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.
அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான காட்சி கொடுத்த தலம்.
இது போல் பல்வேறு சிறப்புகளை உடைய இந்த திருக்கோயிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகர சுவாமி மகர தோர வாயிலில் கொடிமரத்து முன்பு எழுதருளி கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் யாழ்பாணம் பரணி ஆதினம்செவ்வந்தி நாதா பண்டார சன்னதி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன், சலஸ்தார்கள் கையிலை மணி, வேதரத்தினம், கேடிலிஅப்பன் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கோவிலில் மார்ச் 3 ந்தேதிதேர்திருவிழா, மார்ச் 8ந் தேதி தெப்பதிருவிழா, பிப்-22 திருக்கதவு திறக்க அடைக்க பாடும் நிகழ்ச்சி என முக்கிய விழாக்கள் நடைபெற உள்ளது.
- விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு எடுத்து செல்ல முடியாமல் அவதி.
- நெல் மூட்டைகள் ஏற்றி வரும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது.
இந்த கொள்முதல் நிலையத்திற்கு செல்ல மண்சாலை தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறுவை, சம்பா அறுவடை நேரங்களில் பருவம் தவறி செய்யும் மழையால் சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்று சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு எடுத்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கடந்த 2016 -ம் ஆண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.
இடையாத்தங்குடி, கணபதிபுரம், சேஷமூலை, கிடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவிற்கு சாகுபடி நிலங்கள் உள்ளது.
இங்கு அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் முழுவதும் இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தான் கொள்முதல் செய்ய ப்படும்.
இந்த நிலையில் சாலை மண்சாலையாக இருப்பதால் நெல் மூட்டைகள் ஏற்றி வரும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கிறது.
இதனால் விவசாயிகள் அவதிக்குள்ளாகப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு புதிய சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்களை விடுத்துள்ளனர்.
- முறையான கணக்கெடுப்பு நடத்தி உரியநிவாரணம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
- அரசு அறிவித்த நிவாரணத் தொகை போதுமனதாக இல்லை.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் ஜெயராஜபவுலின் தலைமை தாங்கினார். கூட்டத்துக்கு வந்த விவசாயிகள், 'பருவம் தவறி பெய்த கனமழையால் சம்பா சாகுபடி பாதிக்கபட்டுள்ளது. இதனை முறையாக கணக்கெடுத்து கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அப்போது முறையான கணக்கெடுப்பு நடத்தி உரியநிவாரணம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
மேலும் தாசில்தார் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட முளைத்த நெற்பயிர்களுடன் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பாதிக்கப்பட்ட வயல்களை முறையாக கணக்கெடுக்க கோரியும், உரிய நிவாரணத் தொகை வழங்க கோரியும் முழக்கமிட்டனர்.
பின்பு தாசில்தார் ஜெயசீலன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று மீண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலர், 'வேதாரண்யம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து முளைத்துவிட்டது. இதனை முறையாக வேளாண்மைதுறை அதிகாரிகள் கணக்கெடுக்கவில்லை. அரசு அறிவித்த நிவாரணத் தொகை போதுமனதாக இல்லை. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' என வலியுறுத்தினர்.
- நடப்பு ஆண்டில் 16 நெல் கொள்முதல் நிலையங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
- அண்ணாபேட்டை, வாய்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.
முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி குமார் அனைவரையும் வரவேற்றார்.
ஒன்றிய குழு உறுப்பி னர்கள் கோமதி தனபால், வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது:-
நாகை மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு 10 நெல் கொள்முதல் நிலையங்களும், நடப்பு ஆண்டில் 16 நெல் கொள்முதல் நிலையங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடுவாஞ்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் வண்டுவாஞ்சேரி, அண்ணாபேட்டை, வாய்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றார்.
விழாவில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு, பாஸ்கர், கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம் முருகையன் மற்றம் பலர் கலந்து கொண்டனர்.
- ஆற்றுப்பாலத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
- வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி கீழ் பாதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் தினேஷ் (வயது 23). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தினேஷ் வேலை முடிந்ததும், வீட்டுக்கு செல்லும் வழியில் மானங்கொண்டான் ஆற்றுப்பாலத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் நண்பர்கள் சென்ற பிறகு, தினேஷ் அந்த ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது தூங்கிவிட்டார்.
இந் நிலையில் அவர் ஆற்றில் தவறி விழுந்தார். இதில் ஆற்றில் மூழ்கி தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று காலையில் அவரது குடும்பத்தினர் தேடியபோது தினேஷ் ஆற்றில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து வேதாரண்யம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தினேஷின் உடல் மீட்கப்பட்டு, வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் மேலமறைகாடர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி ஆனந்த் சிவச்சாரியார் தலைமையில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து, கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- வேதாரண்யத்தில் 5 போலீஸ் நிலையங்கள் இருந்தும் இதுவரை கிளைச்சிறை இல்லை.
- 50 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை உள்ள கிளை சிறைச்சாலைக்கு செல்ல இரவு முழுவதும் பயணம்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் வேதாரண்யம், வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு, வேட்டைக்காரன் இருப்பு ஆகிய 5 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
வேதாரண்யத்தில் கடந்த 2006 -ம் ஆண்டு முதல் மாவட்ட உரிமைகள் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தொடங்கி தற்போது முழு நேர நீதிமன்றமாக இயங்கி வருகிறது.
நாகப்பட்டினம், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட 4 இடங்களில் கிளை சிறைகள் உள்ளன.
வேதாரண்யத்தில் 5 போலீஸ் நிலையங்கள் இருந்தும் இதுவரை கிளைச்சிறை இல்லை.
வேதாரண்யத்தில் கிளைச்சிறை இல்லாததால் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினம் சிறைக்கோ அல்லது 60 கி.மீ தொலைவில் உள்ள தரங்கம்பாடி சிறைக்கோ அல்லது 100 கி.மீ. தொலைவில் உள்ள மயிலாடுதுறை சிறைக்கோ அல்லது 120 கி.மீ. தொலைவில் உள்ள சீர்காழி சிறைக்கோ குற்றவாளிகளை கொண்டு செல்லவேண்டி உள்ளது.
இதனால் போலீசார் பல சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. போலீசார் பெரும்பாலும் குற்றவாளிகளை மாலை நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்காவல் உத்தரவு பெறுகிறாா்கள்.
அப்படி உள்ள சூழ்நிலையில் வேதாரண்யத்தில் இருந்து 50 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை உள்ள கிளை சிறைச்சாலைக்கு செல்ல இரவு முழுவதும் பயணம் செய்து மறுநாள் சிறையில் குற்றவாளியை அடைத்து விட்டு பணிக்கு வருவதற்கு ஒரு நாள் ஆகிறது.
னவே, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள வேதாரண்யம் நீதிமன்றத்தை சார்ந்து வேதாரண்யம் பகுதியில் கிளை சிறை அமைக்க வேண்டும் என வக்கீல் சங்க தலைவர் பாரி பாலன் அரசுக்்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி ஆய்வு.
- ரூ.68.80 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் கட்டும் பணி.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கடினல்வயல் ஊராட்சியில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்தையும், ஆயக்காரன்புலம்-2 ஊராட்சி பாப்பிரெட்டி குத்தகை கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் முதல் மருதூர் தெற்கு வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 255.21 லட்சம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் தெற்கு முட்டகம் வரை ரூ. 23.50 லட்சம் மதிப்பீட்டிலும், தென்னடார் ஊராட்சியில் மேலக்காடு சாலை ரூ. 49.80 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் புஷ்பவனம் ஊராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும், வாய்மேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15-வது மான்ய நிதியின் கீழ் ரூ. 42.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாக்க கட்டிடம் கட்டும் பணிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15-வது நிதிக்குழு சுகாதார மானியத்தில் ரூ.68.80 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜீ, பாஸ்கர் குஜாரத் கெமிக்கல் லிமிடெட் மேலாளர் சுந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.
- தினசரி பூஜைகள் முக்கிய திருவிழாக்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
- அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை.
வேதாரண்யம்:
வேதாரண்யம்நகரில் நாட்டு மடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவி லில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
மேலும், தினசரி பூஜைகள் முக்கிய திருவிழா க்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
மேலும், ஒவ்வொரு தமிழ் மாத கடைசி ஞாயிற்றுக்கி ழமைகளில் பக்தர்கள் ஒன்றுகூடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்துவது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் தை மாத கடைசி ஞாயிற்று கிழமையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்க ப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- குழந்தை ரூபமாக காட்சி தரக்கூடிய வடுக பைரவர் தனி சன்னதியில் அருள்பாலிப்பு.
- 96 வகையான ஹோமம், 9 வகையான நவதானியங்கள், பழவகைகள் உள்ளிட்டவை கொண்டு மகா யாகம்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த பனங்காடி ஊராட்சி வடுவகுடியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பிகா சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் குழந்தை ரூபமாக காட்சி தரக்கூடிய ஶ்ரீ வடுக பைரவர் தனி சன்னதியில் அமைத்து அருள்பாலிப்பது தனி சிறப்பாகும்.
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ரூத்ர யாகம் மற்றும் அஷ்டமி மகா யாகம் நடையைபெற்றது.
முன்னதாக பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து 21 வகையான சமித்து மற்றும் 96 வகையான ஹோமம் திரவியங்கள், 9 வகையான நவ தாணிங்கள், பழவகைகள், பட்டு உள்ளிட்டன கொண்டு மகா யாகமும் தொடர்ந்து சிறப்பு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.
மகா தீபாராதனைக்கு பின்னர் கடம் புறப்பாடாகி ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டது.
பின்னர் கடத்து புனிதநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- மூவரால் பாடல் பெற்ற தலம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டது.
- மல்லாரி மற்றும் சிவன் கீர்த்தனையோடு வீதியுலா காட்சி சிறப்பாக நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள தர்மபுர ஆதீனத்திற்கு சொந்தமான தியாகராஜ சுவாமி கோவில் அமைந்து ள்ளது.
மூவரால் பாடல் பெற்ற தலம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த கோவில் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று இரவு திருக்கல்யாண உற்சவமும் பின்னர் சிறப்பு திருவீதி உலா காட்சி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி அம்பாள், வள்ளி தெய்வானை உடன் முருகப்பெருமான் மற்றும் விநாயகர், சண்டிஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள்.
தொடர்ந்து திருக்குவளை சகோதரிஞகள் முனைவர் சுந்தரி, சாவித்திரி ஆகியோரின் மல்லாரி மற்றும் சிவன் கீர்த்தனையோடு வீதியுலா காட்சி சிறப்பாக நடைபெற்றது.
தவதருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்த வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.






