என் மலர்
நாகப்பட்டினம்
பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகத்தை திறந்து வைக்க பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திருப்பூர் வருகை தர உள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் பஸ் நிறுத்தம் பகுதியில் திருப்பூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் அலுவலக திறப்புவிழா வருகிற 24-ந்தேதி தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகத்தை திறந்து வைக்க பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திருப்பூர் வருகை தர உள்ளார். இதற்காக விழா மேடை அமைக்க பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
பூமி பூஜையில் கேரள மாநில பா.ஜ.க. பொறுப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
மாவட்டதலைவர் செந்தில்வேல், மாநில செயலாளர் மலர்க்கொடி, மாநிலசெயற்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, நாச்சிமுத்து, மாவட்ட பொதுசெயலாளர்கள் கே.சி.எம்.பி சீனிவாசன், கதிர்வேல், காடேஸ்வரா எஸ்.தங்கராஜ் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல அணி பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
நாகை, வேதாரண்யத்தில் பெய்த பரவலான மழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், நாகூர், திருமருகல், திட்டச்சேரி, வேளாங்கண்ணி உள்பட பல பகுதிகள் உள்ளன. நாைக மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வயலில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். நாகை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
வேதாரண்யம் பகுதியில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே பள்ளமான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. வயல்களில் தேங்கி நின்ற தண்ணீர் லேசாக வடிந்து கொண்டிருக்கிறது. மேலும் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் வருமான இழப்பை சந்தித்து உள்ளனர்.
கீழ்வேளூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மாலை 3 மணி முதல் கீழ்வேளூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. கீழ்வேளூர், வடகரை, கோகூர், ஆனைமங்கலம், நீலப்பாடி, அத்திப்புலியூர், குருக்கத்தி, கூத்தூர், குருமணாங்குடி, தேவூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம், சிக்கல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மீண்டும் கனமழை பெய்ய தொடங்கினால் பலத்த நஷ்டம் ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். நாகை மாவட்டம் நாகூரில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான மழை விட்டு, விட்டு பெய்தது. நேற்று காலை வெயில் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மக்கள் வெளியில் சென்று வர முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், நாகூர், திருமருகல், திட்டச்சேரி, வேளாங்கண்ணி உள்பட பல பகுதிகள் உள்ளன. நாைக மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வயலில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். நாகை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
வேதாரண்யம் பகுதியில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே பள்ளமான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. வயல்களில் தேங்கி நின்ற தண்ணீர் லேசாக வடிந்து கொண்டிருக்கிறது. மேலும் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் வருமான இழப்பை சந்தித்து உள்ளனர்.
கீழ்வேளூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மாலை 3 மணி முதல் கீழ்வேளூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. கீழ்வேளூர், வடகரை, கோகூர், ஆனைமங்கலம், நீலப்பாடி, அத்திப்புலியூர், குருக்கத்தி, கூத்தூர், குருமணாங்குடி, தேவூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம், சிக்கல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மீண்டும் கனமழை பெய்ய தொடங்கினால் பலத்த நஷ்டம் ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். நாகை மாவட்டம் நாகூரில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான மழை விட்டு, விட்டு பெய்தது. நேற்று காலை வெயில் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மக்கள் வெளியில் சென்று வர முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கோவையில் உடல்நிலை சரியில்லாததால் மனம் உடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குனியமுத்தூர்:
கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயது முதியவர். இவர் திருமணமாகி மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இவர் கடந்த ஒன்றை மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர்.
இந்தநிலையில் அந்த பெண் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியிருந்தார்.
வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த அந்த பெண்ணின் 60 வயது கணவர், மதியம் வீடு திரும்பினார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் வெகுநேரமாக தட்டி பார்த்தார். கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு அந்த பெண் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.
இதுபற்றி போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயது முதியவர். இவர் திருமணமாகி மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இவர் கடந்த ஒன்றை மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர்.
இந்தநிலையில் அந்த பெண் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியிருந்தார்.
வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த அந்த பெண்ணின் 60 வயது கணவர், மதியம் வீடு திரும்பினார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் வெகுநேரமாக தட்டி பார்த்தார். கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு அந்த பெண் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.
இதுபற்றி போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நாகை கடற்கரையில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்பதால் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் ஆகிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் நாகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
நாகை நகரில் பொழுதுபோக்கு அம்சமாக கலங்கரை விளக்கம் மற்றும் புதிய கடற்கரை மட்டுமே உள்ளது. இதில் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகை கடற்கரை சிதிலமடைந்தது. இதை தொடர்ந்து நாகை புதிய கடற்கரை மீண்டும் புதுபொலிவுடன் சீரமைக்கப்பட்டது. இதில் பாராசூட் பயிற்சி, படகு சவாரி, சிறுவர் விளையாட்டு பூங்கா, நடை பயிற்சி மேடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. இதனால் அங்கு காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கடற்கரையில் காற்று வாங்கி செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
தற்போது கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு பொதுமக்கள் அமர முடியாத நிலையில் உள்ளது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்ததொடர் மழையின் காரணமாக புதிய கடற்கரையில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ள இடத்தில் குளம் போல மழைநீர் தேங்கியுள்ளது.
உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களை சுற்றி மழைநீர் சிறிய குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால் தினந்தோரும் புதிய கடற்கரைக்கு வந்து உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நாகை தொகுதி மக்கள் கூறியதாவது:-
நாகை பகுதி மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக புதிய கடற்கரை உள்ளது நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் கடற்கரைக்கு சென்று இளைப்பாறுவதும், நடைபயிற்சி மேற்கொள்ளவதுமக பொழுதை கழித்து வருகின்றனர். குறிப்பாக இங்குள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ள இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
நாகை புதிய கடற்கரைக்கான நீலநிறச்சான்று பெறும் வகையில் கடற்கரையை மேம்படுத்துவதற்காக 32 வகையான வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அது ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், இளைஞர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர்களின் நலனுக்காக புதிய கடற்கரையில் தண்ணீர் தேங்கியுள்ள இடத்தை மேடாக்கி, மீண்டும் மழை தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் ஆகிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் நாகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
நாகை நகரில் பொழுதுபோக்கு அம்சமாக கலங்கரை விளக்கம் மற்றும் புதிய கடற்கரை மட்டுமே உள்ளது. இதில் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகை கடற்கரை சிதிலமடைந்தது. இதை தொடர்ந்து நாகை புதிய கடற்கரை மீண்டும் புதுபொலிவுடன் சீரமைக்கப்பட்டது. இதில் பாராசூட் பயிற்சி, படகு சவாரி, சிறுவர் விளையாட்டு பூங்கா, நடை பயிற்சி மேடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. இதனால் அங்கு காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கடற்கரையில் காற்று வாங்கி செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
தற்போது கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு பொதுமக்கள் அமர முடியாத நிலையில் உள்ளது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்ததொடர் மழையின் காரணமாக புதிய கடற்கரையில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ள இடத்தில் குளம் போல மழைநீர் தேங்கியுள்ளது.
உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களை சுற்றி மழைநீர் சிறிய குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால் தினந்தோரும் புதிய கடற்கரைக்கு வந்து உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நாகை தொகுதி மக்கள் கூறியதாவது:-
நாகை பகுதி மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக புதிய கடற்கரை உள்ளது நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் கடற்கரைக்கு சென்று இளைப்பாறுவதும், நடைபயிற்சி மேற்கொள்ளவதுமக பொழுதை கழித்து வருகின்றனர். குறிப்பாக இங்குள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ள இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
நாகை புதிய கடற்கரைக்கான நீலநிறச்சான்று பெறும் வகையில் கடற்கரையை மேம்படுத்துவதற்காக 32 வகையான வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அது ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், இளைஞர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர்களின் நலனுக்காக புதிய கடற்கரையில் தண்ணீர் தேங்கியுள்ள இடத்தை மேடாக்கி, மீண்டும் மழை தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித்தேர்வு பயிற்சி கல்லூரிகள் என்று 37 கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு கல்லூரி முதல்வர்களாக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித்தேர்வு பயிற்சி கல்லூரிகள் என்று 37 கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு கல்லூரி முதல்வர்களாக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித்தேர்வு பயிற்சி கல்லூரிகள் என்று 37 கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து நாகைக்கு பஸ்சில் வந்த போது மூதாட்டியிடம் 19 பவுன் நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையம் சுப்பையா முதலியார் தெருவை சேர்ந்த உச்சா தேவர் மனைவி ஜெயலட்சுமி (வயது71). இவர் கடந்த 12-ந்தேதி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு சென்றார். பின்னர் மதுரையில் இருந்து மறுநாள் 13-ந்தேதி பஸ் மூலம் நாகைக்கு வந்தார். அப்போது தனது பையில் 19 பவுன் நகைகளை வைத்திருந்தார். இந்த நிலையில் ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த 19 பவுன் நகைகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி ஜெலட்சுமியிடம் இருந்து நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து ஜெயலட்சுமி நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் படத்தின் முன்னோட்டம்.
நடிகர் சசிகுமாரின் அடுத்த படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.
மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகிறது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டிராஜா தயாரித்துள்ளார். நவம்பர் 26 ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகை:
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் 13ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 23 மீனவர்களை கைது செய்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட அவர்களை பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் இன்று மீண்டும் பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திரண்டனர்.
தாராபுரம்:
கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பூர் சிக்கண்ணாஅரசு கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திரண்டனர். பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோவை பள்ளி மாணவி தற்கொலைக்கான காரணமான ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேப்போல் - தாராபுரம் பேருந்து நிலையம் அருகே இன்று காலை கல்லூரி மாணவர்கள் ஒன்றுகூடினர். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்திய போது, கோவை பள்ளி மாணவி தூக்கிட்டு இறந்ததற்கு நீதி கேட்டு போராட வந்துள்ளோம் என கூறியதை அடுத்து போலீசார் தாராபுரம் அண்ணா சிலை அருகே சென்று ஆர்ப்பாட்டம் செய்யுமாறு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் அண்ணா சிலை முன்பு கூடி பதாகை ஏந்தி தூக்கிலிட்டு இறந்த மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். இதில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் ,
பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் பாதுகாப்புக்காக என தனி சட்டம் கொண்டு வர வேண்டும். மாணவி சாவில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தி உடனடியாக தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என மாணவர்கள் கோஷமிட்டனர்.
தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் விஜயபாஸ்கர், செல்லையா ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செம்போடை தெற்கு காடு செந்தில்குமார் (வயது 35) என்பவர் வீட்டின் பின்புறம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் புதுச்சேரி எரிசாராயத்தை கைப்பற்றி செந்தில்குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செம்போடை தெற்கு காடு செந்தில்குமார் (வயது 35) என்பவர் வீட்டின் பின்புறம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் புதுச்சேரி எரிசாராயத்தை கைப்பற்றி செந்தில்குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலைகளில் பைக்கில் வந்தவரின் செல்போனை வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த பெரியாஞ்குப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன். இவர் கடந்த 10ஆம் தேதி விண்ணமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த ஒரு மர்மநபர் வெங்கடேசனை மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் நடந்த வாகன சோதனையில் சந்தேகத்தின் பேரில் வந்த வாலிபரை மடக்கிப் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் வாணியம்பாடி பெருமாள்பட்டு சேர்ந்த பாலாஜி வயது (20) என்பதும் வெங்கடேஷிடம் செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் பாலாஜியை கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
ஆம்பூர் அடுத்த பெரியாஞ்குப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன். இவர் கடந்த 10ஆம் தேதி விண்ணமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த ஒரு மர்மநபர் வெங்கடேசனை மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் நடந்த வாகன சோதனையில் சந்தேகத்தின் பேரில் வந்த வாலிபரை மடக்கிப் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் வாணியம்பாடி பெருமாள்பட்டு சேர்ந்த பாலாஜி வயது (20) என்பதும் வெங்கடேஷிடம் செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் பாலாஜியை கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
கீழ்வேளூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சிக்கல்:
நாகை மாவட்டம் திருமருகல் அருகே தென்கரை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி ராகினி. இவர்களுடைய மகள் மீனா(வயது 28). இவருக்கும், கீழ்வேளூர் அருகே உள்ள கோகூர் வடக்குதெருவை சோ்ந்த கலியமூர்த்தி மகன் முருகவேல் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு மீனா கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவதாகவும், அவரது பெற்றோர் சமரசம் செய்து அவரை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீனா மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக அவரது கணவர் வீட்டில் இருந்து மீனாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கோகூருக்கு புறப்பட்டு வந்துள்ளனர். அப்போது மீனாவின் உடல் போர்வையால் மூடி வைக்கப்பட்டிருந்ததை கண்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீனாவின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக மீனாவின் தாயார் ராகினி கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






