என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கோவிலூர் அருகே கிணற்றில் விழுந்து மூதாட்டி தற்கொலை? போலீசார் விசாரணை
- தேவராஜ் மனைவி ராணி (வயது 55). இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நிலத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார்.
- தீயணைப்பு வீரர்களுடன் சம்பவஇடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மனைவி ராணி (வயது 55). இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நிலத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார். இதனைக் கண்ட விவ சாயத் தொழிலாளர்கள் இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
கிணற்றில் மிதந்த ராணியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்து போனவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






