என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
படப்பை அருகே சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம்
படப்பை அருகே சி.ஐ.டி.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யூ கவுரவ தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகைக்கு முன் ஒரு மாத சம்பளம் போனசாக வழங்கிடு, காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் நயிம்பஷாவை சந்தித்து தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.
Next Story






