search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
    X

    பக்தர்கள் சுவாமி வேடம் அணிந்து ஊர்வலமாக பந்தனர்.

    நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

    • பக்தர்கள் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட காவடிகளை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
    • அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    திருவிழாவின் 4-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 35 ஆம் ஆண்டு பால்காவடி ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் விரதம் இருந்த பக்தர்கள் பால்,பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட காவடிகளை தலையில் சுமந்தவாறு புதியபேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீ அச்சம் தீர்த்த விநாயகர் ஆலயத்தில் முக்கிய வீதிகள் வழியாக நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம் வரை மேள தாளங்கள் முழங்க இன்னிசையோடு பார்வதி, சிவன், காளி, கருப்புசாமி வேடமிட்டு நடனத்தோடு காவடிகள் சென்று அம்மனுக்கு பால் பன்னீர் சந்தன அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×