என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை அடைக்கும் பணி நடைபெற்றது.
    • சாலையை சீராக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை கிராமத்துக்கு செல்லும் சாலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிராமத்தை சூழ்ந்து சாலையையும் அரித்து துண்டித்துவிட்டது.

    மேலும் சாலையில் 1 கி.மீ. தூரத்திற்கு ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

    இதனையறிந்த பூம்புகார் எம்.எல்.ஏ.வும், தி.மு.க மாவட்ட செயலாளருமான நிவேதா.முருகன் நாதல்படுகை கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சேதமடைந்து துண்டிக்கப்–பட்ட சாலை மேம்படுத்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து சாலையை தற்காலிகமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து ஜே.சி.பி எந்திரம் கொண்டு வரப்பட்டு, ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகள் எடுத்து வரப்பட்டு சாலையின் நடுவில் போட்டு சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை அடைக்கும் பணி நடைபெற்றது.

    கிராமத்துக்கு செல்லும் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டு விட்டதால் உடனடியாக தற்காலிகமாக சாலையை சீராக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    இது குறித்து நிவேதா.முருகன் எம்.எல்.ஏ. கூறும்போது:-

    நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு கிராமங்களுக்கு செல்லும் சாலை தண்ணீரில் அரித்துச் செல்லப்பட்டு விட்டதால் சாலையை தற்காலிகமாக மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பின்னர் அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று நிரந்தரமாக சாலை மேம்படுத்தப்படும் என்றார்.

    அப்போது ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், பி. டி. ஓ. அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன், பூரணச் சந்திரன், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்ல சேது ரவிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கென்னடி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • திருப்பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
    • கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை அமையவுள்ள இடைத்தை பார்வையிட்டார்.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுர ஆதினத்திற்கு உட்பட்ட சட்டைநாத சுவாமி தேவதானத்தை சேர்ந்த குமரக்கோவில் பிடாரிவடக்கு வீதியில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1986ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் முன்னிலையில் நடைபெ ற்றது.

    அதன்பிறகு இக்கோ யிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதினம் 27-வது குருமகாசந்நிதானம் ஏற்பாட்டின்படி 36 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    இதனிடையே திருப்ப ணிகளை தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கோயில் விமானகலச பணிகள், மூலவர் சந்நிதி பணிகள், வெளிமண்டபம் பணிகள், கருங்கற்கள் பிரகார பதிப்பு பணிகள், முகபு மண்டபம் திருப்பணிகள் ஆகியவற்றையும், வர்ணபூச்சு பணிகளையும் தருமபுரம் ஆதீனம் பார்வையிட்டார்.

    கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை அமையவுள்ள இடைத்தையும் பார்வை யிட்டார்.

    அப்போது சட்டைநாதர் கோயில் கணக்கர் செந்தில், தமிழக கோயில் சொத்து பாதுகாப்பு மீட்புக் குழு அமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் பந்தல்.முத்து, தி.மு.க. நிர்வாகி பாபு, ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • மருத்துவ கழிவுகள், டயர்கள் போன்றவைகள் அள்ளப்படாமல் பல மாதங்களாக கொட்டப்பட்டு கிடக்கிறது.
    • தேங்காய் சிரட்டை, டயர்களில் மழைநீர் தேங்கி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோபாலசமுத்திரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள அம்மா நகரில் குடியிருப்புகள் அருகே

    குப்பைகள் கொட்டப்பட்டு பல மாதங்களாக அள்ளப்படாமல் கிடந்து வருகிறது.

    சாலை ஓரத்தில் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு குப்பைகள், அழுகிய காய்கறிகள், மருத்துவக் கழிவுகள், பழைய துணிமணிகள், டயர்கள் போன்றவைகள் அள்ளப்படாமல் பல மாதங்களாக கொட்டப்பட்டு கிடக்கிறது.

    மேலும் இறைச்சி கழிவுகள், சாலையில் அடிபட்டு இறந்த தெரு நாய், பூனைகள் ஆகியவையும் அவ்வபோது குப்பைகளில் வீசப்பட்டு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளின் கிடக்கும் தேங்காய் சிரட் டை, டயர்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    பல மாதங்களாக அள்ளப்படாமல் உள்ள குப்பைகள் அவ்வப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் எரித்து வருவதால் புகைமூட்டத்தாலும் குடியி ருப்பு வாசிகள் வேதனை அடைந்திருக்கின்றனர்.

    ஆகையால் குப்பைகளை முழுமையாக அகற்றி தூய்மைப்படுத்தி அந்த இடத்திற்கு குப்பை தொட்டி வைத்து சீர் செய்ய வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தனிசன்னதியில் செல்வ முத்துக்குமரர், செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் அருள்பாலிக்கின்றனர்.
    • சூரசம்ஹார விழாவின்போது முருகப்பெருமான் சிவபெருமானிடம் வேல்வாங்கி சம்ஹாரத்திற்கு புறப்படுவது ஐதீகம்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வை த்தீஸ்வ ரன்கோ யிலில் தருமபுரம்ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்திய நாதசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் தனிசன்னதியில் செல்வ முத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

    இங்கு நடைபெறும் சூரச ம்ஹார விழாவின்போது முருகப்பெருமான் சிவபெரு மானிடம் வேல்வாங்கி சம்ஹாரத்திற்கு புறப்படுவது ஐதீகம். இதனிடையே செல்வ முத்துக்குமாரசுவாமிக்கு கந்த சஷ்டி விழா சிறப்பு ஹோமங்களுடன் தொடங்கியது.

    முன்ன தாக கிருத்திகை மண்ட பம் எழுந்தருளியவள்ளி, தெய்வானைஉடனாகிய செல்வ முத்துக்குமா ரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கா ரம் செய்து மகாதீபா ராதனை காட்டப்பட்டது.

    இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமா ச்சாரிய சுவாமிகள்பங்கேற்று தரிசனம் செய்தார்தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் தருமபுரம் ஆதீனம் அடிபிரதட்சணம் செய்து வழிப்பட்டார்.

    இதில் கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிச னம் செய்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காவிரியில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
    • சாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். இதில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர்.

    ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். அதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாட ல்பெற்ற சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி நடைபெருவது வழக்கம்.

    நேற்று ஐப்பசி அமாவாசையைமுன்னிட்டு காவிரி வடக்குதிசையில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீவதா ன்யேஸ்வரர் கோயில் இருந்து கங்கை அம்மன் சமேத மேதாதட்சி ணாமூர்த்தி சுவாமி, மற்றும் விஸ்வநாதர் கோவில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாரப்பர் கோயில் சுவாமி அம்பாளு டன் காவிரி தென்கரையிலும் 2 கரைகளிலும் எழுந்தரு ளினர்.

    பின்னர் அஸ்திரதே வருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காவிரியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இரண்டு கரைகளிலும் எழுந்தருளிய சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் பாலச்சந்திர சிவாச்சாரியார், கண்காணிப்பாளர் அகோரம், ஆடிட்டர் குருசம்பத், மாயூரநாதர் பெரிய கோயில் கண்காணி ப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கனேசன், கணக்காளர் வெங்கட்ராமன், பக்த ர்கள் என திரளாக கலந்து க்கொன்டனர்.

    • 6-வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்.
    • திட்டு உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை:

    கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து 6-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கடந்த இரண்டு நாட்கள் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் தற்போது அணைக்கரையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிகரித்து வருவதால் நேற்று மாலையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களான மேலவாடி, பாலுரான் படுகை, கொன்னக்காட்டு படுகை, நாதல்படுகை, முதலை மேடுதிட்டு, வெள்ளமணல், கோரை திட்டு உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தங்கள் வீடுகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    தொடர்ந்து கொள்ளிடம் ஆற்று தண்ணீர் கிராமங்களை சூழ்ந்து வருவதால் அரசு முகாமிற்கு செல்லும் நிலையில் அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர்.

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக அளவில் தண்ணீர் சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் கலந்து வருகிறது.

    கடல் சீற்றம் காரணமாக கடந்த 10 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பழையாறு துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    • மயிலாடுதுறையை சுற்றி முக்கிய வழிபாட்டுத்தலங்கள் உள்ளன.
    • மத்திய மந்திரி முருகன் கோரிக்கையை ஏற்று ரெயில்வே மந்திரி நடவடிக்கை

    பயணிகள் வசதிக்காக மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடைகள் அமைக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு இணை மந்திரி முருகன் ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அதில்,மயிலாடுதுறையை சுற்றி கும்பகோணம், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. குறிப்பாக மாயுராணந்த சுவாமி கோவில், ஸ்ரீ வாதனேஷ்வர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம், சூரியனார் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், ஆலங்குடி போன்ற வழிபாட்டுத் தலங்கள் இருப்பதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான யாத்ரிகர்கள், பயணிகள் நாள்தோறும் ரெயில்கள் மூலம் மயிலாடுதுறை வழியாக இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    குறிப்பாக பெண்கள், முதியவர்கள் பலர் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடைகள் இரண்டு அமைக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் மந்திரி முருகன் வலியுறுத்தியிருந்தார்.

    அந்தக் கடிதத்திற்கு பதிலளித்துள்ள ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ண்வ், தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இரண்டு எஸ்கலேட்டர்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு, வாடி ஆகிய கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது.
    • கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தில் உள்ள கதவணை வழியே தண்ணீர் உள்ள விலை நிலங்களில் புகுந்துள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள உபரிநீர் வெள்ளத்தால், திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு, வாடி ஆகிய கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது.

    இதனால் திட்டுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை கிராமத்தில் உள்ள கதவணை வழியே தண்ணீர் வெளியேறி அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களில் புகுந்துள்ளது.

    இதனை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், நாதல் படுகை மற்றும் முதலைமேடுதிட்டு கிராம பகுதிகளில் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் 2 புயல் வெள்ள பாதுகாப்பு மைய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுவருகிறது.

    கொள்ளிடம் கரையோரப் பகுதியில் தண்ணீரால் சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட கலெக்டர் மற்றும் வேளாண் துறை மூலம் கணக்கீடு செய்யப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    தொடர்ந்து கொள்ளிடம், ஆச்சாள்புரம், முதலைமேடுதிட்டு, அளக்குடி, காட்டூர், மகேந்திரபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் மெய்யனாதன் ஆய்வு செய்தார்.

    மாவட்ட கலெக்டர் லலிதா, சீர்காழி ஆர்.டி.ஓ அர்ச்சனா, எம் எல் ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா.முருகன், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், உரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பிடிஓ அருள்மொழி மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் கடந்தாண்டு தொடர் மழையால் பாதிக்கப்பட்டது.
    • பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் கடந்தாண்டு தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கம் சீர்காழி ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார்.

    கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், சீர்காழி ஒன்றிய தலைவர் சி. கலியமூர்த்தி, கொள்ளிடம் ஒன்றிய தலைவர் கே கலியமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரராஜ் வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் சிவராமன், ஏ ஐ டி யூ சி மாவட்ட செயலாளர் ராமன் ஆகியோர் கடந்த 2021- 2022 பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து வகைகளுக்கும் உரிய பயிர் காப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நீதி சோழன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஜெய சக்திவேல், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பிரபாகரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் வித்யா தேவி, கட்சி நிர்வாகிகள் பாஸ்கரன், ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • நகராட்சி அலுவலர் ஒருவர் வார்டு பகுதி சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் கொண்ட குழு அமைத்தது.
    • 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை நகர மன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் 24 வார்டுகளில் பகுதி சபா குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார்.

    நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர்கான், நகர அமைப்பு ஆய்வாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், கணக்கர் ராஜ கணேஷ் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் ஒரு வார்டுக்கு அந்தப் பகுதியில் உள்ள கவுன்சிலர் தலைமையில் நகராட்சி அலுவலர் ஒருவர் வார்டு பகுதி சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் கொண்ட குழு அமைத்து 3 மாதத்திற்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை அறிந்து நகர மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • தொடர்ந்து கடல் உள்வாங்காமல் இருந்தால் மேலும் பல கிராமங்கள் பாதிக்கப்படும்
    • குடியிருப்புகளில் தண்ணீர் புகுவதை தடுக்க பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை கட்ட வேண்டும்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஆற்றில் ஐந்தாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் படுகை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடி உபரி வெள்ள நீர் சீற்றம் காரணமாக கடலில் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வரும் நீர் பக்கிங்காம் கால்வாய் வழியே வந்து பழையாறு சுனாமி குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து வருகிறது.

    பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்ததால் 500க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    தொடர்ந்து கடல் உள்வாங்காமல் இருந்தால் மேலும் பல கிராமங்கள் பாதிக்கப்படும் ஆபத்து எழுந்துள்ளது. கடல் உள்வாங்காத காரணத்தால் வெள்ள நீர்மட்டம் மேலும் உயர்ந்து பக்கிங்காம் கால்வாயில் புகும்போது, பக்கிம்காம் கால்வாய்  கரை மூழ்கி பழையாறு சுனாமி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் வேதனையில் இருந்து வருகின்றனர்.

    எனவே சுனாமி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இன்னிலையில் வெள்ளம் சூழ்ந்த பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதிகளை கலெக்டர் லலிதா நேரில் சென்று பார்வையிட்டார்.

    தொடர்ந்து அவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சுற்றி தண்ணீர் சூழ்ந்த பகுதியையும், மக்களுக்கு உணவு சமைக்கப்படும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், கீழ் காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பி டி ஓ அருள்மொழி, விஏஓ பவளச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் கிராம மக்கள் உடன் இருந்தனர்.

    • தீ விபத்துக்குள்ளான எலக்ட்ரானிக் மோட்டார் சைக்கிளை இழுத்து சென்று சாலையில் போட்டனர்.
    • இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் தனியார் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஷோரூமில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் திடீரென தானாக எரிய தொடங்கியது.

    இதைக் கண்டு அதிர்ச்சடைந்த பணியாளர்கள் சுதாரித்துக் கொண்டு தீ விபத்துக்கு உள்ளான எலக்ட்ரானிக் மோட்டார் சைக்கிளை ஸ்டோர் ரூமில் இருந்து இழுத்துச் சென்று சாலையில் போட்டனர்.

    தொடர்ந்து மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிய தொடங்கியது இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தார்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர்.

    இதில் மோட்டார் சைக்கிள் எரிந்து முற்றிலும் நாசமானது இச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    ×