search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    மதுரையில் இருந்து நாகைக்கு பஸ்சில் வந்த போது மூதாட்டியிடம் 19 பவுன் நகைகள் திருட்டு

    மதுரையில் இருந்து நாகைக்கு பஸ்சில் வந்த போது மூதாட்டியிடம் 19 பவுன் நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் சுப்பையா முதலியார் தெருவை சேர்ந்த உச்சா தேவர் மனைவி ஜெயலட்சுமி (வயது71). இவர் கடந்த 12-ந்தேதி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு சென்றார். பின்னர் மதுரையில் இருந்து மறுநாள் 13-ந்தேதி பஸ் மூலம் நாகைக்கு வந்தார். அப்போது தனது பையில் 19 பவுன் நகைகளை வைத்திருந்தார். இந்த நிலையில் ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த 19 பவுன் நகைகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி ஜெலட்சுமியிடம் இருந்து நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஜெயலட்சுமி நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×