என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சீர்காழி அரசு மருத்துவமனை
நீங்கள் தேடியது "சீர்காழி அரசு மருத்துவமனை"
சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் அல்லது மருத்துவர் செய்யவேண்டிய மருத்துவ உதவியை துப்புரவு பணியாளர் செய்யும் வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. #SirkazhiGovtHospital
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாகவும், 200-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வருடத்திற்கு 1500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி சீர்காழி அரசு மருத்துவமனையில் ஆண்கள் வார்டில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளிக்கு மருத்துவமனையில் பெண் துப்புரவு பணியாளர் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. அந்த நோயாளிக்கு பெண் துப்புரவு பணியாளர், குளுக்கோஸ் பாட்டில் உடலில் ஏற்றுவதற்காக நரம்பு ஊசியை அவரே செலுத்தி குளுக்கோஸ் பாட்டில் செலுத்துவது தெரிகிறது. இந்த காட்சியை நோயாளியை காண வந்த நபர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
செவிலியர் அல்லது மருத்துவர் செய்யவேண்டிய மருத்துவ உதவியை துப்புரவு பணியாளர் செய்யும் வீடியோ காட்சி தற்போது வைரலாக சீர்காழி பகுதியில் பரவி வருகிறது.
இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
சம்பவத்தன்று நோயாளிக்கு டிரிப்ஸ் முடிந்து ரத்தம் வெளியேற பார்த்ததாகவும், அப்போது நோயாளியுடன் வந்த உறவினர்கள் கூறியதன் பேரில் அவசர உதவியாக துப்புரவு பணியாளர் டிரிப்ஸ் ஊசியை நீக்கி விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார். #SirkazhiGovtHospital
நாகை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாகவும், 200-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வருடத்திற்கு 1500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி சீர்காழி அரசு மருத்துவமனையில் ஆண்கள் வார்டில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளிக்கு மருத்துவமனையில் பெண் துப்புரவு பணியாளர் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. அந்த நோயாளிக்கு பெண் துப்புரவு பணியாளர், குளுக்கோஸ் பாட்டில் உடலில் ஏற்றுவதற்காக நரம்பு ஊசியை அவரே செலுத்தி குளுக்கோஸ் பாட்டில் செலுத்துவது தெரிகிறது. இந்த காட்சியை நோயாளியை காண வந்த நபர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
செவிலியர் அல்லது மருத்துவர் செய்யவேண்டிய மருத்துவ உதவியை துப்புரவு பணியாளர் செய்யும் வீடியோ காட்சி தற்போது வைரலாக சீர்காழி பகுதியில் பரவி வருகிறது.
இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
சம்பவத்தன்று நோயாளிக்கு டிரிப்ஸ் முடிந்து ரத்தம் வெளியேற பார்த்ததாகவும், அப்போது நோயாளியுடன் வந்த உறவினர்கள் கூறியதன் பேரில் அவசர உதவியாக துப்புரவு பணியாளர் டிரிப்ஸ் ஊசியை நீக்கி விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார். #SirkazhiGovtHospital
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X