என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
- கருகிய பயிர்கள் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்.
- கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள அருந்தவம்புலம் கடைத்தெ ருவில் கருகி வரும் குறுவை நெற்பயிரை காப்பாற்ற உரிய தண்ணீர் திறந்து விடக்கோரியும் கருகி போன நெற்பயிருக்கு நிவாரண தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டி மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியல் போராட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் சம்பந்தம் ,மகேந்திரன், மங்கையர்கரசி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர் .
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வேதார ண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திர போஸ், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தாசி ல்தார் சுரேஷ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிட ப்பட்டது.
இதனால் திருத்து றைப்பூண்டி_ நாகப்ப ட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்