என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    ஊத்தங்கரையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    ஊத்தங்கரையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டி ஆண்டியூரான் கொட்டாயை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 35). இவருடைய மகன் பாலாஜி (18). இவர் நாட்டாகவுண்டனூரில் உள்ள தனது பாட்டி பூஞ்சோலையின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு உள்ள நண்பர் உதயகுமார் வீட்டினுள் அவர் சென்று விட்டு, வெளியில் வரும்போது வீட்டின் வெளியே தொங்கி கொண்டிருந்த மின்சார வயரை தெரியாமல் தொட்டு விட்டார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பாலாஜி துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தந்தை வேடியப்பன் ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×