என் மலர்
காஞ்சிபுரம்

காஞ்சீபுரம்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை காஞ்சீபுரத்தில் இருந்து நேற்று தொடங்கி இருக்கிறது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் காஞ்சீபுரம் காந்தி ரோடு, பெரியார் தூண் அருகே மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில், “மக்களை நோக்கி மக்கள் தளபதி வாசன்” என்ற வாசகத்தை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
எதிர்க்கட்சிகளுக்கும் எதிர்க்கட்சியை சேர்ந்த கூட்டணி கட்சிகளுக்கும் தேர்தல் பயம் வந்து விட்டது. இதன் காரணத்தினால் மக்களுக்கான திட்டங்களுக்கு தடையாக தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தேர்தல் வாக்குக்காக எதிர்கட்சிகள் தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை ஏழை எளிய மக்களுக்கு கூறி அதனால் வாக்கு பெற்று வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பலிக்காது. மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தே.மு.தி.க. கூட்டணியை வலுப்படுத்த உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கிட வேண்டும். வருகிற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசுக்கு எத்தனை இடம் கொடுக்கப்படும் என்பது பேச்சு வார்த்தைக்கு பிறகே தெரிய வரும்.
அ.தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கட்சி முக்கியமான கட்சி. எனவே அவர்களின் கோரிக்கைகளை அ.தி.மு.க. பரிசீலினை செய்வார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன், மாநில இளைஞர் அணி பொது செயலாளர் சங்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், நகர தலைவர் சுகுமார், நிர்வாகிகள் கஜா, கோல்டு மோகன், முத்து, சசிகுமார், அஜித், தென்னவன், ராம்குமார், உமாபதி, யுவராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த நைனா முகமது (வயது 50), இப்ராகிம் ஆகிய 2 பேர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 9 விலை உயர்ந்த செல்போன்களை கைப்பற்றினார்கள். பின்னர் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சோதனை செய்தனர்.
அதில் அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.35 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 706 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது துபாய் விமானத்தில் வந்து கடலூரை சேர்ந்த சையத் முஸ்தபா (வயது 28), ராமநாதபுரத்தை சேர்ந்த அசாருதீன் (22), அஜ்மல் கான் (24), சையத் முகமது (34), சுல்தான் சலாவுதீன் (27) ஆகிய 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 75 விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள், 14 மடிக்கணினிகள் இருந்தன. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் 5 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து 5 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். மேலும் இது தொடர்பாக 5 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்பட பல பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்களே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.
மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் ஓடுபாதையில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. கடும் பனி மூட்டம் காரணமாக காலை 6 மணி முதல் 8 மணி வரை சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
அதன்படி சென்னையில் இருந்து ஆமதாபாத், மதுரை, மும்பை, புனே, ஹூப்ளி, புவனேஸ்வர், டெல்லி, பெங்களூரு, திருச்சி, விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோவை, கவுகாத்தி, தூத்துக்குடி, சீரடி, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய 38 விமானங்கள் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.
மேலும் பிறநகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 19 விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 30 நிமிட தாமதத்துக்கு பிறகு அவை தரை இறங்கின.
அதேபோல் பெங்களூரு, மும்பை, டெல்லி, துபாய், அந்தமான் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 5 விமானங்கள் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கும், டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து வந்த 2 விமானங்கள் ஐதராபாத்துக்கும் திருப்பிவிடப்பட்டன.
காலை 9 மணிக்கு பிறகு பனி மூட்டம் குறைந்ததும் சென்னையில் விமான சேவை சீரானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






