என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • செல்வம் (வயது 42) என்பவரை கைது கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்
    • சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கொளஞ்சி (41) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் அரசம்பட்டு, ஊராங்காணி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசம் பட்டுகுளம் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (வயது 42) என்பவரை கைது கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஊராங்காணி கிராமத்தில் வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கொளஞ்சி (41) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
    • நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு முதல் அமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான போட்டியில் பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சூர்யா கலந்து கொண்டார். இவர் 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாம் இடமும், குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவிற்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • இவர்களுக்கிடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஞானவேல், இவரது மனைவி செல்வி ஆகிய 2 பேரும் சேர்ந்து மைக்கேலை தாக்கியதாக கூறப்படுகிறது.
    • கணவன், மனைவி 2 பேர் மீதும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில் துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன்கள் மைக்கேல் மற்றும் ஞானவேல். இவர்களுக்கிடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ஞானவேல், இவரது மனைவி செல்வி ஆகிய 2 பேரும் சேர்ந்து மைக்கேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கணவன், மனைவி 2 பேர் மீதும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    • சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது42), ரகு(38), முருகன்(29) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    • போலீசார் அவா்களிடம் இருந்து 37 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் குளத்தூர் பகுதிகளில் தீவிர ரோந்துபணியில் இருந்தனர். அப்போது வெவ்வேறு இடத்தில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது42), ரகு(38), முருகன்(29) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களிடம் இருந்து 37 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்

    • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியல் இன மக்களும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • தற்போது நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கி தரும்படி கோரிக்கை வைத்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பாண்டியன்குப்பம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாக உள்ள சோலையம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியல் இன மக்களும் இடையே தகராறு ஏற்பட்டது.பட்டியலின மக்கள் சோலையம்மன் கோவிலில் வழிபாடு செய்ய கூடாது என பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கூறினர். இதைய டுத்து நாங்களும் சாமி கும்பிடு வோம் என பட்டியல் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடினர். இதனால் பாண்டியன்குப்பம் கிராமத்தில் இருவேறு சமூகத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.ஜாதி கலவரம் ஏற்படா மல் இருப்பதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சி நிர்வாகமும், காவல் துறையும், வருவாய்த் துறையும் பிரச்சனைக்குரிய பாண்டியன்குப்பம் கிரா மத்தில் 144 தடை உத்தரவை பிரப்பித்தனர். கடந்த 2012- ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தற்போது வரை நீடிக்கிறது.

    இந்த நிலையில், பாண்டி யன்குப்பம் கிராமத்தில் பொதுமக்கள் ஒன்று கூட தடையும், கிராம சபை கூட்டம் நடத்த தடை, அரசு நலத்திட்ட உதவிகள் அளிக்கும் நிகழ்ச்சிக்கு தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை பாண்டியன் குப்பம் கிராம மக்கள் சந்தித்து வருகிறார்கள். தங்கள் கிராமத்தில் ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு மன வேதனையில் உள்ளனர். இதனை யொட்டி தற்போது பாண்டியன்குப்பம் கிராமத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூகத்தினர் தங்கள் கிராமத்தில் ஏற்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க முடி வெடுத்தனர்பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்த இரு வேறு சமூகத்தி னரும் தங்களுக்குள் சமாதானம் அடைந்து கடந்த 2 தினங்க ளுக்கு முன்னர் பிப்ரவரி 22-ஆம் தேதி கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் சென்று கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் செல்வி பவித்ரா, சின்னசேலம் வட்டாட்சியர் இந்திரா, மற்றும் வருவாய்த்துறை யினருடன் பேசி பாண்டி யன்குப்பம் கிராமத்தில் இருதரப்பு சமூக மக்களும் இனி பிரச்சினைகள் இன்றி சமத்துவமாக, சகோதரத்துவமாக தங்கள் கிராமத்தில் உள்ள சோலை யம்மன் கோவிலில் தேர் திருவிழாவை நடத்திக் கொள்கி றோம் என ஒப்புதல் அளித்து, பாண்டியன் குப்பம் கிராமத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கி தரும்படி கோரிக்கை வைத்தனர்.பாண்டியன்குப்பம் கிரா மத்தில் கடந்த 12 ஆண்டு களாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூக மக்கள் சோலையம்மன் கோவில் பிரச்சினை காரணமாக வேறு பட்டு கிடந்த நிலையில் தற்போது ஊர் நலனுக்காக தங்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டு 144 தடை உத்தரவை நீக்க கோரி அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர்.

    • தியாகதுருகம் பகுதியில் பனை மர கள் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது..
    • போதை அதிகமாக இருப்பதற்க்காக போதை பவுடர் கலக்கின்றனர். இதனால் கள் குடிப்பவர்களுக்கு தலைவலி ஏற்படுகிறது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராய ன்மலை, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை போலீஸ் துறையினர் அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து சாராய ஊரல்களை அழித்து வருகின்றனர். சாராயம் காய்ச்சும் மற்றும் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம் பகுதியில் பனை மர கள் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.அதன்படி தியாகதுருகம் பகுதியில் கொங்கராயபாளையம், சித்தலூர், கண்டாச்சி மங்கலம் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பனை மரங்களில் பதநீர் இறக்குவதாக கூறிவிட்டு கள் இறக்கப்படுகிறது. இவ்வாறு இறக்கப்படும் கள் ஜக்கு ஒன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகாலை 6 மணி முதல் 9 மணி வரை சுமார் 3 மணி நேரத்திற்குள் கள் விற்பனை முடிந்து விடுகிறது. சாராயம் மற்றும் மதுபாட்டில்களை விட விலை குறைவாக உள்ளதாலும், கிராமங்களில் எளிதில் கிடைப்பதாலும் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் கள் குடிக்க சென்றுள்ளனர்.இவ்வாறு பனை மரங்களில் கள் இறக்கி விற்பவர்கள், குடிப்பவர்களுக்கு போதை அதிகமாக இருப்பதற்க்காக போதை பவுடர் கலக்கின்றனர். இதனால் கள் குடிப்பவர்களுக்கு தலைவலி ஏற்படுகிறது. இதனால் கள் குடிப்பவர்கள் மட்டுமின்றி அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் அவதியடைகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், இது குறித்து ஆய்வு செய்து கள் இறக்குபவர்கள், அதை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • விவசாயிகொளஞ்சியின் மனைவி பொரப்பா. இவரது மாடு அதே பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 42) என்பவரின் வயலில் உள்ள கத்திரி செடியை மேய்ந்ததாக கூறப்படுகறிது..
    • செந்திலும், முனிவாழை கிராமத்தை சேர்ந்த குமரேசன் (28) ஆகியோர் சேர்ந்து கொளஞ்சி யை திட்டி தாக்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    ரிஷிவந்தியத்தை அடுத்த வேடநத்தம் பகுதியில் வசித்து வருபவர் கொளஞ்சி. விவசாயி. அவரது மனைவி பொரப்பா. இவரது மாடு அதே பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 42) என்பவரின் வயலில் உள்ள கத்திரி செடியை மேய்ந்ததாக கூறப்படுகறிது. இதனால் செந்திலும், முனிவாழை கிராமத்தை சேர்ந்த குமரேசன் (28) ஆகியோர் சேர்ந்து கொளஞ்சி யை திட்டி தாக்கினர்

    . இது குறித்து கொளஞ்சி யின் மனைவி பொரப்பா கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் மற்றும் குமரேசன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நில பிரச்சினை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.
    • இரு தரப்பினரும் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அருகே பல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் குடும்பத்திற்கும், அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரது குடும்பத்திற்கும் நில பிரச்சினை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    பின்னர் இரு தரப்பினரும் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் ஏழுமலை மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மனைவி வசந்தா, மூர்த்தி, மணி இவரது மனைவி சுகன்யா ஆகியோர் மீதும், அண்ணாமலை மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, இவரது மனைவி லதா, மகன்கள் அருண், சரவணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சமுத்திரத்தில் சட்டவிரோதமாக கள் இறக்கியவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
    • விற்பனைக்காக வைத்தி ருந்த 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தா சமுத்திரத்தில் சட்டவிரோதமாக கள் இறக்கியவர் கைது செய்யப் பட்டுள்ளார். கீழ்குப்பம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் பெத்தாசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெத்தாசமுத்திரம் பெரு மாள் கோவில் அருகே பனை மரத்தில் பானை கட்டி இருந்ததை பார்த்த னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பானையின் உள் பகுதியில் சுண்ணாம்பு தடவப்பட்டு பதநீர் என்ற பெயரில் சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.

    பனை மரத்தில் கட்டப் பட்டிருந்த பானைகளை போலீசார் உடைத்தனர். இதையடுத்து பதநீர் என்ற பெயரில் கள் இறக்கி விற்பனை செய்த பெத்தா சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் (வயது 55) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்தி ருந்த 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பாரதி தேவியாகுறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார்.
    • பாரதி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராய பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடுத்த வாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் இவருக்கு பொன்மொழி என்ற மனைவியும் பாரதி (வயது 19) என்ற மகளும் உள்ளனர். பாரதி தேவியாகுறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற பாரதி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பாரதியை தேடினர். அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் பாரதியின் தாயார் பொன்மொழி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பாரதியை தேடி வருகின்றனர்.

    • அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது.
    • நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது .

    கள்ளக்குறிச்சி:

    அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனால் அரியலூர், அத்தியூர், தொழுவந்தாங்கல், கடுவனூர், பெரிய கொள்ளியூர், சின்ன கொள்ளியூர், வடமாமந்தூர், ஈருடையாம்பட்டு, சுத்தமலை, அத்தியந்தல், வடபொன்பரப்பி, சவுரியார்பாளையம், அரும்பராம் பட்டு, இளையனார்குப்பம், ஓடியந்தல், வானாபுரம், சீர்பனந்தல், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, பகண்டை கூட்டு ரோடு, மரூர், கடம்பூர், மையனூர், ஏந்தல், பெரிய பகண்டை, எகால் ஆகிய கிராமங்களில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என சங்கராபுரம் பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சின்னசேலம் அடுத்த கல்வராயன் மலைப் பகுதியில் சாராய ஊரல்கள் வைக்கப்பட்டு, கள்ளச் சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • அரசால் தடை செய்யப்பட்ட சாராயம், கள் மற்றும் போதைப் பாக்குகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் பதநீர் சீசன் தொடங்கி யுள்ளது. அதன்படி சின்ன சேலம் அருகே உள்ள வி. அலம்பலம், பாக்கம்பாடி, தோட்டப்பாடி, கள்ளா நத்தம், தகரை, நாகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்கப்படுறது.தமிழக அரசு பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறகக தடை விதித்துள்ளது. அதே சமயத்தில் பதநீர் இறக்க தடையில்லை. அனுமதி ஏதும் பெறத் தேவையில்லை. ஏனெனில் பதநீர் என்பது போதையற்ற ஆரோக்கிய பானமாகும்.இதனை பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் பனை மரத்தில் இருந்து பதநீரை இறக்கி, போதை தரும் பவுடர்களை கலந்து விற்பனை செய்கின்றனர். மேலும், தென்னை மரங்களில் பல்லாக்களை கட்டி நேரடியாகவே கள் இறக்கி விற்பனை செய்கின்றனர்.

    இதனை அருந்தும் விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் ஒருசில மாணவர்கள் போதையிலேயே இருந்து வருகிறைனர் ஏற்கனலே, சின்னசேலம் அடுத்த கல்வராயன் மலைப் பகுதியில் சாராய ஊரல்கள் வைக்கப்பட்டு, கள்ளச் சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பதநீர் என்ற பெயரில் கள் விற்பனையும் சின்னசேலம் பகுதியில் படு ஜோராக நடக்கிறது.போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கவும், இது குறித்து பொது மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தவும் தமிழக போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சின்னசேலம் பகுதியில் பதநீர் என்ற பெயரில் கள் விற்பனையும், கள்ளச் சாராய விற்பனையும் நடக்கிறது.மேலும். ஒரு சில வாரங்களில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆரம்பிக்க உள்ளன. வீட்டில் கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காலையிலேயே பதநீர் என்ற பெயரில் விற்கப்படும் கள் குடிக்கின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறி தேர்வுக்கு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனை தடுக்க போலீஸ் துறை தனிப்படை அமைத்து சின்னசேலம் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட சாராயம், கள் மற்றும் போதைப் பாக்குகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

    ×