என் மலர்
கள்ளக்குறிச்சி
- இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகறாறு ஏற்பட்டுள்ளது.
- மாலதியை மீட்டு சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் பாண்டியன். அவரது மனைவி மாலதி(20). இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாலதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் மாலதியை மீட்டு சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் மாலதியின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை நடத்தி வருகிறார்.
- சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நவீன், ரசிகன் என்பது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே நெடுமானூர் பகுதியில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தினர். அப்போது அவர்கள், தாங்கள் வைத்திருந்த கஞ்சாவை கீழே போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நவீன், ரசிகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- எலவனாசூர்கோட்டை பகுதியில் போலீசார்தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- எஸ். மலையனூர் கிராமத்தில் சுபாஷ் என்பவர் தெருவில் கஞ்சா விற்றார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில் தமிழ்வாணன் இன்ஸ்பெக்டர் தலைமையில் உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை பகுதியில் போலீசார்தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ். மலையனூர் கிராமத்தில் சுபாஷ் என்பவர் தெருவில் கஞ்சா விற்றார். உடேன போலீசார் அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- சங்கராபுரம் அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு பகுதியில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் வடபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிங்காரம் மகன் குமார்(வயது42), புதுப்பாலப்பட்டு கிராமம் பாண்டியன் மகன் வல்லரசு(21), ஆனந்தன் மகன் அருண்(21) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
- கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ஒரு சிறுவன் ஆகிய 2 பேர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னை சத்யா தெருவில் மணிகண்டன் (வயது 22), அவருடன் ஒரு சிறுவன் ஆகிய 2 பேர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மணிகண்டனை சிறையில் அடைத்தனர். சிறுவனை அங்குள்ள சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
- பகண்டை கூட்டு ரோடு அருகே ஓடையில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
- கரும்பு சோலை கட்டை தலையில் வைத்துக்கொண்டு திருவேங்கடம் நடந்து சென்றார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு அடுத்த அவிரியூர் கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 42). இவர் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. சம்பவத்தன்று அதே ஊரில் உள்ள பெரியாயி ஓடை கரையில் கரும்பு சோலை கட்டை தலையில் வைத்துக்கொண்டு திருவேங்கடம் நடந்து சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஓடைக்குள் தவறி விழுந்து விட்டார்.
இதில் பின் கழுத்தில் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி திருவேங்கடம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- ஆனந்தராசு தலைமையில் போலீசார் நேற்று தகரை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 60 லிட்டர் சாராயத்தையும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரை கிராமத்தில் சாராயம் விற்று வருவதாக சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில் போலீசார் நேற்று தகரை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது தகரை கிராம எல்லையில் உள்ள மூணாங்கண்னி குட்டை அருகே இருசக்கர வாகனத்தில் ஒருவர் சாராயம் கடத்தி வந்தார்.
அப்பொழுது போலீஸ் காரை கண்டதும் சாராயத்தையும் இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றார். பின்னர் லாரி டியூப்பில் இருந்த 60 லிட்டர் சாராயத்தையும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நபர் நாககுப்பம் கிராமத்தை சேர்ந்த நேதாஜி என்பது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நேதாஜியை போலீசார் தேடி வருகின்றனர்.
- பிள்ளையார்குப்பம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
- பஸ்நிறுத்தம் பகுதியில், திருவெண்ணைநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவ ட்டம் உளுந்தூ ர்பேட்டை தாலுகா திருநாவ லூர் ஒன்றியத்தில் பிள்ளை யார்குப்பம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான ஏரி, குளங்கள் உள்ளன. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையிலும் இந்த ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. ஆகவே இந்த ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்க ளை தூர்வாரி, ஏரி, குளங்க ளையும் தூர்வார வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தி டம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
இந்தபோதும் ஏரி, குளங்கள் தூர்வாரப்படா ததால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன் தலைமையில் 70-க்கும் மேற்பட்டோர் பிள்ளையார்குப்பம் பஸ்நிறுத்தம் பகுதியில், திருவெண்ணைநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏரி, குளங்களை தூர்வா ரக்கோரி கோஷமிட்டனர். இதனைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரை திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் கைது செய்து அப்புற ப்படுத்தினர். மேலும் தங்களது கோரிக்கை யை மாவட்ட நிர்வாகத்திடம் கூறுவதாக இன்ஸ்பெக்டர் அசோகன் உறுதியளித்தார்.
- சேகர் அவரது மனைவி அலமேலுவுடன் தனியார் பஸ்சில் நேற்று சென்னை புறப்பாட்டார்.
- திருச்சியில் இருந்து சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
கடலூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூர் தாலுகா மேல்சார் கண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 70). இவரது மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக சேகர் அவரது மனைவி அலமேலுவுடன் தனியார் பஸ்சில் நேற்று சென்னை புறப்பாட்டார். அப்போது உளுந்தூர்பேட்டை பாதூர் காந்திநகர் அருகே டீ குடிப்பதற்காக பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பயணிகளும் டீ குடிக்க இறங்கினர். அந்த நேரத்தில் சிறுநீர் கழிக்க சாலையோரம் சென்ற சேகர் மீது திருச்சியில் இருந்து சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சேகரின் உடலை கைப்பற்றி பிரதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் மனைவி கண் எதிரே கணவன் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
- போலீசார் சங்கராபுரம் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
- புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சங்கராபுரம் அருகே கொசப்பாடி கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பையுடன் நின்று கொண்டிருந்தவரை பிடித்து பையை சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில், அவர் செம்பராம்பட்டை சேர்ந்த கோபிநாத் (42) என்பதும் மளிகை கடை விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வாங்கி வந்தபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து கோபிநாத்தை கைது செய்து, அவரிடம் இருந்து 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தலா 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் கொசப்பாடி, பொய்க்குணம், செம்பராம்பட்டு, நெடுமானூர் ஆகிய கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர் . அப்போது அங்குள்ள வீடுகள், வயல்வெளிகளில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த கொசப்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் (58), சேஷசமுத்திரத்தை சேர்ந்த முத்து (71), பூட்டை கிராமத்தை சேர்ந்த மார்க்ஸ் லெனின் (39), நெடுமானூரை சேர்ந்த முத்தம்மாள் (58) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
- அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் செல்வராஜை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர்.
- இது குறித்து பகண்டை கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு அருகே மரூர்மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54) விவசாயி. இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள இவரது விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் செல்வராஜ் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் செல்வராஜை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது மின்சாரம் தாக்கி செல்வராஜ் இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜின் குடும்ப த்தினர் இது குறித்து பகண்டை கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, சோலை ஜெயராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செ ல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறி த்து போ லீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






