என் மலர்
காஞ்சிபுரம்
ஒரகடம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடகால் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், (வயது 25). இவருக்கும் எழிச்சூர் பகுதியை சேர்ந்த சூர்யா, (23) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் வடகால் பகுதியில் வசித்து வந்தனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதில் மனவருத்தம் அடைந்த சூர்யா வீட்டில் இருந்த டர்பன்டைனை (பெயிண்டில் கலக்கும் திரவம்) குடித்துள்ளார்.
இதை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து ஒரகடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு வருகை முனையத்தின் அருகே வாகனங்கள் நிறுத்தும் பகுதி உள்ளது. அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நீண்டநேரமாக தூங்கியபடி இருந்தார். காா் டிரைவா்கள் சிலர் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றும் அவர் அசைவற்ற நிலையில் கிடந்தாா்.
இதுபற்றி சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மருத்துவ குழுவினருடன் விரைந்து வந்த போலீசார் நடத்திய சோதனையில் அவர் இறந்து விட்டது தெரிந்தது. அவரது உடலை மீட்ட போலீசார், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? என விசாரித்தனர். அதில் அவர் சைக்கிளில் டீ விற்பனை செய்து வந்தவர் என்பது மட்டும் தெரிந்தது. அவரது பெயர், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மேலும் அவர் மாரடைப்பில் இறந்தாரா? அல்லது விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பரங்கிமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த பரங்கிமலை ஏழுகிணறு முதல் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 57). இவர், அதே பகுதியில் உறவினர் இறந்துவிட்டதால் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்றுவிட்டார்.
அதன்பிறகு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அறையில் சிதறி கிடந்தது.
பின்னர் பீரோவை சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த 20 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரிந்தது. ஜெயந்தி, சாவு வீட்டுக்கு சென்றிருப்பதை அறிந்த மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடியது தெரிந்தது.
இதுபற்றி நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள், அங்கு பதிவான கொள்ளையனின் கைரேகைகளை பதிவு செய்து எடுத்து சென்றனர்.
சென்னையை அடுத்த பரங்கிமலை ஏழுகிணறு முதல் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 57). இவர், அதே பகுதியில் உறவினர் இறந்துவிட்டதால் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்றுவிட்டார்.
அதன்பிறகு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அறையில் சிதறி கிடந்தது.
பின்னர் பீரோவை சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த 20 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரிந்தது. ஜெயந்தி, சாவு வீட்டுக்கு சென்றிருப்பதை அறிந்த மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடியது தெரிந்தது.
இதுபற்றி நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள், அங்கு பதிவான கொள்ளையனின் கைரேகைகளை பதிவு செய்து எடுத்து சென்றனர்.
காஞ்சீபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை:
சென்னை ஆவடி குமரன் நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58). இவருடைய உறவினர்கள் சேகர் (55), விஜயலட்சுமி (38), வைஷ்ணவி (29). இவர்கள் சித்தூரில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சிக்காக காரில் சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். காஞ்சீபுரத்தை அடுத்த தாமல் என்ற இடத்தில் இவர்கள் வந்தபோது கார் சாலையின் இடது புறம் உள்ள ஒரு கல்லின் மீது ஏறி இறங்கியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது.
இதில் காரை ஓட்டி வந்த மனோகரன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் ஏனாத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இவர்களில் சேகர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சென்னை ஆவடி குமரன் நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58). இவருடைய உறவினர்கள் சேகர் (55), விஜயலட்சுமி (38), வைஷ்ணவி (29). இவர்கள் சித்தூரில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சிக்காக காரில் சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். காஞ்சீபுரத்தை அடுத்த தாமல் என்ற இடத்தில் இவர்கள் வந்தபோது கார் சாலையின் இடது புறம் உள்ள ஒரு கல்லின் மீது ஏறி இறங்கியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது.
இதில் காரை ஓட்டி வந்த மனோகரன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் ஏனாத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இவர்களில் சேகர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
உத்திரமேரூர் வட்ட மாற்றுத்திறனாளிகள் சார்பில் உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடந்தது.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் வட்ட மாற்றுத்திறனாளிகள் சார்பில் உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர். உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், தனியார் துறையில் 5 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை உத்திரமேரூர் போலீசார் கைது செய்து நேற்று முன்தினம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்து இரவு விடுவித்தனர். இதை தொடர்ந்து நேற்று காலை உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளிகள் கருப்பு துணியால் கண்களை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சென்னை விமான நிலையத்தில் இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கேரளாவை சேர்ந்த இடைத்தரகர் ரஷீத், கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் ஆள்மாற்றாட்டம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய இடைத்தரகரான தரூண் மோகன் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். அவர் வெளிநாடுகளில் இருந்து வந்தாலோ, இங்கிருந்து தப்பி சென்றாலோ கைது செய்ய வேண்டும் என விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு லுக் அவுட் நோட்டீஸ் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்த இடைத்தரகர் தரூண் மோகனை கைது செய்தனர். இது பற்றி தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை வந்து கைதான இடைத்தரகர் தரூண் மோகனை அழைத்து செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கேரளாவை சேர்ந்த இடைத்தரகர் ரஷீத், கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் ஆள்மாற்றாட்டம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய இடைத்தரகரான தரூண் மோகன் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். அவர் வெளிநாடுகளில் இருந்து வந்தாலோ, இங்கிருந்து தப்பி சென்றாலோ கைது செய்ய வேண்டும் என விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு லுக் அவுட் நோட்டீஸ் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்த இடைத்தரகர் தரூண் மோகனை கைது செய்தனர். இது பற்றி தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை வந்து கைதான இடைத்தரகர் தரூண் மோகனை அழைத்து செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்திச்செல்ல முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள 495 கிலோ செம்மரக்கட்டைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கக முனையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சிங்கப்பூருக்கு 12 பெட்டிகளில் சுத்தமான 600 காட்டன் படுக்கை விரிப்புகள் (பெட் சீட்) ஏற்றுமதி செய்யப்படுவதாக எழுதி இருந்தது.
இந்த பெட்டிகள் வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்ததால் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அந்த பார்சல் பெட்டிகளை பிரித்து ஆய்வு செய்தனர்.
அப்போது பெட் சீட்டுகளுக்கு மத்தியில் மரக்கட்டைகள் மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். இது பற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் வந்து மரக்கட்டைகளை பரிசோதனை செய்ததில் அவை செம்மரக்கட்டைகள் என தெரியவந்தது.
செம்மரக்கட்டைகள் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட சிறப்புமிக்க மர வகை என்பதால் அவற்றை பாதுகாக்கப்பட்டதாகவும், ஏற்றுமதி செய்ய தடை விதித்தும் அரசு அறிவித்து உள்ளது.
இதையடுத்து சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்திச்செல்ல முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள 495 கிலோ எடைகொண்ட செம்மரக்கட்டைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அதை ஏற்றுமதி செய்த நிறுவன உரிமையாளரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மலேசியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் செம்மரக்கட்டைகளில் வீட்டு உபயோக பொருட்கள், மருத்துவ பொருட்கள் தயாரிக்கப்படுவதால் இவற்றை கடத்த முயற்சி செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கக முனையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சிங்கப்பூருக்கு 12 பெட்டிகளில் சுத்தமான 600 காட்டன் படுக்கை விரிப்புகள் (பெட் சீட்) ஏற்றுமதி செய்யப்படுவதாக எழுதி இருந்தது.
இந்த பெட்டிகள் வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்ததால் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அந்த பார்சல் பெட்டிகளை பிரித்து ஆய்வு செய்தனர்.
அப்போது பெட் சீட்டுகளுக்கு மத்தியில் மரக்கட்டைகள் மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். இது பற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் வந்து மரக்கட்டைகளை பரிசோதனை செய்ததில் அவை செம்மரக்கட்டைகள் என தெரியவந்தது.
செம்மரக்கட்டைகள் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட சிறப்புமிக்க மர வகை என்பதால் அவற்றை பாதுகாக்கப்பட்டதாகவும், ஏற்றுமதி செய்ய தடை விதித்தும் அரசு அறிவித்து உள்ளது.
இதையடுத்து சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்திச்செல்ல முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள 495 கிலோ எடைகொண்ட செம்மரக்கட்டைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அதை ஏற்றுமதி செய்த நிறுவன உரிமையாளரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மலேசியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் செம்மரக்கட்டைகளில் வீட்டு உபயோக பொருட்கள், மருத்துவ பொருட்கள் தயாரிக்கப்படுவதால் இவற்றை கடத்த முயற்சி செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
காஞ்சீபுரம் அருகே அண்ணன்-தம்பி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த செட்டியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வினோத்குமார் (வயது 30), சதீஷ்குமார் (28). சகோதரர்கள். இவர்களில் வினோத்குமாருக்கு சுகன்யா (23) என்ற மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். சதீஷ்குமாருக்கு கலைவாணி (25) என்ற மனைவியும், 6 மாத குழந்தையும் உள்ளனர்.
கலைவாணி அவரது தாய் வீட்டில் உள்ளார். வினோத்குமார் காஞ்சீபுரம் மண்டித்தெருவில் சொந்தமாக மெக்கானிக் கடை நடத்தி வந்தார். அவரது தம்பி சதீஷ்குமார் அதே பகுதியில் வாகன பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தார்.
கடந்த 1½ ஆண்டுகளாக சகோதரர்கள் இருவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர். இந்த காலகட்டத்தில் இவர்கள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டதை போன்று பேசிக்கொண்டும் உறவினர்கள் யாரையும் வீட்டில் சேர்க்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது.
வினோத்குமாரின் மனைவி வீட்டில் ஒரு அறையில் குழந்தையை கவனித்து கொண்டிருந்தார். அப்போது வினோத்குமாரும், சதீஷ்குமாரும் அருகில் இருந்த அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டனர். நீண்ட நேரமாகியும் உள்ளே சென்றவர்கள் வராததால் சுகன்யா இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, இருவரும் அந்த அறையில் இருந்த 2 மின் விசிறிகளில் தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த செட்டியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வினோத்குமார் (வயது 30), சதீஷ்குமார் (28). சகோதரர்கள். இவர்களில் வினோத்குமாருக்கு சுகன்யா (23) என்ற மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். சதீஷ்குமாருக்கு கலைவாணி (25) என்ற மனைவியும், 6 மாத குழந்தையும் உள்ளனர்.
கலைவாணி அவரது தாய் வீட்டில் உள்ளார். வினோத்குமார் காஞ்சீபுரம் மண்டித்தெருவில் சொந்தமாக மெக்கானிக் கடை நடத்தி வந்தார். அவரது தம்பி சதீஷ்குமார் அதே பகுதியில் வாகன பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தார்.
கடந்த 1½ ஆண்டுகளாக சகோதரர்கள் இருவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர். இந்த காலகட்டத்தில் இவர்கள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டதை போன்று பேசிக்கொண்டும் உறவினர்கள் யாரையும் வீட்டில் சேர்க்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது.
வினோத்குமாரின் மனைவி வீட்டில் ஒரு அறையில் குழந்தையை கவனித்து கொண்டிருந்தார். அப்போது வினோத்குமாரும், சதீஷ்குமாரும் அருகில் இருந்த அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டனர். நீண்ட நேரமாகியும் உள்ளே சென்றவர்கள் வராததால் சுகன்யா இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, இருவரும் அந்த அறையில் இருந்த 2 மின் விசிறிகளில் தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
படப்பை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாகாண்யம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய், (வயது 25). அதே மாகாண்யம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தேவா (26).
நண்பர்களான இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆப்பூர் கொளத்தூரில் உள்ள தங்கள் நண்பருடைய மகனின் பிறந்த நாள் விழாவுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி அருகே வரும்போது முன்னால் சென்ற லாரி மீது இடிக்காமல் இருப்பதற்காக திடீரென பிரேக் பிடித்தார்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த தேவா படுகாயம் அடைந்தார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த தேவாவை மீட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த வளத்தோட்டம் பாலாற்று படுக்கையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் யுவன் போலீசாருடன் அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த தூசி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 47), ரமேஷ் (41), பிரகாஷ் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த ஹாரூன் ரசித் (வயது 22) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரை தனிஅறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோது, அவர் அணிந்து இருந்த ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது மனாஸ் (25) என்பவரது உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.32 லட்சம் மதிப்புள்ள 660 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.49 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 10 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக முகமது மனாஸ், ஹாரூன் ரசித் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த ஹாரூன் ரசித் (வயது 22) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரை தனிஅறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோது, அவர் அணிந்து இருந்த ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது மனாஸ் (25) என்பவரது உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.32 லட்சம் மதிப்புள்ள 660 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.49 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 10 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக முகமது மனாஸ், ஹாரூன் ரசித் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
உத்திரமேரூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாம்பதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மனைவி லட்சுமி (வயது 46). இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது மானாமதி ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தும் பலன் அளிக்காததால் மனமுடைந்த நிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக மானாமதி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெருநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.






