search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minilari"

    • மோட்டார் சைக்கிளில் சங்க ராபுரம்-பூட்டை சாலையில் உள்ள செல்போன் கடைக்கு சென்றார்.
    • மினிலாரி அண்ணாமலை மீது எதிர்பாராதவிதமாக மோதியது

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 34). மளிகைக்கடை நடத்தி வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சங்க ராபுரம்-பூட்டை சாலையில் உள்ள செல்போன் கடைக்கு சென்றார். பின்னர் அவர் கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்து விட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி அண்ணாமலை மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்கராபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அண்ணாமலையை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×