என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • வருகிற 31-ந் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    வேதாரண்யம்:

    உலக சுற்றுச்சூழல் தினம் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வருகிறது.

    இதனை யொட்டி நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அறிவுரையின்படி, முதற்கட்டமாக கோடியக்காட்டில் புயல் பாதுகாப்பு கட்டிட வளாகப்பகுதியில் ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமையில், கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், ஊராட்சி செயலாளர் சுபா, வனவர்கள் சதீஷ்குமார், ராமதாஸ் மற்றும் வனத்துறை பணியாளர்கள் 100 மரக்கன்றுகளை நட்டனர்.

    தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இதுகுறித்து கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் கூறுகையில்:-

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி விழிப்புணர்வு முகாமும், 31-ந் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு முகாமும், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி கடற்கரை தூய்மை படுத்தும் பணியும், நிறைவாக 5-ந் தேதி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடுக்கடை கடைத்தெருவில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் மளிகை பொருட்களை திருடி சென்றார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் பள்ளிவாசல் தெருவில் பாஸ்கரன் (வயது 45) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபரை பிடிக்கக் கோரி புகார் ஒன்று அளித்து இருந்தார்.

    புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நடுக்கடை கடைதெருவில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றி நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஆலத்தூர் மேலத்தெருவை சேர்ந்த லட்சுமணன் (வயது 33) என்பதும் இவர் நேற்று முதல் நாள் இரவு மளிகை கடையில் பூட்டை உடைத்து 2000 ரூபாய் பணம் மற்றும் 2000 மதிப்பிலான மளிகை பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.

    உடனே திட்டச்சேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
    • கள்ளச்சாராய விற்பனையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கி பேசுகையில்:-

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    கள்ளச்சாராய விற்பனையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் தமிழக அரசு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்க ப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்க முன்வரவில்லை என்றார்.

    தொடர்ந்து, வேதாரண்யம் பகுதியில் கடந்த அ.தி.மு.க அரசின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகளை குறித்து பட்டியலை படித்து காண்பித்தார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சுப்பையன், திலீபன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், நகர செயலாளர் நமச்சிவாயம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட காவடிகளை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
    • அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    திருவிழாவின் 4-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 35 ஆம் ஆண்டு பால்காவடி ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் விரதம் இருந்த பக்தர்கள் பால்,பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட காவடிகளை தலையில் சுமந்தவாறு புதியபேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீ அச்சம் தீர்த்த விநாயகர் ஆலயத்தில் முக்கிய வீதிகள் வழியாக நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம் வரை மேள தாளங்கள் முழங்க இன்னிசையோடு பார்வதி, சிவன், காளி, கருப்புசாமி வேடமிட்டு நடனத்தோடு காவடிகள் சென்று அம்மனுக்கு பால் பன்னீர் சந்தன அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் புதிய நம்பியார் நகரை சேர்ந்தவர் இந்திரா.

    இவரது மகள் குணவதி (வயது 15).

    இவர் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.

    இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    இதில் மாணவி குணவதி ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைந்தது தெரியவந்தது.

    இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டினார்.

    இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் குணவதியை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார்.

    இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • உலக நன்மை வேண்டி ருத்ர யாகம் நடைபெற்றது.
    • மேல மறைக்காடர், வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவிலில் உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடந்தது.

    யாகத்தில் விக்னேஷ்வர பூஜையுடன், சுப்பிரமண்ய, நவக்கிரக பரிகார விசேஷ பூஜைகளுடன்ருத்ர மகாயாகம் வேதநாயகி அம்மனுக்கு உலக நன்மை வேண்டி யாகம் நடைபெற்றது.

    பின்னர் மேல மறைக்காடர், வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாரதனையும் முடித்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    • பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.
    • பழமையான சுமைதாங்கி பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிலையம் அமைத்துத்தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

    துணைத்தலைவர் அறிவழகன், ஒன்றிய ஆணையர்கள் ராஜூ, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அலுவலர் ரமேஷ் தீர்மானங்களை படித்தார்.

    பின்னர் தீர்மானங்கள் குறித்து உறுப்பினர்கள் பேசியாதவது:-

    செம்போடை ஊராட்சி பகுதியில் 24 மணி நேரமும் சாராய விற்பனை நடைபெறுகிறது.

    எனவே, சாராய விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்.

    மருதூர் வடக்கு ஊராட்சி பகுதியில் உள்ள பைப்புகளில் தண்ணீர் வருவதில்லை, தெரு விளக்குகள் எரியவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாணிக்கோட்டகம் ஊராட்சி பகுதியில் உள்ள தெரு விளக்குகளில் பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வில்லை.

    மேலும், பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.

    முள்ளியாறு, மானங்கொண்டான் வடிகால் ஆறுகளின் கரைகளை பலப்படுத்தி மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வேண்டும்.

    மேலும், ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.

    கோடியக்காடு எல்லை பகுதியான பழமையான சுமைதாங்கி பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிலையம் அமைத்துத்தர வேண்டும் என உறுப்பினர்கள் பேசினர்.

    இதேபோல உறுப்பி னர்கள் ருக்மணி, அருள் மேரி, வேதரெத்தினம், கோமதி, தனபால் உள்பட கவுன்சிலர்கள் தங்களது தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினர்.

    தலைவர் கமலாஅன்பழகன்:-

    ஒன்றிய பகுதிகளில் சாலைப்பணிகள் உள்பட தேவையான வளர்ச்சி பணிகள் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் கட்சிப்பா குபாடின்றி செய்யப்படும் என்றார்.

    கூட்டத்தில் மின்சாரம், நெடுஞ்சாலை, சமூக நலத்துறைகளின் அதிகாரிகளும், ஒன்றிய அலுவலர்களும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

    • சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி மணல்மேடு கிராமம் உள்ளது.

    இங்கு சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு காய்கறி சாகுபடியே பிரதான தொழிலாக உள்ளது.

    இக் கிராமத்திலிருந்து அடுத்து உள்ள மீனவர் காலனி செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கப்பி மற்றும் மணல் சாலையாகவே உள்ளது.

    இதனால் இவ்வழியே செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என விவசாயிகள் மிகவும் சிரமப்படு கின்றனர்.

    மேலும் மழைக்காலங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் வாகன ஒட்டிகள் பெரிதும் அவதி அடைகிறார்கள்.

    இதனால் இந்த சாலையை தார் சாலையாக மாற்றி அமைத்துதர வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வைகாசி மாத அமாவாசை பெருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தடைந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியை அருகே உள்ள பூவைத்தேடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீபாலஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் வைகாசி மற்றும் அமாவாசையை பெருவிழாவை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 501 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

    விரதம் இருந்த பக்தர்கள் மாணிக்க விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் செண்டை மேளங்கள் முழங்க பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

    பின்னர் ஸ்ரீபாலஆஞ்சநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மஹாதீபாரதணை காண்பிக்கப்பட்டது.இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
    • கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து உற்சாகமாக கடலில் நீராடுகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்து பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், யாத்திரிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது முழு ஆண்டு தேர்வு விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்க ண்ணியில் குவிந்துள்ளனர்.

    பின்னர் நடுத்திட்டு, கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். மேலும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்தும், மெழுகுவத்தி ஏற்றியும், மாதாவிற்கு மாலை அணிவித்தும், தென்னங்கன்றுகளை காணிக்கையாக செலுத்தியும் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

    கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து உற்சாகமாக கடலில் நீராடுகின்றனர். மேலும் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடுதலில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள் ராட்டினத்தில் தங்களது குழந்தைகளை அமர வைத்து கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.

    அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு வேளாங்கண்ணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    • அமிர்தகர சுப்பிரமணியருக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சுப்பிரமணியர் ஒரு முகம், 6 கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதி கோவில்களில் வைகாசி மாத கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகருக்கும், வெளிபிர காரத்தில் உள்ள மேலக்குமர ருக்கும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெற்றது.

    பின்னர், சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல், கோடியக்காடு அமிர்தக டேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியருக்கு மஞ்சள், பால் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின், விபூதி அலங்கா ரத்துடன் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.

    இக்கோவிலில், சுப்பிரம ணியர் ஒரு முகம், 6 கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    இதேபோல், தோப்பு த்துறை கைலாசநாதர் கோவிலில் உள்ள முருகருக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகருக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து முருகனை வழிபட்டனர்.

    • குளங்கள் கழிவுநீராலும், குப்பைகளாலும் சூழந்து துார்ந்து போகும் நிலையில் உள்ளது.
    • வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்பவர்கள் இந்த குளங்களில் நீராடி செல்வார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லை ஊரா ட்சிக்கு உட்பட்ட புத்துார் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் இங்கு சிவன்கோயில் தெரு குளம், அய்யனார்குளம், தாமரைக்குளம் ஆகிய 3 குளங்கள் உள்ளது.

    இந்த குளங்கள் தற்போது கழிவுநீராலும், குப்பைகள், கருவேல மரங்கள் சூழந்து துார்ந்து போகும் நிலையில் உள்ளது.

    மேலும் தேங்கி உள்ள தண்ணீரால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதிலிருந்து விஷ பூச்சிகள் அப்பகுதியில் உள்ள குழந்தைகளை கடிப்பதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை குளத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    வேளாங்கண்ணிக்கு பாதை யாத்திரையாக செல்பவர்கள் இந்த குளங்களில் குளித்துவிட்டு செல்வார்கள்.

    தற்போது இந்த குளங்கள் தூர்வாரப்படாததால் அதில் தேங்கியுள்ள நீர் அசுத்தமாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் குளத்தை துா ர்வாரி மக்கள் பயன்பா ட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×