என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தை அடுத்த உத்திரமேரூர் அருகே மதூர் பகுதியில் கல் குவாரி உள்ளது. இங்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இன்று காலை குவாரியில் இருந்த கற்களை தொழிலாளர்கள் வெடி வைத்து தகர்த்தனர். அப்போது ஏற்கனவே கற்கள் வெட்டப்பட்ட சுமார் 300 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் ஏராளமானோர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் கற்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
காலை 9 மணியளவில் கல்குவாரியின் ஒரு பகுதியில் இருந்த கற்குவியல் திடீரென சரிந்து பள்ளத்துக்குள் விழுந்தது. இதில் கற்குவியலுக்கு அடியில் லாரி, பொக்லைன் எந்திரங்களுடன் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சுமார் 300 மீட்டர் சுற்றளவுக்கு பாறைகள் சரிந்து விழுந்து கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
பெரிய அளவிலான கற்கள் வாகனங்கள் மீது குவிந்து கிடந்ததால் அதனை அப்புறப்படுத்துவதில் பெரும் சவால் ஏற்பட்டது. உடனடியாக கற்குவியலுக்குள் கிடந்தவர்களை மீட்க முடியவில்லை.
கற்கள் விழுந்ததில் 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர். அவர்கள் உடல் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
மேலும் கற்குவியலுக்குள் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்த கல் குவாரிக்கு போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். அவர்கள் மீட்பு பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகிறார்கள்.
கற்கள் சரிந்து விழுந்த இடம் மிகவும் மேடாகவும் குறுகிய பாதையாகவும் இருப்பதால் மீட்பு வாகனங்கள் உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை. அங்குள்ள பாதையில் ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனம் செல்வதற்கு காத்திருக்க வேண்டும். அந்த வாகனம் வந்த பின்னரே கல்குவாரிக்குள் செல்ல முடியும்.
இதனால் மீட்பு பணியில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கற்குவியலுக்குள் 6 லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே படுகாயம் அடைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய 2 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கற்கள் சரிந்து விழுந்தபோது 40-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் அங்கு இருந்துள்ளனர். கற்கள் சரிவதை கண்ட அவர்கள் சிதறி ஓடியபோது 20-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது. இதனால் கல்குவாரி உள்ள மதூர் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
காஞ்சிபுரத்தை அடுத்த உத்திரமேரூர் அருகே மாத்தூர் பகுதியில் கல் குவாரி உள்ளது.
இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் கற்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது கல்குவாரியில் இருந்த கற்கள் திடீரென சரிந்து விழுந்தது. இதில் கற்குவியலுக்கு அடியில் லாரி, பொக்லைன் எந்திரங்களுடன் தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.
இதில் மூச்சு திணறியும், படுகாயம் அடைந்தும் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து அங்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் கற்குவியலுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த கற்குவியலுக்குள் மேலும் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

காஞ்சீபுரம்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை காஞ்சீபுரத்தில் இருந்து நேற்று தொடங்கி இருக்கிறது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் காஞ்சீபுரம் காந்தி ரோடு, பெரியார் தூண் அருகே மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில், “மக்களை நோக்கி மக்கள் தளபதி வாசன்” என்ற வாசகத்தை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
எதிர்க்கட்சிகளுக்கும் எதிர்க்கட்சியை சேர்ந்த கூட்டணி கட்சிகளுக்கும் தேர்தல் பயம் வந்து விட்டது. இதன் காரணத்தினால் மக்களுக்கான திட்டங்களுக்கு தடையாக தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தேர்தல் வாக்குக்காக எதிர்கட்சிகள் தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை ஏழை எளிய மக்களுக்கு கூறி அதனால் வாக்கு பெற்று வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பலிக்காது. மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தே.மு.தி.க. கூட்டணியை வலுப்படுத்த உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கிட வேண்டும். வருகிற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசுக்கு எத்தனை இடம் கொடுக்கப்படும் என்பது பேச்சு வார்த்தைக்கு பிறகே தெரிய வரும்.
அ.தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கட்சி முக்கியமான கட்சி. எனவே அவர்களின் கோரிக்கைகளை அ.தி.மு.க. பரிசீலினை செய்வார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன், மாநில இளைஞர் அணி பொது செயலாளர் சங்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், நகர தலைவர் சுகுமார், நிர்வாகிகள் கஜா, கோல்டு மோகன், முத்து, சசிகுமார், அஜித், தென்னவன், ராம்குமார், உமாபதி, யுவராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த நைனா முகமது (வயது 50), இப்ராகிம் ஆகிய 2 பேர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 9 விலை உயர்ந்த செல்போன்களை கைப்பற்றினார்கள். பின்னர் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சோதனை செய்தனர்.
அதில் அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.35 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 706 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.






