என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). இவர், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி அடைந்து, ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளதாக சான்றிதழ் கொடுத்து கடந்த 1999-ம் ஆண்டு ஆசிரியர் பணி பெற்றார். பின்னர், காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளிபுதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பணியில் இருந்தார்.
இந்தநிலையில் அவர், போலி சான்றிதழ் கொடுத்து பணி நியமனம் பெற்றதாக, 2019-ம் ஆண்டு குண்டலப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார். அதன் பேரில் கிருஷ்ணகிரி முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் முருகன் மற்றும் காவேரிப்பட்டணம் வட்டார கல்வி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
அதில், ராஜேந்திரன், 10-ம் வகுப்பே தேர்ச்சி பெறவில்லை என தெரியவந்தது. மேலும், போலியாக 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி சான்றிதழ்களை பெற்று, பணியில் சேர்ந்து, 21 ஆண்டுகளாக அரசை ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து, கடந்த அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலர் கலாவதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதரிடம் புகார் அளித்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ராஜேந்திரன் தலைமறைவானார். இதுகுறித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு காவேரிப்பட்டணம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு விசாரணைக்காக வந்த அவரை காவேரிப்பட்டணம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகேயுள்ள உத்தனப்பள்ளி மற்றும் அகரம் முருகன் கோவில் ஆகிய இடங்களில் அதிமுக கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
தற்போது கமல்ஹாசன் கூட அரசியலுக்கு வந்துள்ளார். அவர் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்கிறார். அதனை நினைத்தால் சிரிப்பு வருகிறது. கமல்ஹாசன், கருணாநிதி ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொல்லவேவில்லை,
அப்படி என்றால் கருணாநிதி எவ்வளவு மோசமான ஆட்சியை செய்துள்ளார்? அந்த கருணாநிதியின் மகன் நம்மை எதிர்த்து நிற்கிறார். எனவே அவர் நமக்கு தேவையில்லை. கமலஹாசனின் கூற்றுப்படியும் அவர் தேவையில்லை.
எம்.ஜி.ஆர் ஆட்சி வேண்டும் என்றால் நாம் தான் வரவேண்டும்.
கமலஹாசனுக்கு அரசியலில் தகுதி கிடையாது. அவர் தனிமனித வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர். தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாத ஒரு மனிதன் பொது வாழ்க்கையில் எப்படி ஒழுக்கமாக இருக்க முடியும்?
இவ்வாறு அவர் பேசினார்.






