என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடிவந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இந்திலி கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் (வயது 36) எலக்ட்ரீசியன். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நரேஷ் தனது வீட்டை பூட்டிவிட்டு இந்திலி காந்தி நகரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் மறுநாள் காலை தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப் பட்டு பீரோவிலிருந்த 9 பவுன் நகை, ரூ.10,000 ரொக்க பணம் மேலும் வீட்டிலிருந்த 40 இன்ச் எல் இ டி டிவி ஆகியவை மர்ம நபரால் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நரேஷ் இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் சின்ன சேலம் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் போலீ சார் வழக்கு பதிவு செய்து வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சின்னசேலம் ஏரிக்கரை அருகே உள்ள ஒருவர் வீட்டில் திருட முயன்ற வாலிபரை அப்பகுதியிலுள்ள ெபாதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சின்னசேலம் போலீ சாரிடம் ஒப்ப டைத்தனர். போலீசார் அந்த வாலிபரை விசாரித்த போது நயினார் பாளையத்தை சேர்ந்த சின்னையன் என்பதும் இந்திலியில் நரேஷ் வீட்டில் திருடியதும் தெரிய வந்தது. உடனே பேலீசார் சின்னையனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
    • இவர்கள் 2 பேரும் பெரும்பாக்கத்தில் இருந்து கெடிலம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் (வயது 17). இவருடைய நண்பர் பிரேம்குமார். இவர்கள் 2 பேரும் பெரும்பாக்கத்தில் இருந்து கெடிலம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆவலம் அய்யனார் கோவில் என்ற இடத்தை கடக்கும்போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அருள் பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த பிரேம்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • பாம்பு கடித்து விவசாயி பலியானார்.
    • கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகேயுள்ள தோட்டப்பாடி கிராமத்தில் வசிப்பவர் ராமர் (வயது 37). இவருக்கு செல்வி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்்ளனர். இவர் விவசாயம் செய்து வருகிறார். கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி ராமர் தனது வீட்டில் விளக்கேற்றிவிட்டு, நிலத்தில் உள்ள பாசன கிணறு அருகே விளக்கேற்றிவிட்டு திரும்பினார். அப்போது அவரது காலில் பூச்சி கடித்தது போல உணர்ந்தார்.

    உடனே அங்கு பார்க்கும் போது விஷப்பாம்பு அவரை கடித்துவிட்டு சரசரவென ஒடியது. இவர் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் ஒடிவந்து ராமரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ராமரின் மனைவி செல்வி (வயது 34) அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் அருகேயுள்ள கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய சகோதரி சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவருக்கும் சங்கீதாவுக்கும் 1.1/2 வருடங்களாக நட்பாக பழகி வந்தனர். . இது பற்றி கணவனுக்கு தெரிய வந்தது. இதனால் சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்ரோடு கிராமத்தில் தங்கி வசித்து வந்தனர்.

    கடந்த 24- ந் தேதி அன்று சங்கீதாவை பார்க்க மணி சென்றுள்ளார். இது பற்றி கணவனுக்கு தெரிந்ததால் சங்கீதா நேற்று எலிபேஸ்ட் சாப்பிட்டார். பின்னர் அவரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் கோபமடைந்த சங்கரும் கல்லாநத்தம் சென்று கேட்டார். அப்போது மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர். இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும்
    • நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை  தாங்கி பேசியதாவது, கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தீன்தயாள் உபாத்யாய -கிராமின் கௌசல்ய - யோஜனா (DDU-GKY) திட்டத்தின்கீழ் "இளைஞர் திறன் திருவிழா" நடைபெற்றது. இந்த இளைஞர் திறன் திருவிழாவில், 8-ஆம் வகுப்பிற்கு மேல் கல்வி தகுதியுடைய 35 வயதுக்குட்பட்ட அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமுள்ள திறன் பயிற்சியை தேர்வு செய்து பயிற்சியில் இணைந்து பயன்பெற வழி வகை செய்யப்பட்டது. மேலும், பயிற்சிக்கு பின் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் வேலைவாய்ப்பினை வழங்கிடும். மேலும், சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவத்தக்க அரசுத் திட்டங்கள் பற்றிய விவரங்களை இம்முகாமில்அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டது. அதன்படி இளைஞர் திறன் திருவிழாவில் 300 க்கும் மேற்ப்பட்ட

    இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் 13 தொழில் பயிற்சி நிலையங்கள் வாயிலாக ௯௫ இளைஞர்கள் தொழிற் திறன் பயிற்சிக்கு தேர்வாகியுள்ளார்கள். அவர்களுக்கான தொழிற் திறன் பயிற்சி சோர்க்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி காலங்கள் 3 முதல் அதிகபட்ச 6 மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படும். எனவே இத்திறன் திருவிழாவை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு தாங்களாகவே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் தெரிவித்தார். இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கக திட்ட இயக்குநர் சுந்தரராஜன், உதவி திட்ட இயக்குநர்கள் நாராயணசாமி, கார்த்திகேயன், வட்டார இயக்க மேலாளர் சதீஷ்குமார், கள்ளக்குறிச்சி நகர் மன்ற தலைவர் சுப்புராயலு, கள்ளக்குறிச்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் அலமேலு ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளியில் 9ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
    • பள்ளி முகப்பில் தோரணம், வாழைமரம் கட்டி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை தொடர்ந்து, கடந்த ஜூலை17-ந் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

    இதில் கலவரக்காரர்கள் பள்ளி பஸ் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தி தீ வைத்தனர். பள்ளியில் இருந்த நாற்காலிகள் மற்றும் மேஜைகளை அடித்து நொறுக்கி பயங்கர சேதத்தை ஏற்படுத்தினர்.

    இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளின் ஆதாரத்தை கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கனியாமூர் சக்திமேல்நிலை பள்ளியில் வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. வேறு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் கனியாமூர் சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

    பள்ளியில் 9ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தால் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி 145 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடக்கப்பட்டுள்ளன.

    பள்ளி முகப்பில் தோரணம், வாழைமரம் கட்டி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • மனைவி கோபித்து சென்றதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இவரது மனைவி சுமதி கூலி வேலைக்கு சென்று தாமதமாக வந்ததார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 43) தொழிலாளி. இவரது மனைவி சுமதி கூலி வேலைக்கு சென்று தாமதமாக வந்ததார். இதை குழந்தைவேல் கண்டித்ததால் அவருடன் கோபித்துக்கொண்டு சுமதி தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனால் விரக்தி அடைந்த குழந்தைவேலு விஷத்தை குடித்தார். பின் மயங்கி விழுந்த குழந்தைவேலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

    • பொங்கல் பண்டிகையை யொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்கப்படு கிறது.
    • மேலும் கடந்த ஆண்டு மஞ்சள் கொத்து ரூ.30 முதல் விற்பனை செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் சின்னசேலம் சங்கரா புரம் திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பரவலாக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை யொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்க ப்படு கிறது. இந்த மஞ்சள் ஜனவரி மாதம் பொங்க லுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறுவடை செய்யப்படுகிறது. தற்போது பல்வேறு பகுதி களில் மஞ்சள் கொத்து கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கல்யாணமான பெண்க ளுக்கு பிறந்த வீட்டில் இருந்து பொங்கல் சீர் வரிசையில் முக்கியமாக பொருள்களாக விளங்கு வது மஞ்சள், கரும்பு பானை, அரிசி, வெள்ளம் இப்பொருள்களை வைத்து பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்னதாக கொடுப்பார்கள். இதில் முக்கிய பங்காற்றுவது மஞ்சள்.

    இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ''பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, வெல்லம், மஞ்சள், இஞ்சி ஆகியவை முக்கிய இடம் பெறுகிறது. சின்னசேலம் நயினார்பாளையம் கூகையூர் மூங்கில்பாடி, கல்லாநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் பொங்கல் பண்டிகையை யொட்டி விற்பனை செய்யும் வகையில் கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடி செய்துள்ளோம். தற்போது மஞ்சள் அறு வடைக்கு தயார் நிலை யில் உள்ளது. சென்ற ஆண்டை ப்போல இந்த ஆண்டும் மஞ்சள் நல்ல விளைச்சல் இருக்கிறது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியில் உள்ளோம். மேலும் கடந்த ஆண்டு மஞ்சள் கொத்து ரூ.30 முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டும் நல்ல விலை கிடை க்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.

    • 22 சிறிய பாளையம் என திட்டம் போடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    • காவல் துறை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொண்டது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை புதிய ரயில் பாதை போடும் பணி 2006 -ல் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 116 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரயில் பாதை அமைப்பதற்கு ஒரு மேம்பாலம் இரண்டு பெரியபாலம், பத்து தரைப்பாலம், 22 சிறிய பாளையம் என திட்டம் போடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் பாதை அமைப்பதற்கு நிதி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆன பிறகும் மிகவும் தாமத மாகவும், மந்தமாகவும் நடைபெ றுகிறது எனவும், ரயில் பாதை பணிகளை துரிதப்படுத்தி விரைவாக முடிக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்னசேலம் ரயில் நிலைய முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போரா ட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தடுப்பு கட்டை அமைத்து காவல் துறை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொண்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்று ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்பொழுது போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்ற போது கட்சியினருக்கும் போலீஸ்சாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்து றையை மீறி உள்ளே செல்ல முடியாததால் அதே இடத்தில் அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்கள் சேலம் ரயில்வே டிஎஸ்பி குணசேகரன், உதவி கோட்ட பொறியாளர் வின்சன், கள்ளக்குறிச்சி ஏடிஎஸ்பி விஜயகார்த்திராஜா, டி எஸ் பி ரமேஷ், சின்னசேலம் தாசில்தார் இந்திரா ,உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள் அப்பொழுது வின்சென்ட் கூறுகையில் தற்போதுள்ள பொரு ளாதார சூழ்நிலையில் கூடுதல் நிதி தேவைப்படுவதாகவும், மத்திய அரசிடம் 356 கோடி நிதி பெற உள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டுக்குள் உறுதியாக சின்னசேலத்திற்கும் கள்ளக்குறிச்சிக்கும் இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனை அடுத்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் வழங்கி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணிபுரியும் அலுவலர்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் வழங்கி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணியிடம் குறித்த விவரம் பின்வருமாறு, 

    ரவிச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கள்ளக்குறிச்சி, ரங்கராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ரிஷிவந்தியம், ஆனந்தன் கண்காணிப்பாளர் கள்ளக்குறிச்சி, துரைசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிப் பிரிவு அலுவலக மேலாளரார் கள்ளக்குறிச்சி, செல்வபோதகர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) திருநாவலூர், செல்வகணேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சங்கராபுரம், ஆறுமுகம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) கள்ளக்குறிச்சி, நடராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திருநாவலூர், கண்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) உளுந்தூர்பேட்டை, ரவிசங்கர் கண்காணிப்பாளர் ( TANFINET) கள்ளக்குறிச்சி, செல்லதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சங்கராபுரம, ராஜேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) உளுந்தூர்பேட்டை, சீனிவாசன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தியாகதுருகம், பன்னீர்செல்வம் கண்காணிப்பாளர் உதவி இயக்குனர் அலுவலகம் கள்ளக்குறிச்சி. துரைமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரிஷிவந்தியம், செந்தில் முருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) தியாகதுருகம், இந்திராணி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சின்னசேலம் ஆகிய இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • டிராக்டர் சிவகாமி ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.பி. அகரம் கிராமத்தைச் சேர்ந்த சிவபெருமாள் என்பவர் தனது சொந்த அக்காள் அஞ்சலையின் மகள் சிவகாமியை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்ததார். இந்நிலையில் நேற்று மதியம் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சிவகாமியும், தாய் அஞ்சலையும் சென்றனர். இவர்கள் கணியாமூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் சென்றபோது பின்னால் கரும்பு ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த டிராக்டர் சிவகாமி ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    இதில் அஞ்சலை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். சிவகாமி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தனது கண் முன்பே தாய் விபத்தில் பலியானதை பார்த்து சிவகாமி கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சிவபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருநாவலூர் அருகே ஆடு மேய்த்தவர் வேன் மோதி பலியானார்.
    • குணபூசணி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிழக்கு மருதூர் காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (வயது 50) அதே ஊரைசேர்ந்த குணபூசணி (வயது 52) இருவரும் கிழக்கு மருதூர் மேம்பாலம் அருகில் ரோட்டோரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பண்ருட்டி மார்க்கத்தில் இருந்து சேந்தநாடு சென்ற வேன் இவர்கள் மீது மோதி பலத்த காயம் அடைந்தனர். ராணி சம்பவ இடத்திலே இறந்தார். குணபூசணி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

    மேலும்இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்அசோகன் சம்பவ இடத்திற்கு சென்று ராணியின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வேன் ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×