என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- மொபட் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த அய்யங்கார்குளம் பகுதியை சேர்ந்தவர் மங்கையர்கரசி (வயது 25), இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர் பெண்ணான மைதிலி (45) என்பவரை அழைத்து கொண்டு மொபட்டில் கோவிலுக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அய்யங்கார்குளம்-மோரணம் சாலை பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த மைதிலி சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மங்கையர்கரசி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகரில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
வண்டலூர்:
மறைமலைநகர், கூடுவாஞ்சேரி துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மறைமலைநகர் தொழிற்பேட்டை, காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, திருக்கச்சூர், பேரமனூர், சட்டமங்கலம், சிங்கப்பெருமாள்கோவில். காட்டூர், கடம்பூர், களிவந்தபட்டு, நின்னக்கரை, காவனூர், காரணைப்புதுச்சேரி, நெல்லிக்குப்பம் ரோடு, கூடலூர், செங்குன்றம், மல்ரோஜாபுரம், கோவிந்தாபுரம், தைலாவரம், பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு, நந்திவரம், மகாலட்சுமி நகர், கோவிந்தராஜபுரம், கூடுவாஞ்சேரி டவுன், மாடம்பாக்கம், ஆதனூர், ஊரப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
உத்திரமேரூர் அருகே கல்குவாரி விபத்தில் ஆரணியை சேர்ந்த மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மதூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 4-ந்தேதி ஏற்பட்ட பாறை சரிவில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பலியானார். அந்த விபத்தில் சிக்கிய மற்ற 9 பேரை மீட்புப்படையினர் உயிருடன் மீட்டனர்.
அதில் பலத்த காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வட மாநிலத்தை சேர்ந்த சோனா அன்சாரி (வயது 32) நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
சுரேஷ் (30) செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அந்த கல்குவாரியில் மேற்பார்வையாளராக பணியாற்றிய திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா பெரிய அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (36) மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் ஏலக்காய் மங்கலம் கிராமத்தை சேர்ந்த மேஸ்திரி வேலு (47) ஆகியோரை சாலவாக்கம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உத்திரமேரூர் அருகே கல்குவாரி விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். கல்குவாரி உரிமையாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் ஒன்றியம் மதூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் பாறை சரிவு ஏற்பட்டு ஒருவர் இறந்தார். படுகாயம் அடைந்த 2 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த சோனா அன்சாரி (வயது 32) நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனன்றி பரிதாபமாக இறந்து போனார்.
பாறை சரிந்து இறங்கிய இடத்தில் நேற்று காலை 6 மணிக்கு மீட்பு பணி தொடங்குவதாக இருந்தது. ஆனால் மீண்டும் பாறை சரிவு ஏற்பட்டு இருந்ததால் மீட்பு பணி தொடங்குவது நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
விபத்து தொடர்பாக கல் குவாரி உரிமையாளர்கள் தேவராஜன், சரவணன், ஆறுமுகசாமி, சேகர் ஆகியோர் மீது சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்குவாரி விபத்தில் இறந்து போன மணிகண்டனின் உறவினர்கள் நேற்று காலை அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி திருமுக்கூடல்-மதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களிடம் பேசி கலைந்து போக செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திரமேரூர் ஒன்றியம் மதூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் பாறை சரிவு ஏற்பட்டு ஒருவர் இறந்தார். படுகாயம் அடைந்த 2 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த சோனா அன்சாரி (வயது 32) நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனன்றி பரிதாபமாக இறந்து போனார்.
பாறை சரிந்து இறங்கிய இடத்தில் நேற்று காலை 6 மணிக்கு மீட்பு பணி தொடங்குவதாக இருந்தது. ஆனால் மீண்டும் பாறை சரிவு ஏற்பட்டு இருந்ததால் மீட்பு பணி தொடங்குவது நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
விபத்து தொடர்பாக கல் குவாரி உரிமையாளர்கள் தேவராஜன், சரவணன், ஆறுமுகசாமி, சேகர் ஆகியோர் மீது சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்குவாரி விபத்தில் இறந்து போன மணிகண்டனின் உறவினர்கள் நேற்று காலை அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி திருமுக்கூடல்-மதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களிடம் பேசி கலைந்து போக செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி மதிப்புள்ள போதை மாத்திரை, பவுடரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு வந்திருந்த 3 பார்சல்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். மேல்புறத்தில் வலி நிவாரணி என்று எழுதப்பட்ட பார்சல்களில் 27 கிலோ போதை மாத்திரை-பவுடர் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2½ கோடி ஆகும். பார்சலில் உள்ள முகவரியை வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தை தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது கழிவறையில் இருந்த பார்சலில் 1 கிலோ 200 கிராம் கடத்தல் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.65 லட்சம் ஆகும். அதனை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு வந்திருந்த 3 பார்சல்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். மேல்புறத்தில் வலி நிவாரணி என்று எழுதப்பட்ட பார்சல்களில் 27 கிலோ போதை மாத்திரை-பவுடர் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2½ கோடி ஆகும். பார்சலில் உள்ள முகவரியை வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தை தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது கழிவறையில் இருந்த பார்சலில் 1 கிலோ 200 கிராம் கடத்தல் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.65 லட்சம் ஆகும். அதனை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்திரமேரூர் அருகே மதூர் கிராமத்தில் கல்குவாரியில் பாறை இடிந்து இறங்கிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார். 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மதூர் கிராமத்தில் சென்னையை சேர்ந்த தேவராஜன், சரவணகுமார், ஆறுமுகசாமி, சேகர் ஆகியோருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை 9 மணி அளவில் 200 அடி பள்ளத்தில் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கல்குவாரியின் மேற்பகுதி பாறை இடிந்து பள்ளத்துக்குள் இறங்கியது. இதில் கற்குவியலுக்குள் சிக்கி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் வேலைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள நத்தாநல்லூர் பகுதியில் தங்கியிருந்தார். பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளும் கற்குவியலுக்கிடையே சிக்கி கொண்டன.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இது குறித்து தீயணைப்பு துறைக்கும் மருத்துவ துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு போன்ற பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. டாக்டர்களும் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள், போலீசார் அனைவரும் சேர்ந்து கற்குவியலில் சிக்கிய 9 பேரை உயிருடன் மீட்டனர். அவர்களில் படுகாயம் அடைந்த 2 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீஸ் டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்த காவல்துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
விபத்தில் பலியான மணிகண்டனுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மதூர் கிராமத்தில் சென்னையை சேர்ந்த தேவராஜன், சரவணகுமார், ஆறுமுகசாமி, சேகர் ஆகியோருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை 9 மணி அளவில் 200 அடி பள்ளத்தில் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கல்குவாரியின் மேற்பகுதி பாறை இடிந்து பள்ளத்துக்குள் இறங்கியது. இதில் கற்குவியலுக்குள் சிக்கி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் வேலைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள நத்தாநல்லூர் பகுதியில் தங்கியிருந்தார். பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளும் கற்குவியலுக்கிடையே சிக்கி கொண்டன.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இது குறித்து தீயணைப்பு துறைக்கும் மருத்துவ துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு போன்ற பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. டாக்டர்களும் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள், போலீசார் அனைவரும் சேர்ந்து கற்குவியலில் சிக்கிய 9 பேரை உயிருடன் மீட்டனர். அவர்களில் படுகாயம் அடைந்த 2 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீஸ் டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்த காவல்துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
விபத்தில் பலியான மணிகண்டனுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்திரமேரூர் அருகே குவாரியில் கற்கள் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர். மேலும் கற்குவியலுக்குள் சிக்கி உள்ள 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த உத்திரமேரூர் அருகே மதூர் பகுதியில் கல் குவாரி உள்ளது. இங்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இன்று காலை குவாரியில் இருந்த கற்களை தொழிலாளர்கள் வெடி வைத்து தகர்த்தனர். அப்போது ஏற்கனவே கற்கள் வெட்டப்பட்ட சுமார் 300 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் ஏராளமானோர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் கற்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
காலை 9 மணியளவில் கல்குவாரியின் ஒரு பகுதியில் இருந்த கற்குவியல் திடீரென சரிந்து பள்ளத்துக்குள் விழுந்தது. இதில் கற்குவியலுக்கு அடியில் லாரி, பொக்லைன் எந்திரங்களுடன் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சுமார் 300 மீட்டர் சுற்றளவுக்கு பாறைகள் சரிந்து விழுந்து கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
பெரிய அளவிலான கற்கள் வாகனங்கள் மீது குவிந்து கிடந்ததால் அதனை அப்புறப்படுத்துவதில் பெரும் சவால் ஏற்பட்டது. உடனடியாக கற்குவியலுக்குள் கிடந்தவர்களை மீட்க முடியவில்லை.
கற்கள் விழுந்ததில் 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர். அவர்கள் உடல் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
மேலும் கற்குவியலுக்குள் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்த கல் குவாரிக்கு போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். அவர்கள் மீட்பு பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகிறார்கள்.
கற்கள் சரிந்து விழுந்த இடம் மிகவும் மேடாகவும் குறுகிய பாதையாகவும் இருப்பதால் மீட்பு வாகனங்கள் உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை. அங்குள்ள பாதையில் ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனம் செல்வதற்கு காத்திருக்க வேண்டும். அந்த வாகனம் வந்த பின்னரே கல்குவாரிக்குள் செல்ல முடியும்.
இதனால் மீட்பு பணியில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கற்குவியலுக்குள் 6 லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே படுகாயம் அடைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய 2 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கற்கள் சரிந்து விழுந்தபோது 40-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் அங்கு இருந்துள்ளனர். கற்கள் சரிவதை கண்ட அவர்கள் சிதறி ஓடியபோது 20-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது. இதனால் கல்குவாரி உள்ள மதூர் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
காஞ்சிபுரத்தை அடுத்த உத்திரமேரூர் அருகே மதூர் பகுதியில் கல் குவாரி உள்ளது. இங்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இன்று காலை குவாரியில் இருந்த கற்களை தொழிலாளர்கள் வெடி வைத்து தகர்த்தனர். அப்போது ஏற்கனவே கற்கள் வெட்டப்பட்ட சுமார் 300 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் ஏராளமானோர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் கற்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
காலை 9 மணியளவில் கல்குவாரியின் ஒரு பகுதியில் இருந்த கற்குவியல் திடீரென சரிந்து பள்ளத்துக்குள் விழுந்தது. இதில் கற்குவியலுக்கு அடியில் லாரி, பொக்லைன் எந்திரங்களுடன் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சுமார் 300 மீட்டர் சுற்றளவுக்கு பாறைகள் சரிந்து விழுந்து கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
பெரிய அளவிலான கற்கள் வாகனங்கள் மீது குவிந்து கிடந்ததால் அதனை அப்புறப்படுத்துவதில் பெரும் சவால் ஏற்பட்டது. உடனடியாக கற்குவியலுக்குள் கிடந்தவர்களை மீட்க முடியவில்லை.
கற்கள் விழுந்ததில் 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர். அவர்கள் உடல் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
மேலும் கற்குவியலுக்குள் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்த கல் குவாரிக்கு போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். அவர்கள் மீட்பு பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகிறார்கள்.
கற்கள் சரிந்து விழுந்த இடம் மிகவும் மேடாகவும் குறுகிய பாதையாகவும் இருப்பதால் மீட்பு வாகனங்கள் உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை. அங்குள்ள பாதையில் ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனம் செல்வதற்கு காத்திருக்க வேண்டும். அந்த வாகனம் வந்த பின்னரே கல்குவாரிக்குள் செல்ல முடியும்.
இதனால் மீட்பு பணியில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கற்குவியலுக்குள் 6 லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே படுகாயம் அடைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய 2 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கற்கள் சரிந்து விழுந்தபோது 40-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் அங்கு இருந்துள்ளனர். கற்கள் சரிவதை கண்ட அவர்கள் சிதறி ஓடியபோது 20-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது. இதனால் கல்குவாரி உள்ள மதூர் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
உத்திரமேரூர் அருகே குவாரியில் கற்கள் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த உத்திரமேரூர் அருகே மாத்தூர் பகுதியில் கல் குவாரி உள்ளது.
இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் கற்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது கல்குவாரியில் இருந்த கற்கள் திடீரென சரிந்து விழுந்தது. இதில் கற்குவியலுக்கு அடியில் லாரி, பொக்லைன் எந்திரங்களுடன் தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.
இதில் மூச்சு திணறியும், படுகாயம் அடைந்தும் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து அங்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் கற்குவியலுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த கற்குவியலுக்குள் மேலும் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
காஞ்சிபுரத்தை அடுத்த உத்திரமேரூர் அருகே மாத்தூர் பகுதியில் கல் குவாரி உள்ளது.
இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் கற்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது கல்குவாரியில் இருந்த கற்கள் திடீரென சரிந்து விழுந்தது. இதில் கற்குவியலுக்கு அடியில் லாரி, பொக்லைன் எந்திரங்களுடன் தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.
இதில் மூச்சு திணறியும், படுகாயம் அடைந்தும் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து அங்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் கற்குவியலுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த கற்குவியலுக்குள் மேலும் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
நசரத்பேட்டை அருகே லாரி டிரைவரை கடத்தியதாக மதபோதகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி:
வியாசர்பாடியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 53). அந்த பகுதியில் கிறிஸ்தவ சபை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருகே வந்த லாரி காரின் மீது உரசியதில் காரில் லேசாக சேதம் ஏற்பட்டது. இதையடுத்து லாரி டிரைவர் மணிகண்டன் தனது உரிமையாளரிடம் பேசிவிட்டு இழப்பீடாக ரூ.3 ஆயிரம் கொடுத்ததாகவும் அதனை அவர்கள் வாங்காமல் மாதவரத்தில் உள்ள கார் பழுது பார்க்கும் இடத்துக்கு வந்து செலவு ஆகும் தொகையை தருமாறு கூறினர்.
மணிகண்டனை அழைத்து சென்றவர்கள் வியாசர்பாடிக்கு அழைத்து சென்று ரூ.30 ஆயிரம் கொடுத்தால்தான் மணிகண்டனை விடுவிக்க முடியும் என மோகன்தாஸ் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டனை கடத்தி சென்று விட்டதாக லாரி உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மணிகண்டனை மீட்டனர். மேலும் போதகர் மோகன்தாஸ் அவரது டிரைவர் மற்றும் நண்பர்களான ஐசக், ஜீவா, அன்பு ஆகியோரை கைது செய்து நசரத்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 4 பேர் மீதும் ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அங்கு கூடியிருந்த 50-க்கும் மேற்பட்டோர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.
காஞ்சீபுரத்தில் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 43). இவரது நண்பர் சின்ன காஞ்சீபுரம் ஐதர்பட்டரை தெருவை சேர்ந்த செந்தில்குமார் (30) இவர்கள் இருவரும் பேனர் வைக்கும் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சீபுரம் காந்தி ரோடு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் பேனர் வைக்க முயன்ற போது, உயர் மின்னழுத்த கம்பியின் மீது பேனரின் கம்பி உரசியது. உடனே இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இளங்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செந்தில்குமாருக்கு கை, காலில் படுகாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளங்கோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தில்குமார் படுகாயங்களுடன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர் அருகே டெல்லியில் இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 3 நாளில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி:
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது 26). இவர் 2016-ம் ஆண்டு போலீஸ் பணிக்கு சேர்ந்தார். தற்போது தனது பெற்றோருடன் போரூரை அடுத்த முகலிவாக்கம், ஏ.ஜி.எஸ். காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அவரை உறவினர்கள் தொடர்பு கொண்டும் செல்போனை எடுக்காததால் அவரது உறவினர்கள் சந்தேகமடைந்து வீட்டுக்கு வந்து பார்த்தனர்.
இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், ஆல்பர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டெல்லியில் 8-வது சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னை ஆவடியில் உள்ள 5-வது சிறப்பு காவல் படைக்கு மாற்றப்பட்டுள்ளார். பெற்றோர் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ஆல்பர்ட் மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் காலை அவர் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆவடியில் உள்ள அதிகாரி ஆல்பர்ட்டை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது பணிக்கு வரவில்லை என்று கூறியுள்ளார் என்பதும் மீண்டும் பணிக்கு வரும்போது உயர் அதிகாரியை பார்த்து விட்டு வருமாறு கூறியதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
குன்றத்தூர் அருகே பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி:
குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி ஷீலா (வயது 29). குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் தனது அறைக்கு சென்றவர் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பெற்றோர் கதவை தட்டினார்கள்.
கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது ப்ரீத்தி ஷீலா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ப்ரீத்தி ஷீலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் ப்ரீத்தி ஷீலா திருமணமாகி கணவரை பிரிந்து குன்றத்தூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாகவும் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தவர் தாய் மற்றும் அண்ணனிடம் அடிக்கடி கோபித்து கொண்டு வீட்டின் அறைக்குள் சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் அதேபோல் சம்பவத்தன்று சண்டை போட்டுக்கொண்டு அறைக்குள் சென்றவர் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






