என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆம்பூர் அருகே செல்போன் பறித்த வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலைகளில் பைக்கில் வந்தவரின் செல்போனை வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பெரியாஞ்குப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன். இவர் கடந்த 10ஆம் தேதி விண்ணமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த ஒரு மர்மநபர் வெங்கடேசனை மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் நடந்த வாகன சோதனையில் சந்தேகத்தின் பேரில் வந்த வாலிபரை மடக்கிப் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் வாணியம்பாடி பெருமாள்பட்டு சேர்ந்த பாலாஜி வயது (20) என்பதும் வெங்கடேஷிடம் செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் பாலாஜியை கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×