என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சங்கராபுரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
    • பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரத்தை சேர்ந்தவர் அசலன்(55) கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த புளியம் மரத்தில் புளியம்பழம் பறிக்க ஏறினார். அப்போது மரக்கிளை மீது நின்று கொண்டிருந்த அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசலன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்- இன்ஸ்ெபக்டர்லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ரம்யா தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்
    • சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் ரம்யாவின் தாய் கல்பனா புகார் அளித்தார்

    கள்ளக்குறிச்சி:

    பெங்களூரில் வசித்து வருபவர் கிருஷ்ணராஜ். இவருடைய மனைவி கல்பனா. இவர்களுக்கு ரம்யா (வயது 21)என்ற மகள் உள்ளார். இவர் சின்னசேலம் அருகே உள்ள இந்திலி கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி சேலம் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. .27 -ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் கடந்த 21 -ந் தேதி கல்லூரிக்கு சென்ற ரம்யா வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிந்த இடங்களில் தேடிப் பார்த்து எங்கேயும் கிடைக்காததால் சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் ரம்யாவின் தாய் கல்பனா புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சின்னசேலம் போலீசார் மாயமான கல்லூரியின் மாணவி ரம்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • தேவராஜ் மனைவி ராணி (வயது 55). இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நிலத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார்.
    • தீயணைப்பு வீரர்களுடன் சம்பவஇடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மனைவி ராணி (வயது 55). இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நிலத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார். இதனைக் கண்ட விவ சாயத் தொழிலாளர்கள் இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். 

    கிணற்றில் மிதந்த ராணியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்து போனவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் ஆறுமுகம் (வயது 62)பரிகம் செக்போஸ்ட் அருகே ஆறுமுகம் தனியே வசித்துவருகிறார் .மனைவியை பார்த்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
    • பீரோவும் உடைக்க ப்பட்டு அதிலிருந்த 8.5 பவுன் நகை கொள்ளையடி க்கப்பட்டி ருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கச்சிராயபாளையம் அருகே பரிகம் செக்போஸ்ட் அருகே ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் ஆறுமுகம் (வயது 62) வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும் செந்தில்குமார் என்ற மகனும் உள்ளனர். இவரது மகன் வெளிநாட்டிலும், மனைவி கள்ளக்குறிச்சியில் வசித்து வருகின்றனர். பரிகம் செக்போஸ்ட் அருகே ஆறுமுகம் தனியே வசித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சிக்கு சென்று மனைவியை பார்த்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்க ப்பட்டு அதிலிருந்த 8.5 பவுன் நகை கொள்ளையடி க்கப்பட்டி ருந்தது. மேலும், வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த 4 சி.சி.டி.வி. கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், சி.சி.டி.வி. விடியோக்களை சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதை கண்டு ஆறுமுகம் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமசாமி மகன் சசி (வயது 23), .நரசிம்மமூர்த்தி மகள் பிரகத்தி (22) என்பவக்கும் காதல் ஏற்பட்டது. இவரது காதலுக்கு பிரகத்தியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக
    • கடந்த 7-ந் தேதி குஞ்சரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சசி (வயது 23), இவர் கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் சசிக்கும் கர்நாடக மாநிலம் கெங்கேரி மாவட்டம் கன்சந்த்ராவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி மகள் பிரகத்தி (22) என்பவக்கும் காதல் ஏற்பட்டது. இவரது காதலுக்கு பிரகத்தியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து காதலர்கள் இருவரும் கடந்த 4- ந் தேதி சசியின் சொந்த ஊரான பூண்டி கிராமத்திற்கு வந்தனர். தொடர்ந்து கடந்த 7-ந் தேதி குஞ்சரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரகத்தி மனு அளித்தார். மனுவில் கடந்த 6- ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், தனது வீட்டில் என்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 7-ந் தேதி நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் எனது பெற்றோரும் உறவினர்களும் எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே எனக்கும், கணவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. காதல் ஜோடிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புளியங்கொட்டை, கொடியனூர் ஆகிய கிராமங்களில் 2 வீடுகளின் பின்புறம் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்தபழனியம்மாள் (வயது 56), கொடியனூரை சேர்ந்த சென்னம்மாள் (37) ஆகிய 2 பேரையும் ேபாலீசார் கைது செய்தனர்.
    • அவர்களிடமிருந்து 40 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் புளியங்கொட்டை, கொடியனூர் ஆகிய கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள 2 வீடுகளின் பின்புறம் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்த புளியங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது 56), கொடியனூரை சேர்ந்த சென்னம்மாள் (37) ஆகிய 2 பேரையும் ேபாலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • செயற்கை உரங்களை அகற்றி இயற்கை உரங்களை போட்டு விவசாயத்தை காக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
    • திருநாவலூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மயிலாடி கிராமத்தைச் சேர்ந்தவர்பிரதாப் லிவி (வயது 25) இவருடைய மனைவி அனு ஸ்ரீ.இவர்கள் விவசாயத்தை காப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாட்டு வண்டியில் குமரியில் இருந்து சென்னைக்கு பயணமாக புறப்பட்டனர். குழந்தைகளோடு கடந்த ஜனவரி 11-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டு ஒரு நாள் ஒன்றுக்கு 20 கிலோ மீட்டர் வரை செல்கிறார்கள். பின்னர் மாட்டு வண்டியை அங்கு நிறுத்தி இயற்கை விவசாயத்தை காப்போம். மருந்தில்லா உணவை கொடுப்போம். வரும் சந்ததிக்கு நோயில்லாத வாழ்க்கையை வலுப்படுத்துவோம்.

    செயற்கை உரங்களை அகற்றி இயற்கை உரங்களை போட்டு விவசாயத்தை காக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் நாட்டு காளை மாட்டு இனங்களை காக்க வேண்டும். வெளிநாடு மாடுகள் இனத்தை அடியோடு துரத்தி அடிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

    இந்த மாட்டு வண்டி பயணத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று ஒரு நாள் முழுவதும் விவசாயத்தைப் பற்றி எடுத்துரைத்து அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரிடம் மனுவாக அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    • ஏந்தல் மயானம் அருகே செல்லும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவ சாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட் டது.
    • பகண்டைகூட்டுரோடு போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சிமாவட் டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு அடுத்த ஏந்தல் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரி நிரம்பும்போது, உபரி நீர் மரூர் ஏரிக்கு செல்லும் வகையில் வாய்க்கால் உள்ளது  ஏந்தல் மயானம் அருகே செல்லும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவ சாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட் டது. இ தனால் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மோகன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் உயர்நீதி மன்றம் வாய்க்கால் ஆக்கி ரமிப்பை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை யினருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சங்கராபுரம் பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பிரசாந்த் மேற்பார்வையில் பகண்டைகூட்டுரோடு போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

    இந்த பணியின்போது, ரிஷிவந்தியம் வருவாய் ஆய்வாளர் சங்கீதா மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • மணிமேகலை (வயது 20) . இவர் சேலம் மாவட்டம் தனியார் கல்லூரியில்3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். மணிமேகலை நேற்று தோழியின் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உறவினர் வீடுகளிலும் அருகில் உள்ள இடங்களில் தேடினர்,
    • தேடிப் பார்த்தும் கிடைக்காததால்ர் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மணிமேகலை தாய் சாந்தி புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. இவருடைய கணவர் கோம்பையன். இவர்களுக்கு மணிமேகலை (வயது 20) என்ற மகள் உள்ளார். இவர் சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள தனியார் கல்லூரியில்3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மணிமேகலை நேற்று தோழியின் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உறவினர் வீடுகளிலும் அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால்ர் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மணிமேகலை தாய் சாந்தி புகார் அளித்தா. போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமேகலையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ஜனனி (வயது 21) இவர் மெடிக்கலில் பணிபுரிந்து வருகிறார். தன்னு டன் பணிபுரியும் மணி கண்டனுடன் வீட்டிற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தபோது,எதிர்பா ராத விதமாக 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ளானது
    • இதில்5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் ஜனனி (வயது 21) இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள மெடிக்கலில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துக் கொண்டு தன்னு டன் பணிபுரியும் மணி கண்டனுடன் திம்மாபுரம் கிரா மத்தில் உள்ள வீட்டிற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தார். சின்னசேலம் மின்சார அலுவலகம் அருகே சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர் 

     அப்போது தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் தனது இருசக்கர வாகனத்தின் பின்னால் பேரக்குழந்தைகளான பார்கவி (வயது 12)வெற்றி மாறன் (வயது 7)ஆகியோ ருடன் இருசக்கர வாக னத்தில் வந்தார். எதிர்பா ராத விதமாக 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ளானது. இதில்5 பேரும் படுகாயம் அடைந்தனர். 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 5பேரும் சேர்க்கப்பட்டனர். ன்னர் ஜனனியை மட்டும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை ஜனனி பரிதாப மாக இறந்து போனார். இது குறித்து ஜனனி தந்தை சின்ன துரை கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சங்கராபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை சங்கராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது.
    • திடீரென கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்ய தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் கன மழையாக பெய்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை சங்கராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது. இந்த நிலை யில் சங்கராபுரம் பகுதியில் திடீரென கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்ய தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் கன மழையாக பெய்தது.

    இதனால் சங்கராபுரம் பஸ் நிலையம், கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதி களில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது. திடீர் மழையால் பாதசாரிகள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். இதே போல் பகண்டை கூட்டு ரோடு, அரியலூர், வானபுரம், பகுதியிலும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.

    • உளுந்தூர்பேட்டை அருகே உள்ளஎறஞ்சி காலனியில் அமராவதி கூரை வீடு உயர்மின்னழுத்தத்தின் காரணமாக முற்றிலுமாக எரிந்துவிட்டது
    • எடைக்கல் போலீஸ் நிலையம் சார்பில் நிவாரணம் (அரிசி, காய்கறிகள், பாத்திரம், துணி மற்றும் படுக்கை விரிப்புகள்) வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளஎறஞ்சி காலனியில் அமராவதி கூரை வீடு உயர்மின்னழுத்தத்தின் காரணமாக முற்றிலுமாக எரிந்துவிட்டது . இது குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அமராவதி குடும்பத்தினரை வரவழைத்து எடைக்கல் போலீஸ் நிலையம் சார்பில் நிவாரணம் (அரிசி, காய்கறிகள், பாத்திரம், துணி மற்றும் படுக்கை விரிப்புகள்) வழங்கப்பட்டது.

    ×