என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • தியாகதுருகம் அருகே பெங்களூர் போலீசாரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நவீன் பிரகாஷை தேடி வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகம்துருகம் அருகே சித்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பிரகாஷ் (வயது 25). இவர் தனது மனைவி ராஜேஸ்வரி (25) என்பவருடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது ராஜேஸ்வரி கெம்பை கவுடா போலீஸ் நிலையத்தில் கணவர் தன்னை கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நவீன் பிரகாஷை தேடி வந்தனர்.

    இந்நிலையில் பெங்க ளூர், கெம்பை கவுடா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மனோஜ் குரானா தலை மையிலான 3 போலீசார் நவீன் பிரகாஷை தேடி சித்தால் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற னர். அப்போது வீட்டில் இருந்த நவீன் பிரகாஷின் தாய் தையல்நாயகி (43), தங்கை பிரியா (24), தாத்தா அண்ணாமலை (76) ஆகியோர் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து திட்டி, தாக்கியதாகவும், மேலும் போலீசார் வந்த வாடகை கார் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தினர். இதில் காயம் அடைந்த போலீசார் சித்தன்ன கவுடா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து போலீசார் சித்தன்ன கவுடா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தையல்நாயகி, பிரியா, அண்ணாமலை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

    • ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாரியை ஓட்டி வந்த ரகோத்தமனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோ ட்டை பகுதி யில் கனரக லாரி ஒன்றில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் திருமாள் தலைமையில் தனிப்படை போலீசார் உளுந்தூர்பேட்டை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரியை போலீசார் மடக்கி சோதனை செய்ததில் 16 டன் ரேஷன் அரிசி 280 மூட்டைகளில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அந்த லாரியை ஓட்டி வந்த உளுந்தூர்பேட்டை அருகே கிளியூர் மேற்கு தெருவை சேர்ந்த ரகோத்தமன் (வயது 27) கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பள்ளிக்கு சென்ற 3 பேரும் வீடு திரும்பவில்லை.
    • சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூ ர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹாஜிம்பாஷா மகன் யாகூப் (வயது 13) அரசு பளளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். முகமது அலி மகன் அமீர் அலி (13), ரபீக் மகன் கையீப் (13). இவர்கள் 2 பேரும் தியாகதுருகம் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். 

    நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற 3 பேரும் வீடு திரும்பவில்லை. பள்ளி முடித்து மசூதிக்கு சென்ற தொழுதுவிட்டு வீட்டிற்கு வருவார்கள் என்று காத்திருந்த பெற்றோருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. மாணவர்கள் படிக்கும் பள்ளி, அருகி லுள்ள மசூதிகள் என எங்கு தேடியும் 3 மாணவர்க ளையும் காண வில்லை. இதுகுறித்து 3 மாணவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், களமருதூர் கிராமத்திற்கு வந்த திருநாவலூர் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்தினர். அதன்படி அப்பகுதி பஸ் நிறுத்துமிடத்திலிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 3 மாணவர்களும் உளுந்தூர்பேட்டை செல்லும் பஸ்சில் ஏறி சென்றது தெரியவந்தது. இந்த மாணவர்களுடன் பயிலும் மாணவர்களிடம் விசாரித்த போது, 3 பேரும் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி கொண்டிருந்தது போலீ சாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து 3 மாண வர்களின் பெற்றோரை தொடர்பு கொண்ட போலீசார் சென்னையில் உள்ள அவர்களின் உறவி னர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினர். மாணவர்கள் அங்கு வந்தால் உடனடியாக தகவல் கொடுக்க அறிவுறுத்தினர். மேலும், இத்தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் பரவியது. இந்நிலையில் இந்த 3 மாணவர்களும் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ளதாக ஒரு மாணவனின் உறவினர் திருநாவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சென்னை ராயபுரம் சென்ற திருநாவலூர் போலீசார் 3 மாணவர்களையும் மீட்டனர். சென்னையில் மீட்க ப்பட்ட மாணவ ர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ், துணை சுப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெ க்டர் அசோகன் மற்றும் போலீசார் அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன மாணவர்கள் 3 பேரை திருநாவலூர் போலீசார் 24 மணி நேரத்தில் மீட்டது போலீசாருக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    • போலீசார் மூலக்காடுபகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் மூலக்காடுபகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்வராயன்மலை பெரம்பூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது23) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே அவரை கைதுசெய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • செந்தில்ராஜா பெங்களூருவில் தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
    • சில நிமிடங்களில் காா் என்ஜீன் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்ராஜா (வயது42). பெங்களூருவில் தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை ராமமூர்த்தி இறந்து விட்ட நிலையில், 8-வது நாள் துக்க நிகழ்ச்சிக்காக செந்தில்ராஜா குடும்பத்துடன் காரில் மேலப்பழங்கூருக்கு வந்து கொண்டிருந்தார். 

    நூரோலை கிராமம் வழியாக வந்த போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அடுத்த சில நிமிடங்களில் காா் என்ஜீன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்ராஜா உடனடியாக காரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் இருந்து அவசர அவசரமாக இறங்கி ஓடினார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் தண்ணீரை காரின் மீது ஊற்றி தீயை அணைத்தனர். தகவலறிந்து வந்த ரிஷிவந்தியம் போலீசார் தீயில் சேதம் அடைந்த காரை பார்வையிட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கலவரத்தின் போது பள்ளி சொத்துகள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்தனர்.
    • சொத்துகளை சேதப்படுத்தியதாக மேலும் 3 பேர் கைது

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளி சொத்துகள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்ததோடு, போலீசார் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்தை தூண்டி யவர்கள் மற்றும் கலவ ரத்தில் கலந்து கொண்டு பள்ளிசொத்துகளை சேதப்படுத்தியவர்களை சிறப்பு புலனாய்வு குழுவி னர் கைது செய்து வருகின்றனர். 

    அந்த வகையில் இது தொடர்பாக இதுவரை 436 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலை யில் கலவரத்தின் போது பள்ளி சொத்துகளை சேதப்ப டுத்தியதாக கள்ளக் குறிச்சி அருகே லட்சியம் கிரா மத்தை சேர்ந்த மணி கண்டன் (வயது 32), இரு சக்கர வாகனங்களை சேதப்டுத்தியதாக சங்கரா புரம் தாலுகா மூரார்பா ளையம் கிராமத்தை சேர்ந்த மதுபாலன் (22), போலீஸ் வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சின்ன சேலம் தாலுகா ராயர்பா ளை யத்தை சேர்ந்த சீராளன் (28) ஆகிய 3 பேரை வீடியோ ஆதா ரங்களை வைத்து கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

    • சீதேவி, கல்சிறுநாகலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் வந்து செல்கின்றனர்.
    • பலமுறை கோரிக்கை விடுத்தும் தார் சாலை போடவில்லை, இதனால் அவ்வப்போது விபத்து ஏற்படுவதாகவும் கூறி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட உதயமாம்பட்டு கிராமத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தியாகதுருகத்திலிருந்து உதயமாம்பட்டு வரை செல்லும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் தார்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

    இந்த சாலையின் வழியாக அந்தியூர், சிக்காடு, சீதேவி, கல்சிறுநாகலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக ஜல்லிகள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற உதயமாக்கப்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உதயமாம்பட்டு பிரிவு சாலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது பலமுறை கோரிக்கை விடுத்தும் தார் சாலை போடவில்லை, இதனால் அவ்வப்போது விபத்து ஏற்படுவதாகவும் கூறி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கூறி விரைந்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கல்லாநத்தம் கிராமத்தில் ராஜா என்பவர் அவரது வீட்டில் வைத்து சாராயம் விற்று வந்தது தெரியவந்தது.
    • வீட்டின் பின்புறம் சாராயம் விற்றுக் கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பாண்டியன் குப்பம் கல்லாநத்தம் தகரை, காட்டனத்தல், கிராமங்களில் சின்னசேலம் போலீசார், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொது கல்லாநத்தம் கிராமத்தில் ராஜா (வயது 37) என்பவர் அவரது வீட்டில் வைத்து சாராயம் விற்று வந்தது தெரியவந்தது.

    அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். ராஜா மீது வழக்கு பதிவு செய்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல் காட்டனத்தல் கிராமத்தில் வெங்கடேசன் என்பவரின் மனைவி சிவகாமி (38) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் சாராயம் விற்றுக் கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசினை பெறுவதற்கு வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஒரு நாளைக்கு 200 டோக்கன் விதம் இன்று முதல் வருகின்ற 8ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கம் முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசினை பெறுவதற்கு வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    அதே போல் சின்ன சேலத்திலும் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறார்கள். சின்னசேலத்தில் இலங்கை முகாம் உட்பட மொத்தம் 10 கடைகளில் 9000த்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. அனைத்து அட்டை தாரர்களுக்கும் இன்று முதல் 8-ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசினை பெறுவதற்கு ரேஷன் கடைகளில் ஒரே சமயத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் மூலம் பொங்கல் பரிசுகள் விநியோகம் செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு ரேஷன் கடையிலும் ஒரு நாளைக்கு 200 டோக்கன் விதம் இன்று முதல் வருகின்ற 8ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. டோக்கனில் தேதி நேரம் போன்றவை குறிப்பிட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியும், நேரத்தையும் பார்த்து மக்கள் ரேஷன் கடைக்கு சென்று பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ பச்சரிசி முழு கரும்பு ஒன்று போன்றவற்றை வழங்கப்படுகிறது. பத்தாம் தேதி முதல் 13-ந் தேதி வரை அதாவது நான்கு நாட்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கப்பட உள்ளது.

    • கொரோனா காலத்தில் இருந்து மீண்டு வந்த மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.5000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
    • என்றென்றும் ஏழை மக்களுக்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருக்கும்.

    திருவெண்ணைநல்லூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட விருத்தாச்சலம் மெயின் ரோட்டில் நரிக்குறவர் சமுதாய மக்கள் தங்குவதற்கு வீடு இல்லாமல் தவித்து வந்தனர். இதனை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு தனது சொந்த செலவில் நரிக்குறவ மக்களுக்கு வீடு கட்டி முடித்துள்ளார். இந்த 20 வீடுகளை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    2023-ம் ஆண்டின் சிறப்பான தொடக்கமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன். அ.தி.மு.க சார்பில் சிறப்பான வீடுகளை கட்டிக் கொடுத்த மாவட்ட செயலாளர் குமரகுருவை நான் பாராட்டுகிறேன். அனைவருக்கும் வீடு வேண்டும். உடுத்த உடை வேணும். சாப்பிட உணவு வேண்டும். இந்த மூன்றையும் வழங்கியவர் எம்.ஜி.ஆர். அதற்குப் பிறகு ஜெயலலிதா தொடர்ந்து பணியாற்றினார்.

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம். 20 நரிக்குறவர்களின் குடும்பங்களில் நாம் சிரிப்பை காண்கிறோம். இதுதான் அ.தி.மு.க.. இந்தியாவிலேயே உயர் கல்வி படிப்பதில் முதலிடம் தமிழ்நாடு. இதை உருவாக்கி காட்டியது அதிமுக.

    அரசு பொங்கல் தொகுப்பு என்கிற பெயரில் தொகுப்பு பொருட்களை தற்போது அறிவித்தார்கள். ஆனால் அதில் கரும்பை தவிர்த்து விட்டார்கள். கரும்பு தான் நமது பாரம்பரிய பழக்கம். ஆனால் கரும்பை கூட வழங்காமல் நிராகரித்து விட்டார்கள். ஒட்டு மொத்த விவசாயிகளின் கோரிக்கையை அ.தி.மு.க. ஏற்று போராட்டத்தினை அறிவித்தது.

    அதன்பின்னர்தான் தற்போது கரும்பையும் பொங்கல் தொகுப்பில் சேர்த்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் பொங்கல் தொகுப்பு என்கிற திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2500 அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அறிக்கை கொடுத்தார். ஆனால் தற்போது 1,000 ரூபாய் தான் வழங்குகிறார்.

    கொரோனா காலத்தில் இருந்து மீண்டு வந்த மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.5000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். என்றென்றும் ஏழை மக்களுக்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மேல் சாதி சமூக மக்கள் மட்டுமே வழிபாடு செய்து வருகின்றனர்.
    • போலீஸ் பாதுகாப்புடன் பூஜை சாமான்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

     கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே எடுத்த வாய்நத்தம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் அல்லாமல் பிற மேல் சாதி சமூக மக்கள் மட்டுமே வழிபாடு செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த கோவிலில் இதுநாள் வரையில் ஆதிதிராவிடர் மக்கள் உள்ளே நுழைந்து சாமி கும்பிட வில்லை என்று கூறப்படுகிறது. இந்த கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட வேண்டும் என்ற ஆவல் ஆதிதிராவிட மக்களுக்கு இருந்து வந்த நிலையில் இது நீண்ட காலமாகவே தடுக்கப்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் இந்த கோவிலுக்குள் நுழைந்த சாமி கும்பிட வேண்டும் என ஆதிதிராவிட சமூக மக்கள் முடிவெடுத்து கடந்த 6 மாத காலமாக போராடி வந்துள்ளனர். இதற்காக சமீபத்தில், இதனால் எழுந்த பிரச்சனையின் காரணமாக சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் கள்ளக்கு றிச்சி கோட்டாட்சியர் அலு வலகத்திலும் சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட மக்கள் கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற்று வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட மக்கள் இந்த வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ளே நுழைந்து சாமி கும்பிடுவதற்கு இன்று ஜனவரி 2ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 300 க்கும் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். தற்போது டிஐஜி யாக பதிவி உயர்வு பெற்றுள்ள பகலவன், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீ நாதா ஆகியோரது தலைமையில் அதிரடி படையினர் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே ஆதிதிராவிடர் சமூக மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பகுதியில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பூஜை சாமான்களுடன் ஊர்வலமாக வந்து வரதராஜா பெருமாள் கோவிலுக்கு உள்ளே கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் நுழைந்து சாமி கும்பிட ஆரம்பித்தனர். கோவிலுக்குள் இதுவரை வராத ஆதி திராவிட சமூக மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் கோவி லுக்குள் நுழைந்து பெருமா ளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

    அப்போது ஆதிதிராவிட சமூக மக்கள் அனைவரும் பரவசமாக காணப்பட்டனர். ஆதிதிராவிடர் சமூக மக்கள் சாமி கும்பிடு வதற்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வரு கின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் செல்வி பவித்ரா சின்னசேலம் வட்டாட்சியர் இந்திரா உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்களும் எடுத்தவாய் நத்தம் கிராமத்திற்கு வந்து கண்காணித்து வந்தனர்.

    • வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவசாய நிலத்துக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயக்கம் நிலையில் கிடந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் பார்த்து அவரை உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அடுத்த குவாகம் கூத்தாண்டவர் கோவில் அருகில் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரசன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் சவுந்தர்யா என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 3 குழந்தை இருந்து வந்தது. இந்த நிலையில் வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் வேலைக்குச் சென்ற போது விவசாய நிலத்துக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயக்கம் நிலையில் கிடந்தார் அக்கம் பக்கத்தினர் பார்த்து அவரை உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர்.

    அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டி யம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்த னர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்த இந்த சம்பவம் குறித்து அரசன் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

        

    ×