என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே கோவில் நிலம் அளக்க பொதுமக்கள் எதிர்ப்பு
- அந்த இடத்தை சுற்றியிருந்த 11 குடும்பத்தினர், எங்கள் இடத்தை ஏன் அளக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மேலும், இவ்விடத்தை விட்டால் எங்களிடம் வேறு இடம் இல்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் பழம்பெருமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சொந்தமாக சர்வே எண்.351-ல் 10.5 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை அளப்பதற்காக இந்து அறநிலைத்துறையிலிருந்து வருவாய் துறை அதிகாரிகள் வந்தனர். அந்த இடத்தை சுற்றியிருந்த 11 குடும்பத்தினர், எங்கள் இடத்தை ஏன் அளக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோவிலுக்கு சொந்தமான இடத்தை அளக்கிறோம். இது தொடர்பாக உங்களிடம் ஏதாவது ஆவணம் இருக்கிறதா என்று வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கிருந்த மக்களிடம் கேட்டனர். அதற்கு அங்குள்ள 11 குடும்பத்தினர் எங்களிடம் வருவாய் துறை மூலம் வழங்கப்பட்ட பட்டா இருக்கிறது என்று கூறினர். அதைப் பொருட்படுத்தாத இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் அளந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், மேலும், இவ்விடத்தை விட்டால் எங்களிடம் வேறு இடம் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்களுக்கு இவ்விடத்தை வழங்க ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்