என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, திருமணம் தொகைக்கான ஆணை வழங்கினர்.
    • தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    தரங்கம்பாடி

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய்துறை அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், சமூகநலத்துறை தாசில்தார் சுந்தரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் காந்திமதி வரவேற்றார்.

    முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள், தங்களது துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் மூலம் எவ்வாறு பயன்பெறுவது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி எடுத்து கூறினர்.

    தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர், 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 52 பயனாளிகளுக்கு இறப்பு, முதியோர் உதவி தொகை, திருமணம் தொகைக்கான ஆணை, 3 பயனாளிகளுக்கு விலையில்லா சலவை பெட்டி, 10 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு உபகரணங்கள் உள்பட 124 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மேலும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். முன்னதாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    இதில் கால்நடை மருத்துவர் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், வருவாய் ஆய்வாளர் சசிகலா, வி.ஏ.ஓ. கனேசன் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள், சுகாதாரத்துறையினர், அங்கன்வாடி ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

    • கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.ஜெ.பிரபாகரன் தலைமை வகித்தார்.
    • திருப்புன்கூரில் திராவிட மாடல் அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திருப்புன்கூரில் திராவிட மாடல் அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.ஜெ.பிரபாகரன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர்கள் இரா.முருகன், கே.சசிக்குமார்,மாவட்ட பிரதிநிதி விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் தியாக.விஜயேஸ்வரன், பேரூர் கழகச் செயலாளர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சாமிநாதன் ஆகியோர் பேசினர். தலைமை கழக பேச்சாளர் தீக்கனல் என்.செல்வம் சிறப்புறையாற்றினார்.

    • சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா கேட்டறிந்தனர்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு ஆகிய கிராமங்களில் ரூ16 கோடி மதிப்பீட்டில் 2 பேரிடர் மீட்பு மையங்கள் அமைய இருக்கும் இடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ஊரக உள்ளாட்சி துறை சார்பாக கொள்ளிடம் மற்றும் குத்தாலம் ஆகிய இரண்டு ஒன்றிய குழு தலைவர்களுக்கு தலா ரூ 12.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் வழங்குவதற்கான சாவிகளை வழங்கி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் பெற்றுக்கொண்டனர்.

    கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அனுமந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடைக்கு சென்ற பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சட்டபேரவை உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம், நிவேதா.முருகன்,சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா,வட்டாட்சியர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மஞ்சுளா,ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர்,அரசு அதிகாரிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முழு தொகையை வழங்காமல் ஏன் மண் எடுக்கிறீர்கள் என வாக்குவாதம்.
    • இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கோடாலி தெருவை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் இவரது வீட்டின் பின்புறம் தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காக பெருந்தோட்டம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் என்பவருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக மண் எடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு மண் எடுக்கும் பொழுது மண்ணிற்கான முழு தொகையை வழங்காமல் ஏன் மண் எடுக்கிறீர்கள் என்று ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    வாக்குவாத முற்றியதால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் ராஜேந்தி ரனை மண்வெட்டியால் தலையில் தாக்கியுள்ளனராம். இதில் சுயநினைவிழந்து கீழே விழுந்த ராஜேந்திரன் அசைவற்று கிடந்துள்ளார்.

    இதனை அடுத்து பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அவரது ஊழியர்கள் பின்னர் டிராக்டரை ஏற்றி விபத்து நடந்தது போல் உருவகத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

    விவசாயி ராஜேந்திரன் வெகு நேரமாக வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் வயலின் பின் பகுதிக்கு சென்ற போது தான் உடல் நசுங்கி கொடூரமாக ராஜேந்திரன் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    தகவல் இந்த திருவெண்காடு போலீசார் ராஜேந்திரனின் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர் பாஸ்கரன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவரது பணியாளர்களை கைது செய்ய வேண்டும் என ராஜேந்திரன் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பெருந்தோட்டம் கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் திரளான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    ராஜேந்திரனை அடித்து கொலை செய்துவிட்டு டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது போல் சித்தரிப்பு செய்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் மற்றும் அவரது டிராக்டர் ஓட்டுநர் பாலா ஆகிய இருவரை திருவெண்காடு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    • கடந்த 2 ஆண்டுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    • 2 புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் நகர தி.மு.க சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், பஞ்சுகுமார், நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன் வரவேற்பு பேசினார். கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்,

    சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளி கட்டிடம், புதிய நூலக கட்டிடம், உதவி கலெக்டர் அலுவலக கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதே போல் தொகுதி முழுவதும் வகுப்பறை கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், நியாய விலை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள்கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    கொள்ளிட ஆற்றுக் கரையில் வசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரே அரசு தி.மு.க அரசு தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் சீர்காழி ஒன்றிய குழு தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சுவாமிநாதன், நகர நிர்வாகிகள் பந்தல்முத்து, பாஸ்கரன், சங்கர், செல்வமுத்துக்குமார், சரவணன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக், பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் கவுதமன் நன்றி கூறினார்.

    • ரூ.6 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்து 349 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • முடிவில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை மலர் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைப்பெற்றது.

    இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார்.

    எம்.பி. இராமலிங்கம், எம்.எல்.ஏ. க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற த்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 382 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்து 349 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துனை ஆட்சியர் கண்மணி, மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.

    • 12 சிவன் கோவில்களில் இருந்து சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்தில் காட்சி தரும் விழா.
    • இரு தரப்பும் இணைந்து சட்டம்- ஒழுங்கு பிரச்சனை இன்றி விழாவை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருநாங்கூர் மதங்கீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் சுற்றியுள்ள 12 சிவபெருமான் கோவில்களில் இருந்து சிவபெருமான்கள் அம்பிகைகளுடன் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் காட்சி தரும் விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு விழா வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது.

    விழா நடத்திட நாங்கூர் கிராமத்தில் இரு தரப்பினர் அனுமதி கோரினர்.

    இதனால் விழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடும் என்பதால் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் ரஜினி தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது.

    கோவில் செயல் அலுவலர் முருகன், திருவெண்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினர் இடையே காவல்துறை முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

    அப்போது இரு தரப்பும் இணைந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் இன்றி விழாவினை நடத்திட ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    • குளத்தை சீரமைக்க ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட கோயில்பத்து 9 -வது வார்டில் தாடளான் காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள குளத்தை கலைஞர் நகர்புற

    மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூர்வாரி சீரமைக்க ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

    குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் குளத்தை சீரமைக்கும் பணி தாமதம் அடைந்து வருகிறது.

    குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • மின்வாரிய பணி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
    • குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.7.5 லட்சம் நிவாரண தொகையும் வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூர் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் அரவிந்தராஜ்(வயது22).

    இவர் மின்சார வாரியத்தில் கடந்த இரண்டரை வருடமாக ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

    இவர் சீர்காழி அருகே உள்ள பழையாறு சுனாமி நகரில் மின்வாரிய பணி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.

    இறந்த அரவிந்த்ராஜின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவரது உயிரிழப்பிற்க்கு மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

    அதில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன், சாலை மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்ற அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் ரூ.7.5 லட்சம் நிவாரண தொகையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

    அதனைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    • அம்மனுக்கு பால், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுகா, காட்டுச்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த நாணல்திடல் மாரியம்மன் கோயிலில் கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது.

    நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி அம்மனுக்கு, பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர், மஞ்சள் பொடி, திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழாவையொட்டி காருடையான்பள்ளம் வீரசோழன் ஆற்றங்கரை யிலிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் கரகம் மற்றும் காவடிகளை வானவேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் வந்து கோயிலை அடைந்தனர்.

    அப்போது கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டம் எதிரே மாரியம்மன் எழுந்தருள ஏராளமான பக்தர்கள், தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்த ருளிய அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பித்து, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது.

    இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை சேனைத் தலைவர் மகாஜன சங்க தலைவர் முனுசாமி, நாட்டாண்மை இளங்கோவன் மற்றும் விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்தனர்.

    • 500 கி.மீட்டருக்கு நீர்நிலைகளில் பல்வேறு நாட்டு மரங்களை நடவு செய்ய உள்ளோம்.
    • பொதுமக்கள் அனைவரும் நீர் நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், சந்திரப்பாடி ஊராட்சியில் தொண்டு நிறுவனம் சார்பில் கடல்நீர் உட்புகுதலை தடுத்து நிலத்தடி நீரினை நன்னீராக மாற்றம் செய்திடும் முயற்சியாக குளம் வெட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    ராமலிங்கம் எம்.பி., நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ராஜ்குமார் வரவேற்றார்.

    இதில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு குளம் வெட்டும் பணியை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டா லின், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடல்நீர் உள்ளே புகாத வகையில் கடல் முகதுவாரத்தில் தடுப்பணைகள் கட்டி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்தியாவில் இருக்கின்ற பல மாநிலங்களில் அதிகமான நீளமான கடற்கரையை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    அந்த வகையில் தமிழகத்தில் 14 கடற்கரை மாவட்டங்கள் உள்ளன.

    இந்த கடற்கரையோர மாவட்டங்களை பாதுகா ப்பதற்காக கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டருக்கு நீர்நிலைகளில் பல்வேறு நாட்டு மரங்களை நடவு செய்ய உள்ளோம்.

    நீர் நிலைகளையும், நீராதாரங்களையும் பாதுகாக்க அரசு, அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    இந்த ஊராட்சியில் விரைவில் கருவேல மரங்களை அகற்றிவிட்டு புங்க மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது இங்கு பணி செய்ய உள்ள தொண்டு நிறுவனம் நீர் நிலைகளை காப்பாற்றும் வகையில் பல்வேறு இடங்களில் குளங்களை வெட்டி உள்ளன.

    எனது சொந்த ஊரிலேயும் இந்த தொண்டு நிறுவனம் குளங்களை வெட்டி வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் நீர் நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் மீனா, மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தொண்டு நிறுவன நிர்வாகி நமல்ராகவன், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி, தாசில்தார் காந்திமதி, ஒன்றிய கவுன்சிலர் செல்வம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • உலக நன்மை வேண்டியும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும் சண்டி யாகம் நடைபெற்றது.
    • 13 வகையான பழங்களுடன் பட்டுப்புடவை, பொட்டு தாலி உள்ளிட்டவைகள் யாகத்தில் பயன்படுத்தப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் உள்ள வதான்யேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானத்தின் அருளாசியுடன் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சண்டி யாகம் நடைபெற்றது.

    இந்த யாகம் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களும் நோய் நொடி இன்றி வாழ வேண்டியும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும் கோவில் குருக்கள் பாலச்சந்தர் சிவாச்சாரியார் முதலில் கோமாதா பூஜை, 2-வது குதிரை பூஜை, 3-வது ஒட்டக பூஜை செய்தார்.

    பின்னர், செவ்வாழைப்பழம், விளாம்பழம் உள்ளிட்ட 13 வகையான பழங்களுடன் பட்டுப்புடவை, பொட்டு தாலி உள்ளிட்டவைகள் யாகத்தில் பயன்படுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து, பிரம்மச்சாரியர்கள், 9 கன்னிகா பூஜைகளும், பைரவருக்கு வடுக பூஜைகளும் நடைபெற்றது.

    இதில் நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ், வள்ளாலகரம் ஒன்றிய கவுன்சிலர் மோகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×