என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருநாவலூர் அருகே மதுபோதை கணவனால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை
- திருநாவலூர் அருகே மதுபோதை கணவனால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோக ஜோதி விசாரணை செய்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ் விவசாயி இவரது மனைவி ஆரோக்கிய மேரி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அற்பு தராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சல் இருந்த ஆரோக்கியமேரி வீட்டில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் சம்பவ இடத்திற்கு சென்று ஆரோக்கியமேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழு ப்புரம் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோக ஜோதி விசாரணை செய்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






