search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொய் வாக்குறுதி பலிக்காது- ஜி.கே.வாசன் பேச்சு

    வருகிற சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொய் வாக்குறுதி பலிக்காது. மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை காஞ்சீபுரத்தில் இருந்து நேற்று தொடங்கி இருக்கிறது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் காஞ்சீபுரம் காந்தி ரோடு, பெரியார் தூண் அருகே மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில், “மக்களை நோக்கி மக்கள் தளபதி வாசன்” என்ற வாசகத்தை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

    எதிர்க்கட்சிகளுக்கும் எதிர்க்கட்சியை சேர்ந்த கூட்டணி கட்சிகளுக்கும் தேர்தல் பயம் வந்து விட்டது. இதன் காரணத்தினால் மக்களுக்கான திட்டங்களுக்கு தடையாக தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    தேர்தல் வாக்குக்காக எதிர்கட்சிகள் தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை ஏழை எளிய மக்களுக்கு கூறி அதனால் வாக்கு பெற்று வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பலிக்காது. மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. கூட்டணியை வலுப்படுத்த உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கிட வேண்டும். வருகிற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசுக்கு எத்தனை இடம் கொடுக்கப்படும் என்பது பேச்சு வார்த்தைக்கு பிறகே தெரிய வரும்.

    அ.தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கட்சி முக்கியமான கட்சி. எனவே அவர்களின் கோரிக்கைகளை அ.தி.மு.க. பரிசீலினை செய்வார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன், மாநில இளைஞர் அணி பொது செயலாளர் சங்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், நகர தலைவர் சுகுமார், நிர்வாகிகள் கஜா, கோல்டு மோகன், முத்து, சசிகுமார், அஜித், தென்னவன், ராம்குமார், உமாபதி, யுவராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×