என் மலர்
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி அருகே நெப்பத்தூரில் தூக்கில் தொங்கி மர்மமான முறையில் கடந்த 17-ம் தேதி இறந்த தொழிலாளி சீனிவாசன் வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே சீனிவாசன் உறவினர்கள் கிராமமக்கள், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ் தேசியப் பேரியக்கம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் சுமார் அரை மணிநேரம் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதையடுத்து சீர்காழி இன்ஸ்பெக்டர் இராமமூர்த்தி மறியலில் ஈடுப்பட்ட 25 பேரை கைது செய்தனர்.
இதேபோல் கொள்ளி டத்தில் தமிழர் உரிமை இயக்க மாவட்ட செயலாளர் முரளிதரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள், மக்கள் அதிகாரம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 35 பேரை டி.எஸ்.பி. தேன்மொழிவேல், இன்ஸபெக்டர் அமுதாராணி கைது செய்தனர்.
இதேபோல் புத்தூர் மெயின் ரோட்டில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ராஜ்குமார் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளிடத்தில் புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல் ஆனந்த செந்தில்குமார் உள்ளிட்ட 20 பேர் என மொத்தம் 103 பேரை கைது செய்தனர்.
இதேப்போல் மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் முக்கூட்டு, செம்பனார்கோவில், பொறையார் ராஜூவ்புரம் ஆகிய பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைப்பெற்றது.
மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் செம்பை ஒன்றியக்குழு உறுப்பினர் வீ.எம்சரவணன், அன்னப்பன்பேட்டை ரவி, சி.பி.ஐ சார்பில் ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை சார்பில் கனகசபை, வினோத், ராஜா, கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு உரையாற் றினர்.செம்பனார்கோவிலில் நடைப்பெற்ற மறியலுக்கு விடுதலை சிறுத்தை ஒன்றிய பொறுப்பாளர் கலைவண்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், சிபிஐ ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அதேப் போன்று ராஜூவ்புரத்தில் நடைப்பெற்ற மறியல் போராட்டத்திலும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
மேலும் ஏலச்சீட்டு நடத்தி வந்த இவர், கடந்த சில மாதங்களாக கடன் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். இவருடன் இவரது மகன் ராம்குமாரும்(29) வசித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
நேற்று இவர்களின் வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சாந்தியின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது சாந்தியும் அவரது மகன் ராம்குமாரும் வீட்டினுள் வெவ்வேறு இடத்தில் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணமாக தொங்கிய தாய் மகனின் உடல்களை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் பிரச்சினையால் தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் தனியார் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த நிம்மேலி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சீனிவாசன்(40) கடந்த 17-ம் தேதி செங்கல் சூளை வளாகத்தில் மர்மமான முறையில் சடலமாக தூக்கில் தொங்கினர். இவரது சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.
கடந்த 18ம் தேதி நடைபெற இருந்த சீனிவாசனின் உடற் கூறாய்வை உறவினர்கள் தடுத்து, உள்ளூர் மருத்துவர்களை கொண்டு உடற்கூறாய்வு செய்யக்கூடாது. பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து வீடியோ பதிவு மற்றும் வழக்குரைஞரை உள்ளே அனுமதிக்கவேண்டும் எனக்கூறி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
எனினும் இந்த கோரிக்கை சுகாதாரத்துறையினரால் ஏற்கபடாததால் சீனிவாசனின் உடற்கூறாய்வு பணி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏப்19ம் தேதியும் அதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை சீனிவாசனின் உறவினர், கிராமமக்கள் சிலர் மயிலாடுதுறை கலெக்டர் இரா.லலிதாவை சந்தித்து, உடற்கூறு ஆய்வு தொடர்பாக மனு அளித்தனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் சீனிவாசனின் சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்திட முடிவு எட்டப்பட்டது. ஆர்.டி.ஓ நாராயணன் முன்னிலையில்,அரசு தரப்பு வீடியோ பதிவு கொண்டு உடற்கூறுஆய்வு செய்யப்பட்டது.முன்னதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு கோரிக்கையை ஏற்று 3அரசு மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வை பார்வையிட்டனர். உடற்கூறு ஆய்வு தொடங்குவதற்கு முன்னர் இறந்த சீனிவாசனின் மனைவி மற்றும் உறவினர்கள் சடலத்தை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.ஆனால் உடற்கூறு ஆய்வு முடிந்தவுடன் உறவினர்கள் பிரேதத்தை வாங்க மறுத்தனர். சீனிவாசன் மர்ம சாவு தொடர்பாக கொலை முயற்சி வழக்கை,கொலை வழக்காக மாற்றி பதிவு செய்திடவேண்டும் என வலியுறுத்தினர்.உடற்கூறு ஆய்வு முடிவுகள் வந்தவுடன் தான் மேற்கண்ட முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டதால், சீனிவாசனன் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் உடல் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் கிராமமக்கள் சிலர் காவல்நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவங்களால் சீர்காழி அரசு மருத்துவமனை மற்றும் நகரில் டி.எஸ்.பி யுவபிரியா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை கிராமத்தில் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக செம்பனார்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்ற போது கருவாழக்கரை மருவத்தூரை சேர்ந்த பழனிவேல் (இவர் கருவாழக்கரை ஊராட்சி தலைவர்) தனது வீட்டு மாடியில் சூதாட்ட கிளப் நடந்தி வருவது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட கருவாழக்கரை சக்திவேல், ராஜ்குமார், பழனி, பரசலூர் தங்க மாரியப்பன், பேரளம் இக்பால், கடிச்சம்பாடி ராதா ஆகிய 6 பேரை சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.






