என் மலர்
கள்ளக்குறிச்சி
- பள்ளியில் 9ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- பள்ளி முகப்பில் தோரணம், வாழைமரம் கட்டி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை தொடர்ந்து, கடந்த ஜூலை17-ந் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இதில் கலவரக்காரர்கள் பள்ளி பஸ் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தி தீ வைத்தனர். பள்ளியில் இருந்த நாற்காலிகள் மற்றும் மேஜைகளை அடித்து நொறுக்கி பயங்கர சேதத்தை ஏற்படுத்தினர்.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளின் ஆதாரத்தை கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கனியாமூர் சக்திமேல்நிலை பள்ளியில் வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. வேறு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் கனியாமூர் சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
பள்ளியில் 9ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தால் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி 145 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடக்கப்பட்டுள்ளன.
பள்ளி முகப்பில் தோரணம், வாழைமரம் கட்டி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- மனைவி கோபித்து சென்றதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- இவரது மனைவி சுமதி கூலி வேலைக்கு சென்று தாமதமாக வந்ததார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 43) தொழிலாளி. இவரது மனைவி சுமதி கூலி வேலைக்கு சென்று தாமதமாக வந்ததார். இதை குழந்தைவேல் கண்டித்ததால் அவருடன் கோபித்துக்கொண்டு சுமதி தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனால் விரக்தி அடைந்த குழந்தைவேலு விஷத்தை குடித்தார். பின் மயங்கி விழுந்த குழந்தைவேலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
- பொங்கல் பண்டிகையை யொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்கப்படு கிறது.
- மேலும் கடந்த ஆண்டு மஞ்சள் கொத்து ரூ.30 முதல் விற்பனை செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் சின்னசேலம் சங்கரா புரம் திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பரவலாக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை யொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்க ப்படு கிறது. இந்த மஞ்சள் ஜனவரி மாதம் பொங்க லுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறுவடை செய்யப்படுகிறது. தற்போது பல்வேறு பகுதி களில் மஞ்சள் கொத்து கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கல்யாணமான பெண்க ளுக்கு பிறந்த வீட்டில் இருந்து பொங்கல் சீர் வரிசையில் முக்கியமாக பொருள்களாக விளங்கு வது மஞ்சள், கரும்பு பானை, அரிசி, வெள்ளம் இப்பொருள்களை வைத்து பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்னதாக கொடுப்பார்கள். இதில் முக்கிய பங்காற்றுவது மஞ்சள்.
இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ''பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, வெல்லம், மஞ்சள், இஞ்சி ஆகியவை முக்கிய இடம் பெறுகிறது. சின்னசேலம் நயினார்பாளையம் கூகையூர் மூங்கில்பாடி, கல்லாநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் பொங்கல் பண்டிகையை யொட்டி விற்பனை செய்யும் வகையில் கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடி செய்துள்ளோம். தற்போது மஞ்சள் அறு வடைக்கு தயார் நிலை யில் உள்ளது. சென்ற ஆண்டை ப்போல இந்த ஆண்டும் மஞ்சள் நல்ல விளைச்சல் இருக்கிறது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியில் உள்ளோம். மேலும் கடந்த ஆண்டு மஞ்சள் கொத்து ரூ.30 முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டும் நல்ல விலை கிடை க்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.
- 22 சிறிய பாளையம் என திட்டம் போடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
- காவல் துறை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொண்டது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை புதிய ரயில் பாதை போடும் பணி 2006 -ல் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 116 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரயில் பாதை அமைப்பதற்கு ஒரு மேம்பாலம் இரண்டு பெரியபாலம், பத்து தரைப்பாலம், 22 சிறிய பாளையம் என திட்டம் போடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் பாதை அமைப்பதற்கு நிதி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆன பிறகும் மிகவும் தாமத மாகவும், மந்தமாகவும் நடைபெ றுகிறது எனவும், ரயில் பாதை பணிகளை துரிதப்படுத்தி விரைவாக முடிக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்னசேலம் ரயில் நிலைய முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போரா ட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தடுப்பு கட்டை அமைத்து காவல் துறை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொண்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்று ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்பொழுது போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்ற போது கட்சியினருக்கும் போலீஸ்சாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்து றையை மீறி உள்ளே செல்ல முடியாததால் அதே இடத்தில் அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்கள் சேலம் ரயில்வே டிஎஸ்பி குணசேகரன், உதவி கோட்ட பொறியாளர் வின்சன், கள்ளக்குறிச்சி ஏடிஎஸ்பி விஜயகார்த்திராஜா, டி எஸ் பி ரமேஷ், சின்னசேலம் தாசில்தார் இந்திரா ,உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள் அப்பொழுது வின்சென்ட் கூறுகையில் தற்போதுள்ள பொரு ளாதார சூழ்நிலையில் கூடுதல் நிதி தேவைப்படுவதாகவும், மத்திய அரசிடம் 356 கோடி நிதி பெற உள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டுக்குள் உறுதியாக சின்னசேலத்திற்கும் கள்ளக்குறிச்சிக்கும் இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனை அடுத்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
- நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் வழங்கி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணிபுரியும் அலுவலர்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் வழங்கி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணியிடம் குறித்த விவரம் பின்வருமாறு,
ரவிச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கள்ளக்குறிச்சி, ரங்கராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ரிஷிவந்தியம், ஆனந்தன் கண்காணிப்பாளர் கள்ளக்குறிச்சி, துரைசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிப் பிரிவு அலுவலக மேலாளரார் கள்ளக்குறிச்சி, செல்வபோதகர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) திருநாவலூர், செல்வகணேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சங்கராபுரம், ஆறுமுகம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) கள்ளக்குறிச்சி, நடராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திருநாவலூர், கண்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) உளுந்தூர்பேட்டை, ரவிசங்கர் கண்காணிப்பாளர் ( TANFINET) கள்ளக்குறிச்சி, செல்லதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சங்கராபுரம, ராஜேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) உளுந்தூர்பேட்டை, சீனிவாசன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தியாகதுருகம், பன்னீர்செல்வம் கண்காணிப்பாளர் உதவி இயக்குனர் அலுவலகம் கள்ளக்குறிச்சி. துரைமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரிஷிவந்தியம், செந்தில் முருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) தியாகதுருகம், இந்திராணி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சின்னசேலம் ஆகிய இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- டிராக்டர் சிவகாமி ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.பி. அகரம் கிராமத்தைச் சேர்ந்த சிவபெருமாள் என்பவர் தனது சொந்த அக்காள் அஞ்சலையின் மகள் சிவகாமியை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்ததார். இந்நிலையில் நேற்று மதியம் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சிவகாமியும், தாய் அஞ்சலையும் சென்றனர். இவர்கள் கணியாமூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் சென்றபோது பின்னால் கரும்பு ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த டிராக்டர் சிவகாமி ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் அஞ்சலை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். சிவகாமி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தனது கண் முன்பே தாய் விபத்தில் பலியானதை பார்த்து சிவகாமி கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சிவபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருநாவலூர் அருகே ஆடு மேய்த்தவர் வேன் மோதி பலியானார்.
- குணபூசணி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிழக்கு மருதூர் காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (வயது 50) அதே ஊரைசேர்ந்த குணபூசணி (வயது 52) இருவரும் கிழக்கு மருதூர் மேம்பாலம் அருகில் ரோட்டோரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பண்ருட்டி மார்க்கத்தில் இருந்து சேந்தநாடு சென்ற வேன் இவர்கள் மீது மோதி பலத்த காயம் அடைந்தனர். ராணி சம்பவ இடத்திலே இறந்தார். குணபூசணி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
மேலும்இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்அசோகன் சம்பவ இடத்திற்கு சென்று ராணியின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வேன் ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
சங்கராபுரம் அருகே போலீஸ் சப்-இ ன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலா ன போலீசார் மேலப்பட்டு, அரசம்பட்டு ஆகிய பகுதிகளில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியின் ஒரு வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோபால்(47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அரசம்பட்டு கிராமத்தை அஞ்சலை(58) என்பவர் சாராயம் விற்பனை செய்தார். அவரை கைது செய்து அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
- வாத்துக்களுக்கு தீவனத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.
- உணவு பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே கண்டாச்சிமங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் போலீஸ் ஏட்டு சிவமுருகன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூத்தக்குடியி ல் இருந்து அந்த வழியாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.
விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 50), வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சஞ்சீவி ராயர்புரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 60) ஆகியோர் கோழி மற்றும் வாத்துக்களுக்கு தீவனத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. அதன்படி ஆனந்தன் மற்றும் நாகராஜ் ஆகியோரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- அந்த இடத்தை சுற்றியிருந்த 11 குடும்பத்தினர், எங்கள் இடத்தை ஏன் அளக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மேலும், இவ்விடத்தை விட்டால் எங்களிடம் வேறு இடம் இல்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் பழம்பெருமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சொந்தமாக சர்வே எண்.351-ல் 10.5 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை அளப்பதற்காக இந்து அறநிலைத்துறையிலிருந்து வருவாய் துறை அதிகாரிகள் வந்தனர். அந்த இடத்தை சுற்றியிருந்த 11 குடும்பத்தினர், எங்கள் இடத்தை ஏன் அளக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோவிலுக்கு சொந்தமான இடத்தை அளக்கிறோம். இது தொடர்பாக உங்களிடம் ஏதாவது ஆவணம் இருக்கிறதா என்று வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கிருந்த மக்களிடம் கேட்டனர். அதற்கு அங்குள்ள 11 குடும்பத்தினர் எங்களிடம் வருவாய் துறை மூலம் வழங்கப்பட்ட பட்டா இருக்கிறது என்று கூறினர். அதைப் பொருட்படுத்தாத இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் அளந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், மேலும், இவ்விடத்தை விட்டால் எங்களிடம் வேறு இடம் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்களுக்கு இவ்விடத்தை வழங்க ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுகாகுணமங்கலம் கிராமத்தில் ஆதம்மாளிக். இவரது வீட்டில் இரவு வீட்டின் கதவு பூட்டாமல் திறந்துவைத்துவிட்டு தூங்கும்போது 1.30 மணிக்கு மேல் பீரோவில் இருந்த நகை பணம் திருடு போனது. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார் .
- 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- வேறு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பிளஸ்-2 படித்துவந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளியில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு போலீஸ் ஜீப்களுக்கும், பள்ளி வகுப்பறைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் பள்ளியில் பலகோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கனியாமூர் சக்திமேல்நிலை பள்ளியில் வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. வேறு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கனியாமூர் சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கனியாமூர் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.






