search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு மற்றும் கடைகளில் பதுக்கி வைத்த பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல்
    X

    வீடு மற்றும் கடைகளில் பதுக்கி வைத்த பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல்

    • வீடு மற்றும் கடைகளில் பதுக்கி வைத்த 110 கிலோ பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடைகளில் வைத்திருந்த கேரி பைகளையும் பறிமுதல் செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில் பிளாஸ்டிக் கப்புகள், கேரி பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த கூடாது என நகராட்சி எச்சரித்துள்ளது. இதனையும் மீறி ஆங்காங்கே பிளாஸ்டிக் பயன்பாடுகள் இருப்பதாக தொடர்ந்து நகராட்சிக்கு தகவல் வந்தது.

    இந்தநிலையில் திருமங்கலம் முகமதுஷா புரம் பகுதியில் ஒரு வீட்டில் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகளவில் பதுக்கி இருப்ப தாக பொதுமக்களிடம் இருந்து நகராட்சிக்கு தகவல் வந்தது.

    இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் உத்தரவுபடி நகராட்சி சுகாதார அலுவலர் சண்முகவேலு, சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், துப்புரவு மேற்பார்வை யாளர்கள் ராஜலட்சுமி, யமுனா அடங்கிய குழுவினர் இன்று காலை அப்பகுதிக்கு சென்றனர்.

    அங்குள்ள வீடுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுப்பது போல் வீடு வீடாக சென்று துப்புரவு பணியாளா்கள் கணக்கெடுத்தபடியே சோதனை நடத்தியதில் ஒரு வீட்டில் அதிகளவில் பிளாஸ்டிக் கப்புகள் இருந்ததுதெரியவந்தது. உடனே அதிகாரிகள் அந்த வீட்டில் சென்று பதுக்கிவைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்தனர்.

    அந்த வீட்டில் விசாரணை நடத்திய போது திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளின் கடைகளுக்கு டீ கப்பாக இந்த பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்த நகராட்சி அதி காரிகள் பிளாஸ்டிக் கப்பு களை பறிமுதல் செய்தனர். மேலும் கடைகளில் வைத்திருந்த கேரி பைகளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×