search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணியின் போது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- அமைச்சர் உறுதி
    X

    மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்ற அமைச்சர் மெய்யநாதன்.

    பணியின் போது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- அமைச்சர் உறுதி

    • மின்வாரிய பணி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
    • குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.7.5 லட்சம் நிவாரண தொகையும் வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூர் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் அரவிந்தராஜ்(வயது22).

    இவர் மின்சார வாரியத்தில் கடந்த இரண்டரை வருடமாக ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

    இவர் சீர்காழி அருகே உள்ள பழையாறு சுனாமி நகரில் மின்வாரிய பணி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.

    இறந்த அரவிந்த்ராஜின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவரது உயிரிழப்பிற்க்கு மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

    அதில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன், சாலை மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்ற அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் ரூ.7.5 லட்சம் நிவாரண தொகையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

    அதனைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×