என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • பெரிய மினோரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
    • பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள் என தேசிய கொடிகளை பறக்கவிட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினோரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினோராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.

    இதேபோல நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் நாகை நகராட்சி அலுவலகமும் கண்கவர் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. முகப்பு பகுதியில் 3 நாட்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    • வெங்கடாஜலபதி சன்னதியில் கம்பவிளக்கு ஏற்றி வைத்து வழிபட்டனர்.
    • பரத நாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு யாதவபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு 70-வது ஆண்டு கம்பசேவை விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

    முன்னதாக தெத்தேரியி லிருந்து புனித நீராடிய பக்தா்கள் கம்பவிளக்கு ஏந்தி வந்து வெங்கடாஜலபதி சன்னதியில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, வடை மாலை, வாழைத்தார் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு படையல் இட்டு தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் அரிச்சந்திரா புராண நாடகம், பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, விளக்கு பூஜை, பரத நாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    விழாவின் நிறைவு நாளை யொட்டி வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான வாலிபர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறினர். முன்னதாக வெங்கடாஜலபதிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா நிர்வாகக்குழுவினரும், தேத்தாகுடி தெற்கு யாதவபுரம் கிராமமக்களும் செய்திருந்தனா்.

    • 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • முடிவில் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங் கண்ணியில் மாவட்டத்தில் முதன்முறையாக தனியார்பாரம்பரிய வீர சிலம்ப கழகம் சார்பில் 76 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் ஜூனியர், சப் ஜூனியர் ,சீனியர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா,பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் தனித்திறன் மற்றும் தொடு முறை, ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, மான்கொம்பு, சுருள்வாள், குத்துவரிசை உள்ளிட்ட போட்டிகள் நடுவர் மேற்பார்வையில் நடைபெற்றன. இதில் ஏராளமான சிறுவர்கள் உட்பட பலர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அவர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் சிலம்பாட்ட போட்டிகளுக்கு தகுதி பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்ச்சியின் இறுதியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.

    • வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    ஆடி மாத கடைசி பிரதோஷத்தை யொட்டி வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சுவாமிக்கும், நந்திகேஸ்வ ரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சுவாமி சன்னதியில் சரவிளக்கு ஏற்றப்பட்டு ஒளிமயமாக காட்சியளித்தது.

    பின்னர், வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    வேதாரண்யம் பகுதி கோவில்கள் இதேப்போல், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாக்குடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழகர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையார் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷத்தை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கருகிய பயிர்கள் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள அருந்தவம்புலம் கடைத்தெ ருவில் கருகி வரும் குறுவை நெற்பயிரை காப்பாற்ற உரிய தண்ணீர் திறந்து விடக்கோரியும் கருகி போன நெற்பயிருக்கு நிவாரண தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டி மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

    மறியல் போராட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் சம்பந்தம் ,மகேந்திரன், மங்கையர்கரசி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர் .

    இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வேதார ண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திர போஸ், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தாசி ல்தார் சுரேஷ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிட ப்பட்டது.

    இதனால் திருத்து றைப்பூண்டி_ நாகப்ப ட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த திருக்குவளைக்கட்டளை - அண்ணா பேட்டை காமாட்சி அம்மன் முனீஸ்வரர் ஆலயத்தில் 11ம் ஆண்டு விளக்கு பூஜை உலக நன்மை வேண்டி நடைபெற்றது

    திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு உலக நன்மை வேண்டி பூஜை செய்து வழிபட்டனர் முன்னதாக காமாட்சி அம்மன் பெத்தாரண்ய சுவாமி முனீஸ்வரர் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டுமகா தீபாரதணை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர்.

    விளக்கு பூஜை முன்னிட்டு சுமங்கலி பெண்களுக்கு தாலிகயிறு, மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட, மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராமத்தினர் செய்து இருந்தனர்

    • பருவம் தவறி பெய்த மழையால் பயறு, எள், கடலை பயிர்கள் பாதிப்படைந்துள்ளது.
    • தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் பாலகுரு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்பின் படி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு உடன் திறந்து விட வேண்டும்.

    கடந்த 2 மாதங்களாக கூட்டு குடிநீர் சரிவர வராத காரணத்தினால் அவதிப்படும் கிராம மக்களை பாதுகாத்திட பருவம் தவறி பெய்த மழையால் பயறு, எள், கடலை மற்றும் பாதிப்படைந்த பயிர்களுக்கு தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை உடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட செயலாளர் சிவகுரு.பாண்டியன் சிறப்புரையாற்றினார். விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் செங்குட்டுவன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் முருகானந்தம், மாவட்டக்குழு கருணாநிதி, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் அருள்ஒளி, நகரச் செயலாளர் ராஜேந்திரன்.

    இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், ஒன்றியச் செயலாளா் பழனியப்பன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் இளவரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேதாரண்யம் -கரியாப்பட்டினம் சாலையில் கருங்கல் ஏற்றிய லாரி வந்து கொண்டிருந்தது.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை மீனவ கிராமத்தில் ரூ.150 கோடி செலவில் படகு நிறுத்த தூண்டில் முள் வளைவு கட்டும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது .

    இதற்காக புதுக்கோ ட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கல் ஏற்றி வந்து ஆறுகாட்டுதுறை கடலில் கொட்டி துண்டு முள் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மணக்காடு பகுதியில் வேதாரண்யம் -கரியாப்பட்டினம் சாலையில் திருச்சியில் இருந்து கருங்கல் ஏற்றி லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக கார் வந்தது.

    திடீரென எதிர்பா ராதவிதமாக லாரி- கார் நேருக்கு நேர் மோதி கொண்டன.

    இதில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து அதில் இருந்த கருங்கற்கள் சாலையில் சிதறின. விபத்தில் டிரைவர் முத்து பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இமு பற்றி கரியா பட்டி னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவின் 10-ம் நாளை யொட்டி காதலிதேவன்காடு மண்டகப்படி உபயதாரர்கள் சார்பில் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    பின்னர், நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சியில் வெள்ளைச்சாமி நடுவராக பங்கேற்றார். தொடர்ந்து, அதிகாலை யானை வாகனத்தில் அம்மன் வீதிஉலாவும், வாண வேடிக்கையும் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நாட்டாமைகள், மண்டகப்படி உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • ஏராளமான பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருப்பூண்டி அடுத்த கீழையூர் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் முறைப்படி திருமறை மந்திரங்கள் ஓத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து ஏராளமான சுமங்கலி பெண்கள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் மலடு நீக்கசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
    • முகாமில் 1465 கால்நடைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திரும ருகல் ஒன்றியம் திருப்புக லூரில் தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை (ஆவின்) மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழா, கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    கால்நடை கண்காட்சி யினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் துவக்கி வைத்தார்.

    சிறந்த கால்நடை வளர்போருக்கான பரிசுகளை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் மேம்பாட்டு கழகம் தலைவர் உ.மதிவாணன்,

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஆகியோர் வழங்கி சிறப்புரை ஆற்றினர்.

    கால்நடை வளர்போருக்கான இடுபொருள் வழங்கி முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ,வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டு வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முன்னதாக ஆவின் பொது மேலாளர் சத்யா வரவேற்றார்.

    இம்முகாமில் சுமார் 186 கால்நடை வளர்ப்போர்,443 பசுக்கள்,658 ஆடுகள், கோழிகள் 254 நாய்களுக்கு தடுப்பூசி,குடற்புழு நீக்கம்,செயற்கை முறை கருவூட்டல் 31,சிகிச்சை 206,ஆண்மை நீக்கம் 14, தாது உப்புக்கலவை வழங்குதல் 175 கிலோ ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் சினைப்பரி சோதனை மற்றும் மலடுநீக்க சிகிச்சை நவீன கருவி உதவியுடன் மேற்கொள்ள ப்பட்டது.

    முகாமில் 1465 கால்நடைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    கால்நடை கண்காட்சியில் பல்வேறு தீவன பயிர்கள் பயன்பாடு மற்றும் முக்கியத்து வம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் மூலம் சினை பரிசோதனை மற்றும் பல்வேறு பரிசோ தனைகள் மேற்கொள்ள ப்பட்டது.

    ஆவின் நிறுவனத்தின் மூலம் பால், மதிப்பு கூட்ட ப்பட்ட பொருட்கள் விற்ப னையகம் மற்றும் விழிப்பு ணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    சிக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக உதவி பேராசிரியர் மூலம் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இம்முகாமில் உதவி இயக்குநர் அசன் இப்ராகிம் மற்றும் வேதாரண்யம் கால்நடை மருத்துவர் கணேசன்,திருப்புகலூர் கால்நடை உதவி மருத்துவர் முத்துக்குமார், ஆகியோர் தலைமையில் கால்நடை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள்,

    ஆவின் கால்நடை மருத்துவர்கள், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

    முடிவில் திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்

    • பள்ளி குழந்தைகளுக்கு 150 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
    • பள்ளி குழந்தைகளுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகளே உனக்காகதிட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தலைமை வகித்தார்.

    ஆசிரியர் சரவணன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் பள்ளி குழந்தை களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் 'போக்சோ சட்டத்தின் முக்கியத்து வத்தினை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

    மேலும் நிகழ்ச்சியில் பள்ளி குழந்தை களுக்கு 150 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெகடர் ராதாகி ருஷ்ணன், பள்ளித் தலைமை ஆசிரியர் ராதை, ஆத்மா குழு உறுப்பினர் மகாகுமார், ஆசிரியர்கள் நாகேந்திரன், சுமன், வேம்பரசி, சுபத்ரா, தாரணி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டார். முடிவில் ஆசிரியர் திருமுருகன் நன்றி கூறினார்.

    ×