search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாடார் உறவின்முறை சார்பில்  காமராஜர் சிலைக்கு மரியாதை
    X

    நாடார் உறவின்முறை சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை

    • சிம்மக்கல் நாடார் உறவின்முறை சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • பொதுமக்கள் திரண்டு வருமாறு சிம்மக்கல் நாடார் உறவின்முறை சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மதுரை

    கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா மதுரை சிம்மக்கல் நாடார் உறவின் முறை சார்பில் வருகிற 15ந் தேதி காமராஜர் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி அன்று காலை மதுரை காமராஜர் சாலை விளக்குத்தூணில் உள்ள காமராஜர் சிலைக்கு காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    முன்னதாக சிம்மக்கல் தமிழ் சங்கம் ரோட்டில் இருந்து நாடார் உறவின் முறை நிர்வாகிகள் பெண்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வருகின்றனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு சிம்மக்கல் நாடார் உறவின்முறை தலைவர் திலகர், பொருளாளர் வள்ளிராஜன் முன்னிலை வகிக்கின்றனர். துணை செயலாளர் செல்வராஜன், துணை தலைவர்கள் தங்கையா, செல்வ மோகன் மற்றும் ஓம்.சேர்ம பிரபு, ஜோசப் வாசுதேவன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஆத்திகுளம் கார்த்திக், ச.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் புறா மோகன், ராஜசேகர்.

    மதன், பாண்டியன், பசுமலை பள்ளி தலைமையாசிரியர் ஜான் கிறிஸ்டோபர், காமராஜ், பாலமேடு கார்த்திக், தாழை கண்ணன் ஆகியோர் வரவேற்கி றார்கள்.

    சிம்மக்கல் நாடார் உறவின்முறை செயலாளர் ஆர்.வி.டி.ஆர்.வினோத் பிரகாஷ் தலைமை தாங்குகிறார்.

    பெனிட் கரன், பி.டி.ஆர்.குழும சேர்மன் தானியல் தங்கராஜ், அதிமுக மாவட்ட துணை செயலாளர் ஜெ.ராஜா, அப்பாசுவாமி, ராணி, வஞ்சிகோ, டாக்டர் அருண் மார்டின், அகஸ்டின், பாலமுருகன், பால்பாண்டி, விஞ்ஞானி சிவசுப்பி ரமணியம், செல்வராஜ், ராஜவேல், பெரியசாமி, கந்தசாமி, மணிகண்டன், வையாபுரி, மாயாண்டி, வெற்றி ராஜன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்கள்.

    காமராஜர் சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகத்தை முன்னாள் நாடார் மகாஜன சங்க தலைவர் முத்துச்சாமி, நாடார் முன்னேற்ற சங்க செயலாளர் பெரிஷ் மகேந்திரவேல், தெட்சண மாற நாடார் சங்க செயலாளர் ராஜகுமார் ஆகியோர் செய்கிறார்கள். துணை செயலாளர் மாரிக்கனி நன்றி கூறுகிறார். இதில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் அசோக் குமார், மனோகர பாண்டி யன், சண்முகக்கனி, காமாட்சி பாண்டியன், நாகராஜன், ஜெயக்குமார், பாண்டி, அண்ணாதுரை, பிரான்சிஸ், தனபாண்டி, ரமேஷ், பாஸ்கர், மீனாட்சி சுந்தரம், திருச்செந்தில், சபரி செல்வம், பாலகிருஷ்ணன், பாஸ்கர் உள்பட ஆயிரக் கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

    காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு நாடார் உறவின் முறை நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு வருமாறு சிம்மக்கல் நாடார் உறவின்முறை சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×