என் மலர்
கள்ளக்குறிச்சி
- லில்லிசெல்வராணி, மரியசெல்வம் மனைவி ராக்கேல் மரிஸ்டெல்லா ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
- விசாரணை செய்து வருகின்றன
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மங்கலம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன பிலவேந்திரன் (வயது 85). சம்பவத்தன்று இவரை அவரது மகன் சகாயராஜ் மற்றும் லில்லிசெல்வராணி, மரியசெல்வம் மனைவி ராக்கேல் மரிஸ்டெல்லா ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி இன்று காலை லாரியை ஓட்டிவந்தார்.
- போலீசார் விரைந்து சென்று லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் இழுத்து சீரமைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாமாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 32). லாரி டிரைவர். இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி இன்று காலை லாரியை ஓட்டிவந்தார். மேலேறி கிராமம் ஏரி கரையோரம் லாரி சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த லாரி எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் முருகன் சம்பவ இடத்தி லேயே உடல் நசுங்கி பலியானார்.
விபத்தில் சிக்கிய லாரி நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் இழுத்து சீரமைத்தனர். விபத்தில் பலியான முருகனின் உடல் பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பரமேஸ்வரி, கணவருடன் தனியார் பஸ்சில் கச்சிரா யபாளையம் புறப்பட்டார்.
- பஸ்சிலியே கைப்பையை தவறவிட்டிருக்கலாம் என்று சந்தேகமடைந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையத்தில் உள்ள குளத்துமேட்டு வீதி யில் வசிப்பவர் பரமேஸ்வரி (வயது 26). இவருக்கும் பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த விவேக்பாபு (31) என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 20 நாட்களுக்கு முன்பாக குழந்தை பிறந்தது. இவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.தனது பெற்றோருடன் சில நாட்கள் தங்க முடி வெடுத்த பரமேஸ்வரி, கணவருடன் நேற்று இரவு தனியார் பஸ்சில் கச்சிரா யபாளையம் புறப்பட்டார். பஸ் பயணத்தின் போது நகை அணிந்து செல்வது பாதுகாப்பில்லை என்ப தற்காக, முருக்கு செயின், மோதிரம், தோடு, கொலுசு, ரூ.3 ஆயிரம் பணம் ஆகிய வற்றை கைப்பையில் வைத்துக் கொண்டு வந்துள்ளார்.
கச்சிராயப்பாளை யத்தில் குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாமல் பஸ் சென்றது. பரமேஸ்வரியும் அவரது கணவரும் கூச்சலிடவே, சிறிது தூரம் தள்ளி பஸ் நிறுத்தப்பட்டது. இதில் 20 நாள் கைக்குழந்தையும், விவேக்பாபுவும் பஸ் கம்பியில் மோதினர். இதனால் குழந்தை அழுதது. பஸ்சினை விட்டு வேகமாக இறங்கி குழந்தையின் தலையை தேய்த்துவிட்டுபடி தாய் வீட்டிற்கு சென்றனர். சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது கைப்பை யை காணவில்லை. குழந்தை அழுத பதட்டத்தில் பஸ்சிலியே கைப்பையை தவறவிட்டிருக்கலாம் என்ற சந்தேகமடைந்த பரமேஸ்வரி நேற்றிரவே அந்த தனியார் பஸ்சினை தனது கணவருடன் தேடிச் சென்றார். அருகிலிருந்த பெட்ரோல் பங்கில் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அதிலிருந்த டிரைவர், கண்டக்டரிடம் விசாரித்த போது அவர்கள் முன்னுக் குப்பின் முரணாக பதில் கூறினர்.
மேலும், பஸ்சில் சி.சி.டி.வி. ஏன் வைக்க வில்லை என்ற கேள்விக்கு, நீ என்ன ஆர்.டி.ஓ.-விலா பணி செய்கிறாய் என்று பஸ் ஊழியர்கள் பரமேஸ்வரி யிடம் பதில் கூறியுள்ளனர். எனவே, உடனடியாக கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையம் விரைந்து வந்த பரமேஸ்வரி, நடந்த அனைத்து விஷயங்களை யும் எழுத்துப் பூர்வமாக புகாராக அளித்தார். மேலும், பஸ் ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும், தனது நகையை கண்டு பிடித்து தருமாறும் கேட்டுக் கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அதிகாரிகளிடம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்களை நேரில் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
- 21 நபர்களின் மனுக்களை மீண்டும் மறு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மந்தவெளி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்களை நேரில் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 19 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே மனு அளித்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட சுமார் 80 நபர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் சட்டம் ஒழுங்கு, நில அபகரிப்பு மற்றும் பணமோசடி, தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் அளித்த மனு மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டதா, மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா என்பன போன்ற பல்வேறு விபரங்களை போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கேட்டறிந்தார். தொடர்ந்து சுமார் 21 நபர்களின் மனுக்களை மீண்டும் மறு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், விஜய் கார்த்திக் ராஜா, கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, மது விலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார், காட்டு எடையாா் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தி யம் -இன்ஸ்பெக்டர் செல்வம் தலை மையிலான போலீசார், காட்டு எடையாா் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் காட்டு எடையார் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (20), அரவிந்த் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- பாவளம் கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் லாரி டியூப்களில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- 6 லாரி டியூப்பில் பதுக்கி வைத்திருந்த சுமார் 360 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சங்கரா புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாவளம் கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் லாரி டியூப்களில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் துரை மணிகண்டன் (29) என்பவர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து துரைமணிகண்டனை கைது செய்த போலீசார், 6 லாரி டியூப்பில் பதுக்கி வைத்திருந்த சுமார் 360 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- இதில் பெருமாளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை அடுத்து பிரச்சினைக்குரிய நிலத்தில் பெருமாள் வீடு கட்டி வருகிறார்.
- அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
களளக்குறிச்சி:
சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு அருகே இளையனார்குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள்(46). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் சீனுவாசன் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்தது. இந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பெருமாளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை அடுத்து பிரச்சினைக்குரிய நிலத்தில் பெருமாள் வீடு கட்டி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு சீனுவாசன் உள்பட 3 பேர் பெருமாள் புதிதாக கட்டி வரும் வீட்டை கடப்பாரையால் இடித்து சேதப்படுத்தி அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாாின் பேரில் சீனுவாசன், ஏழுமலை மகன்கள் சிவக்குமார், ராஜதுரை, ரத்தினம் மகன் கோபி ஆகிய 4 பேர் மீது பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் சங்க ராபுரம்-பூட்டை சாலையில் உள்ள செல்போன் கடைக்கு சென்றார்.
- மினிலாரி அண்ணாமலை மீது எதிர்பாராதவிதமாக மோதியது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 34). மளிகைக்கடை நடத்தி வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சங்க ராபுரம்-பூட்டை சாலையில் உள்ள செல்போன் கடைக்கு சென்றார். பின்னர் அவர் கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்து விட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி அண்ணாமலை மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்கராபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அண்ணாமலையை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மீண்டும் மாட்டுக் கொட்டைகையில் மாடு களை கட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார்.
- சதீஷ் உள்பட 3 பேர் இரவோடு இரவாக திருடி சென்றதை ஒப்புக் கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் அருகே நெடு மானூர் பகுதியைச் சேர்ந்த வர் கோவிந்தராஜ். இவரது மனைவி கமலக்கோடி (வயது 48). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் வீட்டின் பின்புறம் மாட்டு கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மீண்டும் மாட்டுக் கொட்டைகையில் மாடு களை கட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார். இன்று காலை கமல கொடி எழுந்து சென்று பார்த்த போது மாட்டு கொட்டையிலிருந்த மாடுகளில் பசுமாடு ஒன்று காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கமலகொடி பசு மாட்டை பல்வேறு இடங்க ளில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கமலக்கொடி எலவனாசூர் போலீஸ் நிலை யத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் எலவனாசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்கு பதிவு செய்து மாட்டை திருடி சென்ற மர்ம கும்பலை தேடிவந்தார். இந்நிலையில் பரிந்தன் பகுதியில் ஏரிக்கரை தெருவில் உள்ள ஒரு வீட்டில் காணாமல் போன மாடு கட்டி வைக்கப்பட்டிருந்தது. உடனே போலீசார் அந்த வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த சதீஷ் (27) என்பவரிடம் விசாரித்த போது கமலக்கொடியின் மாட்டை சதீஷ் உள்பட 3 பேர் இரவோடு இரவாக திருடி சென்றதை ஒப்புக் கொண்டார். உடனே மாட்டை பறிமுதல் செய்த போலீசார் சதீஷை கைது செய்தனர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் 2 பேரை போலீ சார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- கோவில் உண்டி யலை உடைத்து பணத்தை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றதும் தெரியவந்தது.
- மர்ம நபர் காணிக்கை பணத்தை மீண்டும் கோவிலில் வீசி சென்றார்.
சங்கராபுரம் அருகே அரச ம்பட்டு கிராமம் மணி முத்தாறு அருகே பால தண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. கடந்த 12-ந் தேதி பூஜை செய்வதற் காக கோவில் பூசாரி சம்பத் கோவிலுக்கு சென்றபோது கோவில் கதவு உடைந்து கிடந்தததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோவில் உண்டி யலை உடைத்து அதில் இருந்த பணத்தை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றதும் தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் பூசாரி சம்பத் நேற்று வழக்கம்போல் கோவிலுக்கு பூஜை செய்வ தற்காக வந்தார். அப்போது கோவில் வளாகத்தில் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்ததை கண்டு வியப்படைந்தார். பின்னர் இது குறித்து ஊர் முக்கியஸ்தர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அதன் பேரில் சங்கராபுரம் போலீசாரும், ஊர் முக்கியஸ்தர்களும் விரைந்து வந்து கோவிலில் கிடந்த ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டு அவற்றை சேகரித்தனர். மொத்தம் ரூ.17 ஆயிரம் இருந்தது. விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் ஒருவாரம் கழித்து காணிக்கை பணத்தை மீண்டும் கோவிலில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை வீசி சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பங்காரம் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம் பெண்ணுக்கும் தாமோதரன் என்கின்ற ரவிக்குமார் (வயது 25) இன்ஜினியர் பட்டதாரி என்பவருடன் முகநூல் மூலமாக அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்கள் ஆன பின்னர் செல் நம்பரை பகிர்ந்து கொண்டு நட்பாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் தாமோ தரன் கூறியுள்ளார். உன்னு டைய அழகான புகைப்ப டங்களை அனுப்புங்கள் இயக்குனரிடம் காட்டுகி றேன் என்று கூறியுள்ளார்.
அந்த இளம் பெண் தன்னிடம் போட்டோ எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாமோதரன் எனக்கு போட்டோகிராபி தெரியும் என்றும் நான் நேரில் வந்து உன்னை அழகாக படம் பிடித்து இயக்குனருக்கு அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு சம்மதம் தெரி வித்த அந்தப் பெண்ணிடம் வீட்டின் முகவரியை கேட்ட றிந்தார். கடந்த நவம்பர் மாதம் 14-ந் தேதி அன்று மதியம் 12.30 மணியளவில் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து உன் வீட்டருகே அருகே தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்தப் பெண் தாமோதரனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பெண்ணிடம் போட்டோ எடுக்க வேண்டும் உன்னிடம் இருக்கும் உடையிலே அழ கான உடையை உடுத்திக் கொண்டுவா என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் சினிமா ஆசை உச்சத்திற்கு ஏற போட்டி ருந்த நகைகள் எல்லாம் கழட்டி வைத்து விட்டு அறையினுள் சென்றார். இதனை எதிர்பார்த்திருந்த தாமோதரன் நகைகள் மற்றும் செல்போனை எடுத்து க்கொண்டு அங்கி ருந்து மின்னல் வேகத்தில் சென்றுள்ளார்.
துணி மாற்றிக் கொண்ட இளம்பெண் வெளியில் வந்து பார்த்த பொழுது நகை, செல்போனை காண வில்லை. அங்கிருந்த தாமோ தரனையும் காண வில்லை. அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சின்ன சேலம் போலீஸ் நிலைய த்தில் இது குறித்து புகாரளி த்தார். வழக்கு பதிவு செய்த போலீ சார் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில் தனிப்படை அமைத்து தாமோதரனை தேடி வந்தனர்.
இந்நிலையில் செல் போன் நம்பரை வைத்து தாமோதரன் காரைக்கு டியில் இருப்பதை போலீ சார் கண்டுபிடித்தனர். காரைக்குடிக்கு விரைந்த சின்னசேலம் போலீசார் தாமோத ரனை மடக்கிப் பிடித்தனர். சின்னசேலம் போலீஸ் நிலை யத்திற்கு இன்று அழைத்து வந்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி சின்ன சேலம் சிறையில் அடைத்த னர்.
- கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ஆட்டுப்பட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன.
- 10 நாய்கள் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து கடித்து குதறியது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 55. இவர் அருகில் உள்ள தும்பரமேடு கிராமத்தில் ஆட்டுப்பட்டி வைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த ஆட்டுப்பட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன. இந்த நிலையில் கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கு சொந்தமான சுமார் 10 நாய்கள் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து அங்கு அடைக்கப்பட்டு இருந்த 20 குட்டி ஆடுகள் மற்றும் 4 பெரிய ஆடுகளை கடித்துக் குதறியதில் இறந்துவிட்டது. இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து சென்று ஆடுகளை நாய்கள் கடித்து குதறி இறந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ததுடன் இது தொடர்பாக நாராயணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






