என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    கட்சியை தொடங்கிய 24 மணி நேரத்தில் ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

    ‘தமிழகம் காப்போம்’ என்ற தலைப்பில் மாவட்டங்கள் தோறும் காணொலி காட்சி மூலம் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடத்தி பேசினார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறும் போது, ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்து இருந்தார்.

    அதன்படி ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள குன்னம் ஊராட்சியில் இன்று காலை கிராமசபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். முன்னதாக காரில் வந்த மு.க.ஸ்டாலின் கிராமத்தின் வழியாக நடந்து கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றார்.

    அவருக்கு வழிநெடுக தி.மு.க. நிர்வாகிகள், கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கிராம சபை கூட்டத்திற்காக அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் சிறப்பு ஏற்பாடு மற்றும் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. கிராமத்தின் வழிநெடுக வாழை மற்றும் கரும்புகளால் தோரணம் கட்டப்பட்டு இருந்தன. சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கிராம மக்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி பேசியதாவது:-

    ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக என்றும் பாடுபடும் இயக்கம் தி.மு.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.

    விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. பச்சை துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுகிறார். ‘நானும் ரவுடி ரவுடி’ என்று சொல்வது போல்தான் விவசாயி, விவசாயி என்று முதல்வர் கூறி வருகிறார்.

    விவசாயி என கூறும் முதல்-அமைச்சர் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. அவர் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை எதிர்க்காதது ஏன்?

    ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6,131 கோடி முறைகேடு நடந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறையிலும் ஊழல். முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் கவர்னரிடம் அளித்துள்ளோம். இது பகுதி ஒன்றுதான்.

    ஊழல் பட்டியலின் 2-வது பகுதி விரைவில் கவர்னரிடம் கொடுக்கப்படும். நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்னும் விசாரணையை தொடங்கவில்லை. முன்னாள் முதல்- அமைச்சரின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

    கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். ஆனால் கொரோனா பேரிடர் நிதியிலும் அ.தி.மு.க. அரசு ஊழல் செய்கிறது.

    கட்சியை தொடங்கிய 24 மணி நேரத்தில் ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை.

    டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் சந்தித்து பேசாதது ஏன்? அ.தி.மு.க. வை நிராகரிப்போம் என்பதை மக்கள் வரவேற்று உள்ளனர். எனவே வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
    காஞ்சிபுரம்:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பட்டியலை கொடுத்தார். இந்த புகார் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் ஊராட்சியில் இன்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6,131 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது. அதிமுக அரசின் ஊழல்கள் தொடர்பாக ஆளுநரிடம் 97 பக்க ஊழல்புகார் கடிதம் கொடுத்தேன். இந்த புகார்கள் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அதன்பின்னர் நீதிமன்றத்தை நாடுவோம்.

    விவசாயிகள் போராட்டம்

    ஏறக்குறைய ஒரு மாத காலமாக பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் வந்து கடும் குளிருக்கு மத்தியில் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்களுடன் பேசவும் அவர்களின் கோரிக்கையை கேட்கவும் பிரதமர் முன்வரவில்லை. நமது முதல்வர் எடப்பாடி, பிரதமரின் இசைக்கு நடனமாடுகிறார். 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்று நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் ஊராட்சியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
    காஞ்சிபுரம்:

    சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள   திமுக   தயாராகி வருகிறது. அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில்   திமுக   சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துகளில் கிராம சபை மற்றும் வார்டு கூட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் 10 நாட்களுக்கு கிராமங்கள் மற்றும் வார்டுகளில் 16 ஆயிரம் கிராமசபை கூட்டங்களை நடத்த இருக்கிறார்கள்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியம், குன்னம் ஊராட்சியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தேர்தலையொட்டி கிராம சபை கூட்டத்தில் மக்களின் குறைகள், தேவைகளை கேட்டறிகிறார்.

    கிராம சபை கூட்டத்தில்   முக ஸ்டாலின்  கூறியதாவது:

    * ஜெயலலிதாவின் மரணம் இன்றும் மர்மமாக இருக்கிறது.

    * விசாரணை கமிஷனை நீடிக்கிறார்களே தவிர, முடிவு வரவில்லை

    *   ஜெயலலிதா   எங்களுக்கு எதிரிதான் என்றாலும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்.

    * கட்சி தொடங்கிய 24 மணி நேரத்தில ஆட்சியைப் பிடிப்போம் என சொல்கிறார்கள்.

    * நானும் ரவுடி ரவுடி என சொல்வதுபோல் தான் விவசாயி விவசாயி என முதலமைச்சர் கூறி வருகிறார்.

    * விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை எதிர்க்காதது ஏன்?

    * ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6,131 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.87 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமி‌‌ஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் இருந்து வந்திறங்கிய பயணிகளை கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த சென்னையை சேர்ந்த சையத் முசுரூதீன் (வயது 48), ராமநாதபுரத்தை சேர்ந்த கலந்தர் பக்ரூதீன் (29), சாகுல் அமீது (38), பத்ரூதீன் (48), தூத்துக்குடியை சேர்ந்த தமீம் அன்சாரி (36) ஆகிய 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது உள்ளாடை மற்றும் சட்டை ஆகியவற்றில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதேபோல் விளையாட்டு பொருட்களில் தங்க தகடுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து 5 பேரிடம் இருந்து ரூ.68 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 350 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். மேலும், துபாயில் இருந்து வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள். அதேபோல் துபாயில் வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த சர்புதீன் அப்துல் மஜீத் (40), முகமது ரகமத்துல்லா (36) ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்தபோது ரூ.10 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ குங்குமப்பூ கைப்பற்றப்பட்டது.

    ஒரே நாளில் சுங்க இலாகா நடத்திய சோதனையில் ரூ.87 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 700 கிராம் தங்கமும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ குங்குமப்பூ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தங்கத்தை கடத்திய 5 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை அருகே சி.ஐ.டி.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    படப்பை:



    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



    இதில், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யூ கவுரவ தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகைக்கு முன் ஒரு மாத சம்பளம் போனசாக வழங்கிடு, காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் நயிம்பஷாவை சந்தித்து தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.

    காஞ்சீபுரத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ஒலிமுகம்மது பேட்டை, வரதப்பன் தெருவை சேர்ந்தவர் முகமதுசராபத் நவுஷாத் (வயது 30). டிரைவர், இவருக்கும் பரனாம்பேட்டையை சேர்ந்த ரிஷ்வானா (27) என்பவருக்கும் கடந்த 55 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. 

    இந்நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படும் முகமதுசராபத், வீட்டில் அனைவரும் தூங்கியதும், அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் நடராஜன் விரைந்து சென்று, முகமதுசராபத் நவுஷாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி மற்றும் உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், தனது வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு மேடவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

    அதற்கு உதவி பொறியாளா் ரமேஷ், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்கப்படும் என கூறியதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணி, இதுபற்றி சட்ட பஞ்சாயத்து அமைப்பிடம் தெரிவித்தார்.

    பின்னர் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகத்தில் இதுதொடர்பாக எழுத்து மூலமாக புகார் அளித்தார்.

    லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு லவக்குமார் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், மின்வாரிய அதிகாரியை கையும், களவுமாக பிடிப்பதற்காக சுப்பிரமணியிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.

    அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சுப்பிரமணி, மேடவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் உதவியாளர் சீனிவாசன் ஆகியோரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.

    அந்த பணத்தை இருவரும் கையில் வாங்கியதும், அங்கு மறைத்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று இருவரையும் கையும், களவுமாக பிடித்தனா். மேலும் மின்வாரிய அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதனால் மின்வாரிய அலுவலக கதவுகள் மூடப்பட்டதால் மின்கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சுமார் 6 மணி நேர சோதனைக்கு பிறகு, வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் சீனிவாசன் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
    கொளப்பாக்கத்தில் ஆந்திர வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வண்டலூர்:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பாரெட்டி (வயது 30). வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் தங்கி ரத்தினமங்கலத்தில் உள்ள மருந்து கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த சுப்பாரெட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டால் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவேன் என செய்தியாளர்கள் கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

    காஞ்சீபுரம்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை கடந்த 13-ந்தேதி மதுரையில் தொடங்கினார். 14, 15, 16 ஆகிய தேதிகளில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.

    இந்தநிலையில் கமல்ஹாசன் இன்று தனது 2-வது கட்ட பிரசாரத்தை காஞ்சீபுரத்தில் தொடங்கினார். இதற்காக அவர் நேற்று மாலை 4 மணிக்கு ஆலந்தூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். போரூர், பூந்தமல்லி வழியாக காஞ்சீபுரம் சென்றார்.

    நேற்று மாலை காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பு மாநில செயலாளர் எஸ்.கே. பி.பி. கோபிநாத், நிர்வாகிகள் பிரபாகரன், மயில்வாகனன், பிரதீப்குமார், ஏசு, சண்முகம், தொல்காப்பியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்தநிலையில் கமல்ஹாசன் இன்று காலை காஞ்சீபுரத்தில் 2-வது கட்ட பிரசாரத்தை தொடங்கினார். காலையில் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்ற அவர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் 7 அம்ச திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். தமிழகத்தில் ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும். அரசு திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மக்களை சென்றடைய வேண்டும்.

    தொழிற்புரட்சி ஏற்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் அரசு ஊதியம் அளிக்கும் திட்டத்தையும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். பசுமை புரட்சியையும் செய்வேன்.

    ஒருவனை வறுமை கோட்டுக்கு மேலே தூக்கி வைத்துவிட்டால் அரசு வென்றுவிட்டது என்று பொருள் அல்ல. வாழ்க்கையில் பல சறுக்கல்கள் வரலாம். அப்படி வறுமை கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் சறுக்கும் போது வறுமை கோட்டுக்கு கீழே தான் போவார்கள்.

    செழுமை கோட்டுக்கு மேலே அவனை தூக்கி வைத்தால் சறுக்கல் நேர்ந்தாலும் வியாபாரத்தில் தோல்வி, எது நேர்ந்தாலும் அவன் வறுமை கோட்டுக்கு மேலேயே நிற்பான். இது பெரிய அல்ஜீப்ரா கணிதம் அல்ல. அப்படியே அண்ணார்ந்து பார்த்தால் உயரமான வி‌ஷயங்கள் தெரியும்.

    கேள்வி:- ரஜினி கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். ஆனால் முதல்வர் வேட்பாளராக நிற்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார். முதல்வர் வேட்பாளராக உங்களை நிற்கும்படி ரஜினி கேட்டால் நிற்பீர்களா?

    பதில்:- ரஜினி முதல்வர் வேட்பாளர் என்று என்னை அறிவித்தால் ஏற்பேன்.

    கேள்வி:- மு.க.ஸ்டாலின் பேசும் போது 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று கூறி இருக்கிறாரே?

    பதில்:- அவர் கூட்டணி கட்சிகளுக்கு 34 இடங்கள் தான் என்று சூசகமாக தெரிவித்து இருக்கிறார்.

    கேள்வி:- அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி சிறுபான்மையினர்களுடன் இணக்கமாக இருப்பதாக காட்டி உள்ளார்களே?

    பதில்:- சிறுபான்மையினர் எனது தம்பிகள், அவர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.

    பதில்:- நான் நாத்திகர் இல்லை. பகுத்தறிவாளன். ஆனால் என்னை நாத்திகர் என்று முத்திரை குத்துகிறார்கள்.

    கேள்வி:- ரே‌ஷன் கார்டுகளுக்கு ரூ.2,500 ரொக்கப் பணம் அறிவிக்கப்பட்டுள்ளதே?

    பதில்:- தேர்தலை மனதில் வைத்து அறிவித்து இருக்கிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.2,500 வரை கொடுக்கப்போவதாக தகவல் பரவுகிறது. ஆனால் நான் பணத்தை நம்பவில்லை. மக்களை நம்பியே தேர்தலில் நிற்கிறேன்.

    கேள்வி:- எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்கள்?

    பதில்:- கூட்டணி பற்றி இப்போது எதும் சொல்ல முடியாது. கூட்டணி தொடர்பான நிலைபாட்டை ஜனவரி மாதம் அறிவிப்பேன். தமிழகத்தில் ஊழல் இல்லா ஆட்சி அமைந்தால் தான் தமிழகம் தலை நிமிரும். அரசு திட்டங்கள் 30 சதவீதம் தான் மக்களுக்கு போய் சேருகிறது. மீதி 70 சதவீதம் அரசியல்வாதிகளுக்கே செல்கிறது.

    கேள்வி:- தி.மு.க. ஆட்சி அமைவதை தடுக்க புதுப்புது கட்சிகள் உதயமாகின்றன என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? அவர் உங்களை சொல்லி இருக்கிறாரா?

    பதில்:- அவர் எங்களை சொல்லவில்லை. வேறு யாரையாவது சொல்லி இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும்.

    * நேர்மையான கொள்கைகளை முன் வைத்து மக்கள் நீதி மய்யம் பிரசாரத்தில் ஈடுபடும்.

    * வரும் முன் கணிப்பு என்ற முறையில் அரசை செயல்படுத்துவோம்.

    * பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் கிடந்த சிறுத்தையின் பற்கள் மற்றும் நகம், எலும்பு தூள்களை வனத்துறையினரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு அந்த விமானம் மீண்டும் துபாய் புறப்பட தயாரானது. முன்னதாக விமான நிலைய ஊழியா்கள், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

    அப்போது விமானத்தின் ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு சிறிய பாா்சல் கேட்பாரற்று கிடப்பதை கண்டுபிடித்தனா். இதுபற்றி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சுங்க இலாகா அதிகாரிகள் விரைந்து வந்து அந்த பாா்சலை பரிசோதித்தனா்.

    அந்த பார்சலை பிரித்து பாா்த்தபோது, அதில் 3 பற்கள் இருந்தன. இது பற்றி வனத்துறைக்கு தகவல் தரப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவற்றை ஆய்வு செய்தனர்.

    அதில் அவை, பெரிய பூனை வகையின் பற்கள் போல் உள்ளது என்றனர். மேலும் அவை சிறுத்தை, புலி போன்றவற்றின் பற்களாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் அவற்றின் நகங்கள், எலும்பு துண்டுகள் அடங்கிய தூள்களும் இருந்தன.

    பற்கள் மற்றும் நகம், எலும்பு தூள்களை பறிமுதல் செய்து வனவிலங்குகள் ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிறுத்தை, புலியின் நகம், பல் போன்றவைகளை சங்கிலியில் டாலர்போல் சேர்த்து அணிந்து கொண்டால் அதிா்ஷ்டம் உண்டாகும் என்ற நம்பிக்கை ஒரு சிலரிடம் உள்ளது. அப்படிபட்டவா்கள் பல லட்சம் ரூபாய் கொடுத்து இவைகளை வாங்குவாா்கள்.

    அவர்களுக்காக இவை விமானத்தில் கடத்தி வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    தமிழக சட்டப் பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
    காஞ்சிபுரம்: 

    நடிகர் கமல்ஹாசன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சூறாவளிப் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் கூறியபோது ‘சட்டப்பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார் என்று உறுதி அளித்தார். மேலும் உப்பை சுவாசித்த மீனவர்களிடம் நேர்மை கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று கமல்ஹாசன் கூறியது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

    மேலும் இதுவரை மீனவர் ஒருவர் சட்டப்பேரவையில் இருப்பார் என்று எந்த அரசியல்வாதியும் கூறாத நிலையில் அதை கமலஹாசன் கூறியது புதுமையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று முதல் கமல்ஹாசன் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×