search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "9 pound jewels"

    • தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடிவந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இந்திலி கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் (வயது 36) எலக்ட்ரீசியன். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நரேஷ் தனது வீட்டை பூட்டிவிட்டு இந்திலி காந்தி நகரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் மறுநாள் காலை தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப் பட்டு பீரோவிலிருந்த 9 பவுன் நகை, ரூ.10,000 ரொக்க பணம் மேலும் வீட்டிலிருந்த 40 இன்ச் எல் இ டி டிவி ஆகியவை மர்ம நபரால் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நரேஷ் இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் சின்ன சேலம் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் போலீ சார் வழக்கு பதிவு செய்து வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சின்னசேலம் ஏரிக்கரை அருகே உள்ள ஒருவர் வீட்டில் திருட முயன்ற வாலிபரை அப்பகுதியிலுள்ள ெபாதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சின்னசேலம் போலீ சாரிடம் ஒப்ப டைத்தனர். போலீசார் அந்த வாலிபரை விசாரித்த போது நயினார் பாளையத்தை சேர்ந்த சின்னையன் என்பதும் இந்திலியில் நரேஷ் வீட்டில் திருடியதும் தெரிய வந்தது. உடனே பேலீசார் சின்னையனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×