என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேலமறைக்காடர் கோவிலில் ருத்ர யாகம் நடந்தது.
மேலமறைக்காடர் கோவிலில் ருத்ர யாகம்
- உலக நன்மை வேண்டி ருத்ர யாகம் நடைபெற்றது.
- மேல மறைக்காடர், வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவிலில் உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடந்தது.
யாகத்தில் விக்னேஷ்வர பூஜையுடன், சுப்பிரமண்ய, நவக்கிரக பரிகார விசேஷ பூஜைகளுடன்ருத்ர மகாயாகம் வேதநாயகி அம்மனுக்கு உலக நன்மை வேண்டி யாகம் நடைபெற்றது.
பின்னர் மேல மறைக்காடர், வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாரதனையும் முடித்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
Next Story