என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

தொழிலாளி மர்ம மரணம்: கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி பல்வேறு கட்சியினர் சாலை மறியல் - 103 பேர் கைது

சீர்காழி:
சீர்காழி அருகே நெப்பத்தூரில் தூக்கில் தொங்கி மர்மமான முறையில் கடந்த 17-ம் தேதி இறந்த தொழிலாளி சீனிவாசன் வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே சீனிவாசன் உறவினர்கள் கிராமமக்கள், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ் தேசியப் பேரியக்கம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் சுமார் அரை மணிநேரம் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதையடுத்து சீர்காழி இன்ஸ்பெக்டர் இராமமூர்த்தி மறியலில் ஈடுப்பட்ட 25 பேரை கைது செய்தனர்.
இதேபோல் கொள்ளி டத்தில் தமிழர் உரிமை இயக்க மாவட்ட செயலாளர் முரளிதரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள், மக்கள் அதிகாரம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 35 பேரை டி.எஸ்.பி. தேன்மொழிவேல், இன்ஸபெக்டர் அமுதாராணி கைது செய்தனர்.
இதேபோல் புத்தூர் மெயின் ரோட்டில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ராஜ்குமார் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளிடத்தில் புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல் ஆனந்த செந்தில்குமார் உள்ளிட்ட 20 பேர் என மொத்தம் 103 பேரை கைது செய்தனர்.
இதேப்போல் மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் முக்கூட்டு, செம்பனார்கோவில், பொறையார் ராஜூவ்புரம் ஆகிய பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைப்பெற்றது.
மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் செம்பை ஒன்றியக்குழு உறுப்பினர் வீ.எம்சரவணன், அன்னப்பன்பேட்டை ரவி, சி.பி.ஐ சார்பில் ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை சார்பில் கனகசபை, வினோத், ராஜா, கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு உரையாற் றினர்.செம்பனார்கோவிலில் நடைப்பெற்ற மறியலுக்கு விடுதலை சிறுத்தை ஒன்றிய பொறுப்பாளர் கலைவண்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், சிபிஐ ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அதேப் போன்று ராஜூவ்புரத்தில் நடைப்பெற்ற மறியல் போராட்டத்திலும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
