search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவையில் 60 வயது முதியவரை திருமணம் செய்த 26 வயது இளம்பெண் தற்கொலை

    கோவையில் உடல்நிலை சரியில்லாததால் மனம் உடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குனியமுத்தூர்:

    கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயது முதியவர். இவர் திருமணமாகி மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இவர் கடந்த ஒன்றை மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர்.

    இந்தநிலையில் அந்த பெண் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியிருந்தார்.

    வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த அந்த பெண்ணின் 60 வயது கணவர், மதியம் வீடு திரும்பினார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் வெகுநேரமாக தட்டி பார்த்தார். கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு அந்த பெண் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

    இதுபற்றி போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×