search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காஞ்சீபுரத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் டிரைவர் தற்கொலை

    காஞ்சீபுரத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ஒலிமுகம்மது பேட்டை, வரதப்பன் தெருவை சேர்ந்தவர் முகமதுசராபத் நவுஷாத் (வயது 30). டிரைவர், இவருக்கும் பரனாம்பேட்டையை சேர்ந்த ரிஷ்வானா (27) என்பவருக்கும் கடந்த 55 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. 

    இந்நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படும் முகமதுசராபத், வீட்டில் அனைவரும் தூங்கியதும், அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் நடராஜன் விரைந்து சென்று, முகமதுசராபத் நவுஷாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×