என் மலர்
நாகப்பட்டினம்
- சுமார் 10 அடி உயரத்திற்கு அலைகள் காணப்படுகிறது.
- 3000 பைபர் படகுகள் 4-வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.
நாகப்பட்டினம்:
இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது.
இதனால் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது மேலும் நேற்று நாகை துறைமுகத்தில்புயல் உருவாகக்கூடிய திடீர் காற்றுடன் கூடிய மழை உள்ள வானிலை பகுதி உருவாகியுள்ளது என்பதை குறிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாகை மாவட்டத்திலுள்ள நாகூர், அக்கரைப்பேட்டை, செருதூர், காமேஸ்வரம், கோடியக்கரை உள்ளிட்ட 25கடலோர மீனவ கிராமங்களிலும் கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படுகிறது.
சுமார் 10அடி உயரத்திற்கு அலைகள் காணப்படுகிறது ஏற்கனவே மீனவர்களுக்கு கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 700 விசைபடகுகள் 3000 பைபர் படகுகள் 4வது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
- 5 மினாராக்கள், அலங்கார வாசல் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
- வருகிற 2-ந் தேதி சந்தன கூடு ஊர்வலம்.
நாகப்பட்டினம்:
உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு 466-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று பாய்மரம் ஏற்றப்பட்ட நிலையில் நாளை (24-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
விழாவை முன்னிட்டு தர்காவில் 5 மினாராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம், மண்டபம், உப்பு கிணறு, பக்தர்கள் அமரும் கூடம் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாகூர் தர்கா விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதனை கண்டு முஸ்லிம்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 2-ந் தேதி சந்தன கூடு ஊர்வலமும், தொடர்ந்து 3-ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளதால் நாகூர் தர்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
- ஆதரவற்றவர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
- உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்றவர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்ட உணவு வழங்கும் பணியின் 1000வது நாள் நிகழ்ச்சி வேளாங்கண்ணியில் உள்ள ஆயர் சுந்தரம் மஹாலில் பேராலய பங்குத்தந்தை தலைமையில் நடைபெற்றது.
கடந்த 1000 நாட்களாக உணவு வழங்கி வரும் உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் பிராங்க்ளின் ஜெயராஜ் மற்றும் தன்னார்வலர்களுக்கும், சேவை அமைப்பினருக்கும் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர், சேவை அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க உபகரணங்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர் கண்ணையன், ரோட்டரி சங்கத் தலைவர் அனுஷா முன்னாள் அரிமா சங்க மாவட்ட ஆளுநர்.
வேதநாயகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூலியட் அற்புதராஜ், அரிமா சங்கமாவட்டத் தலைவர் ரூசோ பாட்ஷா, வரவேற்புரைகிறிஸ்துராஜ் ஆசிரியர், நன்றியுரை லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் டேவிட், நிகழ்ச்சி தொகுப்பு ஜெ.லியோ அந்துவான் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 29 மனுக்களை பெற்றார்.
- 12 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது மீதமுள்ள மனுக்கள் விரைவில் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 29 மனுக்களை பெற்றார்.
அதில் 12 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் மீதமுள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
மேலும் காவல்துறையிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன், வேணுகோபால், நாகப்பட்டினம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 24-ந்தேதி கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- ஜனவரி 2-ம்தேதி சந்தன கூடு ஊர்வலம் நடக்கிறது.
- 3-ம் தேதி சந்தனம் பூசும் நிகழ்வு நடக்கிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடை பெறுவது வழக்கம்.
அதன்படி வருகிற 24-ந்தேதி 466-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை ஆண்டவர் தர்காவில் பரம்பரை கலிபா தலைமையில் சிறப்பு துவா ஓதப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது.
அப்போது, கூடியிருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் கற்கண்டு மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 24ம் தேதி கொடியேற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 2-ம் தேதி நாகையில் இருந்து சந்தன கூடு ஊர்வலமும் 3-ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெறுகிறது.
- சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
- 11-ம் வகுப்பு மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்.
வேதாரண்யம்:
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
அதில், நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் தென்னம்புலம் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
இதனை, யாதவர் ஆலோசனை மையம் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாணவிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி திருவள்ளுவர் உருவம் பொறித்த கேடயம், திருக்குறள் புத்தகம் மற்றும் ரொக்க பரிசு வழங்கினர்.
இதில் யாதவர் ஆலோசனை மைய மாநில தலைவர் ஜம்புலிங்கம், மகளிர் பிரிவு ஜெயமீனாகுமாரி, சித்ரா, மாநில பொது செயலாளர் ராகவன், நாகை மாவட்ட அமைப்பாளர் வீரையன், மாவட்ட பொருளாளர் ராமநாதன், உறுப்பினர்கள் ராமமூர்த்தி துரை, ரவி, ஒன்றிய கவுன்சிலர் உஷாராணி, கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமரன், அஞ்சலக பணியாளர் சௌந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- எல்லைதாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு.
- பருத்தித்துறை துறைமுகத்திற்கு நாகை மீனவர்கள் 11 பேரையும் இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாகை:
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்தனர்.
பின்னர் பருத்தித்துறை துறைமுகத்திற்கு நாகை மீனவர்கள் 11 பேரையும் இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தடுப்பு கம்பி அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
- யானைகட்டி முடுக்கு பகுதியில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைப்பது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழா தொடங்குவதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ஆய்வு செய்தார். தர்கா குளத்தை சுற்றி தடுப்பு கம்பி அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
அப்போது தர்காவை சுற்றியுள்ள சாலைகளில் பேவர் பிளாக் அமைப்பது மற்றும் யானைகட்டி முடுக்கு பகுதியில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது தர்கா நிர்வாகிகள், நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில் குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர், நகராட்சி ஆணையர், நகராட்சி செயற்பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
- ஆட்டோ, ரிக்க்ஷா வாகனங்களை நடப்பில் உள்ள ஆவணங்களுடன் இயக்க வேண்டும்.
- நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.
நாகப்பட்டினம்:
நாகூர் தர்காவில் 466-வது ஆண்டு கந்தூரி விழா வருகிற 24-ந் தேதி தொடங்கி ஜனவரி 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு ஆட்டோ, ரிக்க்ஷா வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நாகூர் பகுதியில் உள்ள 150 ஆட்டோ, ரிக்க்ஷா ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு பேசும்போது:-
ஆட்டோ, ரிக்க்ஷா வாகனங்களை நடப்பில் உள்ள ஆவணங்களுடன் இயக்க வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது, வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக நபர்களை ஏற்றக்கூடாது, அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் சிறைபிடிக்கப்படும் என்றார்.
- மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
- 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நாகப்பட்டினம்:
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன.
இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி மீனவர்களும் கரைக்கு திரும்பினர்.
இதனால் இன்று நாகை, அக்கரைபேட்மாடை, வேதாரண்யம், வேளாங்கண்ணி உள்பட 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
700 விசைப்–படகுகள், 3000 பைபர் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்தனர்.
- மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் தமிழக ஆளுநர் அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்
- புதுச்சேரி மக்கள் இப்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் சர்புதீன் மரைக்காயர் இல்லத் திருமணம் நாகூரில் நடைபெற்றது.
அதில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுத்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நாராயணசாமிக்கு, ஷாநவாஸ் எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வரவேற்று பேசியதாவது:-
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதை எதிர்த்து அன்று நாராயணசாமி குரல் எழுப்பினார்.
அதையே இன்றைய முதலமைச்சர் ரங்கசாமியும் செய்து வருகிறார். ஆளுநரால் புதுச்சேரிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் பிரச்சனை தான். 20- க்கும் மேற்பட்ட மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் தமிழ்நாடு ஆளுநர் அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
இதையெல்லாம் எதிர்த்து அனைவரும் போராட வேண்டும். புதுச்சேரி மக்கள் இப்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அங்கு மாற்றம் நிகழும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் பிரமுகர்கள் நவ்ஷாத், ரபீக், விடுதலை சிறுத்தை கட்சி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வீட்டிலிருந்த ரூ. 31 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது.
- சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் கிராமத்தில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடை பெற்று வந்ததுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடை பெற்று வந்தது.
இந்நிலையில் பிரதாபரா மபுரம், பூவைத்தேடி, ராமர்மடம் கிராம மக்கள் நேற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரிடம் புகார் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பிரதாபராமபுரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு மக்களை சந்தித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பேசிய பொதுமக்கள் சாராயத்தை ஒழித்தால் நிச்சயம் திருட்டும் குறையும் என கூறினர்.
அப்போது கூடுதலாக தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாகவும் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றலாம் எனவும் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொதுமக்களிடம் தெரிவித்தார். மேலும் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்த நிலையில் பூவைத்தேடி கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வீட்டிலும் திருட்டு சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்தது.
அவரது வீட்டிலிருந்த 31 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து பொது மக்கள் நாகை - வேளாங்கண்ணி சாலையில் பூவைதேடி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே போராட்டம் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த பகுதியில் சோதனை செய்தனர். வீட்டில் திருடர்கள் பின்புறம் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் 10 சவரன் தங்க நகை கூஜாவில் இருந்ததை திருடர்கள் கவனிக்காததால் நகைகள் தப்பியது.இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






