என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேதாரண்யம் அருகே விற்பனைக்காக பதுக்கிய சாராயம் பறிமுதல்- ஒருவர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செம்போடை தெற்கு காடு செந்தில்குமார் (வயது 35) என்பவர் வீட்டின் பின்புறம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் புதுச்சேரி எரிசாராயத்தை கைப்பற்றி செந்தில்குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
    Next Story
    ×