என் மலர்tooltip icon

    மதுரை

    • பொதுமக்கள், கலைஞர் நூலகத்திற்கு சுற்றுலா தலம் செல்வது போல் இரவிலும் படையெடுத்தனர்.
    • குழந்தைகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    மதுரை

    மதுரை புதுநத்தம் சாலை–யில் ரூ.216 கோடி மதிப்பீட் டில், 8 தளங்கள், நவீன வசதிகளுடன் கூடிய கலை–ஞர் நூற்றாண்டு நூலகம் உலகம் தரம் வாய்ந்த அள–வில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடைபெறு–கிறது.

    இந்நிலையில் பிரமாண்ட–மாக கட்டப்பட்டுள்ள கலை–ஞர் நூலக திறப்பு விழாவை முன்னிட்டு நூலகத்தை சுற் றிலும் லேசர் ஒளிரும் விளக்குகளாலும், நூலகத் தில் சுற்றுச்சுவர் தொடங்கி நூலகத்தில் சுற்று வட்டார பகுதி முழுவதும் வண்ண, வண்ண அலங்கார விளக்கு–களால் அலங்கரிக்கப்பட்டுள் ளது.

    இதனால் இரவில் மின் னொளியில் ஜொலித்த தென்னகத்தின் புத்தக களஞ்சியமாக மாறியுள்ள கலைஞர் நூற்றாண்டு நூல–கத்தின் வெளிப்புறத்தை கண்டு ரசிக்க ஏராளமான பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் இரவிலும் சுற்றுலா தலங்களுக்க செல் வதுபோல் படையெடுத்து வந்தனர். ஒவ்வொருவரும் மின்னொளியில் ஜொலித்த கலைஞர் நூலகத்தின் முன் பாக குழந்தைகள், குடும்பத் தினருடன் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

    இன்று மாலை திறக்கப்ப–டவுள்ள நிலையில் குழந்தை–களுக்கான பிரத்யேக நூலக பிரிவு உள்ளே வாகனங்க–ளுடன், விமானத்தில் அமர்ந்து படிப்பது போன் றும், இயற்கை சூழலி்ல் படிப்பது போன்ற அமைப்பு–களும் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியுடன் உரை–யாற்றுவது போன்ற தொழில் நுட்பத்தில் உரு–வாக்கப்பட்ட மெய்நிகர் அறையும் உள்ளது.

    அதனை காண்பதற்காக–வும், கலைஞர் நூலகத்தில் உள்ள லட்சக்கணக்கான நூல்களை பார்க்கவும், படிக்கவும் ஆர்வத்தோடு மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்ப்போடு காத்தி–ருக்கி–றார்கள்.

    • முதல்-அமைச்சர் வருகையால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டது.
    • இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    மதுரை

    மதுரை புதுநத்தம் சாலை–யில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா இன்று மாலை கோலாகலமாக நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலகத்தை திறந்து வைக்கி–றார். தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் நடை–பெறும் விழாவில் கலந்து–கொண்டு நலத்திட்ட உதவிக–ளையும் வழங்குகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை அவர் விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையம் முதல் ஐராவதநல்லூர் வரை தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயி–ரக்கணக்கானோர் அணி–வகுத்து நின்று வழி நெடுகி–லும் முதல்- அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்த–னர்.

    மாநகரின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. மேலும் ஆங்காங்கே சிறிய அளவி–லான மேடை அமைத்து அங்கு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தெப்பக்குளத்தில் இருந்து அரசு விருந்தினர் மாளிகை வரை மாநகர தி.மு.க.வினர் முதல்-அமைச்சரை உற்சா–கமாக வரவேற்றனர்.

    அரசு சுற்றுலா மாளிகை–யில் மதிய உணவை முடித்து விட்டு மாலை 4.30 மணி அளவில் கலைஞர் நூலக திறப்பு விழாவுக்கு செல்கி–றார். பின்னர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கி–றார்.

    மதுரை நகரில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்-அமைச்சரை வர–வேற்பதற்காக கொடிகள், தோரணங்கள் கட்டப்பட் டுள்ளன. முதல்-அமைச்ச–ரின் வரவேற்பு பணிகளை மேற்பார்வை செய்வதற்காக ஏராளமான புதிய நிர்வாகி–கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக சுமார் 80 ஆயி–ரம் பேர் முதல்-அமைச் சரை வரவேற்பதற்காக திரண்ட–னர்.

    மேலும் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுயஉதவி குழுவினர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வரவேற்புக்கான ஏற்பா–டுகளை மாவட்ட செயலா–ளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ. மற்றும் மணிமாறன் செய்துள்ளனர்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
    • 1,500 போலீசார் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை

    கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், மது–ரையில் கலைஞர் நினை–வைப் போற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் பிர–மாண்ட நூலகம் அமைக்கப் படும் என்று அறி–வித்தார்.

    நூலகம் அமைப்பதற்காக மதுரை புது நத்தம் சாலை–யில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2.13 லட்சம் சதுர அடி பரப்ப–ளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப் பாக நடைபெற்று வந்தன.

    முன்னதாக 2022 ஜனவரி 11-ந்தேதி நூலகம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின் சென்னை–யில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்தநிலையில் அனைத்தும் டிஜிட்டல் மயத்துடன் கூடிய பணிக–ளும் முடி–வுற்று கலை–ஞர் நூலகம் புதுப்பொ–லிவு–டன் அழகுற காட்சி அளிக்கிறது.

    நூலக கட்டி–டத்தின் முற் பகுதியில் அலங்கார விளக் குகள், பூஞ்செடி–கள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயி–லில் கலைஞ–ரின் பொன் மொ–ழியான புத்தகத்தில் உலகை படிப்போம், உல–கத்தை புத்தக–மாய் படிப் போம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள் ளது.

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பயன்பெ–றும் வகையில் சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட் டுள்ள கலைஞர் நூலகம் மதுரையின் மற்றொரு அடையாளமாக திகழும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ரூ.206 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட் டுள்ள இந்த நூலகத்தில் அனைத்து தரப்பி–னருக்கும் பயனளிக்கும் வகையில் 4 லட்சத்து 30 ஆயிரம் புத்த–கங்கள் உள்ளன.

    குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள், போட் டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இளம் பெண் கள் என பலரும் இந்த நூல–கத்தின் மூலம் பயன்பெற–லாம். நூல–கம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப் பட்டுள்ளது. லிப்ட் வசதியு–டன் பிரம்மாண்டமாக கட் டப்பட்டுள்ளது நூலகம். குழந்தைகளுக்கான பொழுது–போக்கு அம்சங்க–ளும் இந்த நூலகத்தில் உள்ளன.

    மொத்தமுள்ள 8 தளங்க–ளில் முதல் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் முன் னாள் முதல்வர் கரு–ணாநிதி எழுதிய நூல்கள், குழந்தை–கள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளுக்கான நூலகப் பிரிவும் உள்ளது.

    இரண்டாம் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் தமிழ் நூல்கள் பிரிவும் உள்ளது. மூன்றாம் தளத்தில் 2,810 சதுர அடி பரப்பில் ஆங்கில நூல்கள் பிரிவும், ஆராய்ச்சிக்கட்டு–ரைகளும் நான்காம் தளத் தில் 1,990 சதுர அடி பரப் பில் அமரும் வசதியுடன் கூடிய ஆங்கில நூல் பிரி–வும், போட்டித் தேர்வுக–ளுக்கு தேவையான புத்த–கங்களும் வைக்கப்பட் டுள்ளன.

    ஐந்தாம் தளத்தில் 1,990 சதுர அடியில் மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல் பிரி–வும், ஆறாம் தளத்தில் 1,990 சதுர அடியில் கூட்ட அரங்கு, நூலகத்துக்கான ஸ்டூடியோ, மின்னணு உரு–வாக்கப்பிரிவு, நுண்ப–டச் சுருள், நுண்பட நூலக நிர்வாகப் பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு எனப் பல பிரிவுகள், நிர்வாக அலுவ–லகம் உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று (சனிக்கி–ழமை) மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்.

    விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா–மொழி வரவேற்று பேசுகி–றார். அமைச்சர்கள்

    எ.வ.–வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். சிறப்பு விருந்தினர்களாக எச்.சி.எல். குழும நிறுவனர் ஷிவ் நாடார், குழும தலைவர் ரோஷினி நாடார், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பொது நூலகங்கள் இயக்குநர் இளம்பகவத், கலெக்டர் சங்கீதா, சு.வெங்கடேசன் எம்.பி., கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நன்றி கூறுகிறார். விழாவில் மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்லாயிரக்க ணக்கா–னோர் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை ஆயுதப்படை மைதானத்தில் விழா நிகழ்ச் சிக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. விழா ேமடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார். விழா–வில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின், நாளை பகல் 11.30 மணிக்கு சென் னை–யில் இருந்து மது–ரைக்கு விமானத்தில் வந்தார்.

    விமான நிலை–யத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிேவல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரிய–கருப்பன், ராஜகண்ணப்பன், மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி மற்றும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அங்கிருந்து அழகர் கோவில் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளி–கைக்கு செல்லும் வழியில் முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலி–னுக்கு தி.மு.க.–வினர் வழிநெ–டுக உற்சாக வர–வேற்பு அளித்த–னர்.

    முன்னதாக அரசு சுற்றுலா மாளிகை–யில் மதிய உணவு சாப்பிடும் மு.க.ஸ்டா–லின், மாலை 5 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் பங்கேற் கிறார். நிகழ்ச்சிகளை முடித் துக்கொண்டு இரவு விமா னத்தில் சென்னை திரும்பு கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின் வருகையை–யொட்டி மதுரை விழாக்கோ–லம் பூண்டுள்ளது. 1,500 போலீசார் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டுள்ளனர்.

    • தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது
    • இந்த தகவலை நகராட்சி தலைவர் சகுந்தலா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம் பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் பல கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    ரூ.3 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை, ரூ.1.கோடியே 50 லட்சம் மதிப்பில் வார்டுகளில் போர்வெல் அமைத்தல், ரூ.4 கோடி மதிப்பில் தார்சாலை, ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள் அமைத்தல், ரூ.10 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள், சலவை தொழிலாளர்களின் வசதிக்காக 10 லட்சம் மதிப்பில் நீர்நிலை தொட்டி அமைத்தல், உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் ரூ. 8 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதி மக்கள் பொழுதுபோக்கிற்காக ரூ.30 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப் பட்டுள்ளது. உசிலம்பட்டி நகராட்சிக்கு ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கி தந்த முதல்வரின் நடவடிக்கை யால் உசிலம்பட்டி பகுதி புதிய உயரத்தை தொட்டுள்ளதாக நகராட்சி தலைவர் சகுந்தலா தெரிவித்தார்.

    • மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
    • போலீஸ் ரிசர்வ் லைன் மைதானத்தில், கலைஞர் நூலக திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    மதுரை:

    மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.206 கோடியில் 8 தளங்களுடன் பிரமாண்டமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

    உலகில் உள்ள பெரிய நூலகங்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் கட்டி எழுப்பப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந் தேதி (அதாவது இ்ன்று) திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதற்காக இன்று பகல் 11.30 மணி அளவில் விமானத்தில் மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் அவர் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மாலையில் அங்கிருந்து புறப்பட்டுச்செல்லும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். அதன்பின் போலீஸ் ரிசர்வ் லைன் மைதானத்தில், கலைஞர் நூலக திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளன.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல். நிறுவன தலைவர் ரோஷிணி நாடார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன் நன்றி கூறுகிறார். விழாவில் 3 ஆயிரத்து 500 கல்லூரி மாணவர்களும், 6 ஆயிரத்து 500 பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • மதுரைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
    • ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமாரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆணையர் அலுவலகத்தில் சந்தித்து தனது தொகுதியில் உள்ள குறைகள் அடங்கிய கோரிக்கை மனுவை வழங்கி னார். பின்னர் ராஜன் செல் லப்பா எம்.எல்.ஏ கூறியதா வது:-

    திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, பாதாள சாக்கடை பிரச்சினை, சாலை பிரச்சினை ஆகிய வற்றை வார்டு வாரியாக மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்திருக்கிறேன். பாதாள சாக்கடை திட்டத்தை விரைவு படுத்த வும் வலியுறுத்தி உள்ளேன்.இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநக ராட்சி ஆணையர் உறுதி அளித்தார்.

    மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ெரயில்வே கேட் அடைத்திருப்பதால் பொது மக்கள், மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு வைகை கரை திட்டம், சாலைகள் என பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி னார். ஆனால் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நாளை தனது தந்தை பெயரில் கட்டப்பட்ட நூல கத்தை அவர் திறக்கிறார். நூலகம் என்ற அடிப்படையில் நாங்கள் அதனை வரவேற்கிறோம் முதலில் 80 கோடிக்கு நிதி நிலையின் போது ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து 114 கோடி என்ற அளவில் தெரிவிக்கப்பட்டு இப்போது 210 கோடி என அறி விக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலாக மதுரை மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம். மகளிர் உரிமைத்தொகை ஒன்றை அறிவித்துவிட்டு அதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வழங்க வேண்டும். இந்த கட்டுப்பாடு களை புகுத்தினால் அரசு கூறியது போல் ஒரு கோடி மகளிர்க்கு வழங்க இயலாது.

    மதுரை மாநகராட்சிக்கு நிதி பற்றாக்குறை இருந்தால் மத்திய, மாநில அரசுகளிடம் நிதியை கேட்டுப் பெற வேண்டும். நாங்கள் இருந்த காலத்திலும் மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை இருந்தது. பல்வேறு நிதிகளை திரட்டி நிர்வாக திறனுடன் நிர்வா கத்தை செயல் படுத்தினோம். தற்போது இருக்கும் மேயர் மீது குற்றம்சாட்டவில்லை நிதியை பெற முயல வேண்டுெமன கூறுகிறேன்.நாளை மதுரை வரும் மு.க. ஸ்டாலின் மதுரைக்கான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடார் உறவின்முறை மகளிர் பள்ளியில் நாளை காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக–ளுக்கு பள்ளி தலைவர் எஸ்.எம்.பிச்சை பாண்டியன் பரிசுகள் வழங்கி பேசுகிறார்.

    மதுரை

    மதுரை கீரைத்துறை மேலதோப்புத்தெருவில் அமைந்துள்ள மதுரை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பெருந்த–லைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா நாளை கல்வி வளர்ச்சி நாளாக நடைபெறுகிறது.

    பள்ளியின் செல்வி விளையாட்டு மைதானத்தில் நடை பெறும் விழாவில் மதுரை பட்டிமன்ற தென்றல் மதுரை ஜோதிகாராஜன் கலந்துகொண்டு மக்கள் மனம் கவர்ந்த நாயகன் என்ற தலைப்பில் சிறப்புரை–யாற்றுகிறார்.

    மேலும் விழாவை–யொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக–ளுக்கு பள்ளி தலைவர் எஸ்.எம்.பிச்சை பாண்டியன் பரிசுகள் வழங்கி பேசுகிறார்.

    விழாவுக்கான ஏற்பாடு–களை தலைவர் எஸ்.எம்.பிச்சை பாண்டியன், துணைத் தலைவர்கள் ஜெ.ஜெயசிங், ஏ.ராஜா ராம், செயலாளர் வி.என்.சிவக் குமார், பொருளாளர் ஜெ.தாமரை செல்வன், தலைமை யாசிரியை டி.சரஸ் வதி ஆகியோர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    • முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றப்படும்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    மதுரை

    மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல கத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதை யொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி நாளை விழா நடைபெறும் நத்தம் சாலை யில் ஐ.ஓ.சி. ரவுண்டானா சந்திப்பு முதல் ஆத்திகுளம் சந்திப்பு வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகின்றது. இப்பகுதிக்கு ஐ.ஓ.சி. ரவுண்டானா, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு, தாமைரைத்தொட்டி, புதூர், மூன்றுமாவடி வழியாக ஐயர்பங்களா சந்திப்பு சென்று தங்கள் பகுதிக்கு செல்லலாம். அதுபோல நத்தம் ரோட்டிலிருந்து நகர் நோக்கி வரும் வாகனங்கள் மூன்று மாவடி, புதூர் வழியாக நகரின் உட்பகுதிக்கு செல்லலாம். காலை 9 மணி முதல் கப்பலூர் சந்திப்பி லிருந்து ரிங் ரோடு வழியாக நகர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கப்பலூர், தோப்பூர் வழியாக திண்டுக்கல் சாலைக்கு செல்லவேண்டும். காலை 9 மணி முதல் கப்பலூர் சந்திப்பிலிருந்து ரிங் ரோடு வழியாக நகர் நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம் வழியாக மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கு செல்ல வேண்டும்.

    அருப்புக்கோட்டை, தூத்துக்குடி பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் வளையங்குளம், சாம நத்தம், பொட்ட பாளையம் மற்றும் கீழடி வழியாக ராமேசுவரம் சாலையினை மாட்டுத் தாவணி செல்லவேண்டும்.

    தூத்துக்குடி, அருப்புக் கோட்டை சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு கனரக வாகனங்களும் கப்பலூர் செல்லவேண்டும். சென்று திண்டுக்கல் சாலை வழியாக செல்லவேண்டும்.

    எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் வாகன கொள்ளப் படுகிறது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • கண்காணிப்பு காமிராக்கள் உதவியுடன் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் முகமதுஷாபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் முத்துபால்பாண்டி(வயது 39). இவர் மதுரையில் கண்கண்ணாடி கடை வைத்துள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி.

    நேற்று முத்துபால் பாண்டிக்கு பிறந்தநாள் என்பதால் மனைவி புவனேஸ்வரி, தாய் கமலம் மற்றும் குடும்பத்தினருடன் திருமங்கலத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்று கொண் டாட முத்துபால்பாண்டி முடிவு செய்தார். இதற்காக இரவு 9.30 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகைகளை திருடி சென்ற னர். நகைபெட்டிகளை அருகேயுள்ள முட்புதர்களில் வீசி சென்றனர்.

    பிறந்தநாள் கொண்டாடத்தினை முடித்துவிட்டு இரவு 10.45 மணிக்கு முத்துபால்பாண்டி குடும்பத்தினருடன் வீடு திரும்பினர்.வீடு திறந்து கிடக்கவே உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

    இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார் தலைமையில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகைநிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    சம்பவம் நடைபெற்ற வீடு மதுரை - விருதுநகர் நான்குவழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் திருட்டு சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் முத்துபால் பாண்டி வீட்டில் திருடிய பின்பு நான்குவழிச்சாலை வழியாக தப்பி சென்றி ருக்கலாம் என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள் உதவியுடன் திருமங்கலம் டவுன் போலீசார் விசா ரணை நடத்திவருகின்றனர்.

    • சிம்மக்கல் நாடார் உறவின்முறை சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • பொதுமக்கள் திரண்டு வருமாறு சிம்மக்கல் நாடார் உறவின்முறை சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மதுரை

    கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா மதுரை சிம்மக்கல் நாடார் உறவின் முறை சார்பில் வருகிற 15ந் தேதி காமராஜர் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி அன்று காலை மதுரை காமராஜர் சாலை விளக்குத்தூணில் உள்ள காமராஜர் சிலைக்கு காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    முன்னதாக சிம்மக்கல் தமிழ் சங்கம் ரோட்டில் இருந்து நாடார் உறவின் முறை நிர்வாகிகள் பெண்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வருகின்றனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு சிம்மக்கல் நாடார் உறவின்முறை தலைவர் திலகர், பொருளாளர் வள்ளிராஜன் முன்னிலை வகிக்கின்றனர். துணை செயலாளர் செல்வராஜன், துணை தலைவர்கள் தங்கையா, செல்வ மோகன் மற்றும் ஓம்.சேர்ம பிரபு, ஜோசப் வாசுதேவன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஆத்திகுளம் கார்த்திக், ச.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் புறா மோகன், ராஜசேகர்.

    மதன், பாண்டியன், பசுமலை பள்ளி தலைமையாசிரியர் ஜான் கிறிஸ்டோபர், காமராஜ், பாலமேடு கார்த்திக், தாழை கண்ணன் ஆகியோர் வரவேற்கி றார்கள்.

    சிம்மக்கல் நாடார் உறவின்முறை செயலாளர் ஆர்.வி.டி.ஆர்.வினோத் பிரகாஷ் தலைமை தாங்குகிறார்.

    பெனிட் கரன், பி.டி.ஆர்.குழும சேர்மன் தானியல் தங்கராஜ், அதிமுக மாவட்ட துணை செயலாளர் ஜெ.ராஜா, அப்பாசுவாமி, ராணி, வஞ்சிகோ, டாக்டர் அருண் மார்டின், அகஸ்டின், பாலமுருகன், பால்பாண்டி, விஞ்ஞானி சிவசுப்பி ரமணியம், செல்வராஜ், ராஜவேல், பெரியசாமி, கந்தசாமி, மணிகண்டன், வையாபுரி, மாயாண்டி, வெற்றி ராஜன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்கள்.

    காமராஜர் சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகத்தை முன்னாள் நாடார் மகாஜன சங்க தலைவர் முத்துச்சாமி, நாடார் முன்னேற்ற சங்க செயலாளர் பெரிஷ் மகேந்திரவேல், தெட்சண மாற நாடார் சங்க செயலாளர் ராஜகுமார் ஆகியோர் செய்கிறார்கள். துணை செயலாளர் மாரிக்கனி நன்றி கூறுகிறார். இதில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் அசோக் குமார், மனோகர பாண்டி யன், சண்முகக்கனி, காமாட்சி பாண்டியன், நாகராஜன், ஜெயக்குமார், பாண்டி, அண்ணாதுரை, பிரான்சிஸ், தனபாண்டி, ரமேஷ், பாஸ்கர், மீனாட்சி சுந்தரம், திருச்செந்தில், சபரி செல்வம், பாலகிருஷ்ணன், பாஸ்கர் உள்பட ஆயிரக் கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

    காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு நாடார் உறவின் முறை நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு வருமாறு சிம்மக்கல் நாடார் உறவின்முறை சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • வீடு மற்றும் கடைகளில் பதுக்கி வைத்த 110 கிலோ பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடைகளில் வைத்திருந்த கேரி பைகளையும் பறிமுதல் செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில் பிளாஸ்டிக் கப்புகள், கேரி பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த கூடாது என நகராட்சி எச்சரித்துள்ளது. இதனையும் மீறி ஆங்காங்கே பிளாஸ்டிக் பயன்பாடுகள் இருப்பதாக தொடர்ந்து நகராட்சிக்கு தகவல் வந்தது.

    இந்தநிலையில் திருமங்கலம் முகமதுஷா புரம் பகுதியில் ஒரு வீட்டில் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகளவில் பதுக்கி இருப்ப தாக பொதுமக்களிடம் இருந்து நகராட்சிக்கு தகவல் வந்தது.

    இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் உத்தரவுபடி நகராட்சி சுகாதார அலுவலர் சண்முகவேலு, சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், துப்புரவு மேற்பார்வை யாளர்கள் ராஜலட்சுமி, யமுனா அடங்கிய குழுவினர் இன்று காலை அப்பகுதிக்கு சென்றனர்.

    அங்குள்ள வீடுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுப்பது போல் வீடு வீடாக சென்று துப்புரவு பணியாளா்கள் கணக்கெடுத்தபடியே சோதனை நடத்தியதில் ஒரு வீட்டில் அதிகளவில் பிளாஸ்டிக் கப்புகள் இருந்ததுதெரியவந்தது. உடனே அதிகாரிகள் அந்த வீட்டில் சென்று பதுக்கிவைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்தனர்.

    அந்த வீட்டில் விசாரணை நடத்திய போது திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளின் கடைகளுக்கு டீ கப்பாக இந்த பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்த நகராட்சி அதி காரிகள் பிளாஸ்டிக் கப்பு களை பறிமுதல் செய்தனர். மேலும் கடைகளில் வைத்திருந்த கேரி பைகளை பறிமுதல் செய்தனர்.

    • பூட்டிய வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது நாவினிப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பிவி ஜான்.இவரது கணவர் இறந்துவிட்டார். இவர் களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணம் ஆகி அமெரிக்கா வில் வசித்து வருகிறார். மகன் சென்னையில் வேலை பார்த்து அங்கு குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.

    பீவிஜான் மட்டும் இங்கு தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் அருகில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு தூங்க சென்று விட்டார். இதனை நோட்டுமிக்க மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரொக்கம் ரூபாய் 30 ஆயிரம், வீட்டில் இருந்த டிவி மற்றும் விலை உயர்ந்த பொருட் களை திருடி சென்றனர்.

    இது குறித்து மேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×