என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை விமான நிலையத்தில் ரூ.6½ லட்சம் போதைப்பொருட்கள் பிடிபட்டது
Byமாலை மலர்16 Feb 2021 11:37 PM GMT (Updated: 16 Feb 2021 11:37 PM GMT)
நெதர்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ.6½ லட்சம் போதைப்பொருட்கள் பிடிபட்டது.
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு நெதர்லாந்து நாட்டில் இருந்து 2 பார்சல்கள் வந்திருந்தன. இந்த பார்சல்களை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, நாமக்கல், சென்னை முகவரிகளுக்கு வந்த 2 பார்சல்களில் பரிசு பெட்டி, சூப் என இருந்தது. இவற்றை சந்தேகத்தின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில், நாமக்கல் முகவரிக்கு வந்த பார்சலுக்குள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நில நிற போதை மாத்திரைகள் இருந்தன. சென்னை முகவரிக்கு வந்த பார்சலில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 26 கிராம் போதை பவுடர் இருந்தது.
மேலும் அதிகாரிகள் விசாரித்த போது, பார்சல்களில் இருந்த முகவரிகள் போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 மாதங்களுக்கு பின் மீண்டும் தபால் பார்சல்களில் போதை மாத்திரைகள் கடத்தப்பட்டிருப்பது சுங்க இலாகா அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு நெதர்லாந்து நாட்டில் இருந்து 2 பார்சல்கள் வந்திருந்தன. இந்த பார்சல்களை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, நாமக்கல், சென்னை முகவரிகளுக்கு வந்த 2 பார்சல்களில் பரிசு பெட்டி, சூப் என இருந்தது. இவற்றை சந்தேகத்தின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில், நாமக்கல் முகவரிக்கு வந்த பார்சலுக்குள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நில நிற போதை மாத்திரைகள் இருந்தன. சென்னை முகவரிக்கு வந்த பார்சலில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 26 கிராம் போதை பவுடர் இருந்தது.
மேலும் அதிகாரிகள் விசாரித்த போது, பார்சல்களில் இருந்த முகவரிகள் போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 மாதங்களுக்கு பின் மீண்டும் தபால் பார்சல்களில் போதை மாத்திரைகள் கடத்தப்பட்டிருப்பது சுங்க இலாகா அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X