search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் தற்கொலை முயற்சி"

    • ஆரல்வாய்மொழி போலீசார் ஜெய்குமாரை மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.
    • ஜெய்குமார் மீது, கோட்டார் போலீஸ் நிலையத்திலும் 2 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆரல்வாய்மொழி:

    நாகர்கோவில் இடலாக்குடி புத்தன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஜெய்குமார் (வயது 26). திருமணமான இவர் டெம்போ டிரைவராக உள்ளார்.

    இவருக்கும் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது ஜெய்குமாரின் மனைவிக்கு தெரிய வந்தது. அவர் கணவரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஜெய்குமார் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே வந்துள்ளார்.

    அவர் கள்ளக்காதலி வீட்டுக்குத் தான் செல்வார் என கருதிய அவரது மனைவி, உறவினர் ஒருவர் துணையுடன் ஜெய்குமாரை பின் தொடர்ந்து வந்தார். கள்ளக்காதலி வீட்டுக்கு ஜெய்குமார் வந்த போது, திடீரென அவர் முன்பு மனைவி வந்துள்ளார். இதனால் ஜெய்குமார் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜெய்குமாரை, மனைவியும் உறவினரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் ஜெய்குமார் மற்றும் அவரது மனைவியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு வரவேற்பாளராக இருந்த அஜய் (21) விசாரணை மேற்கொண்டார். அப்போது திடீரென ஜெய்குமார், போலீஸ் நிலையத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியை கையால் குத்தி உடைத்தார்.

    இதனை தடுக்க முயன்ற அஜய் மீதும் கண்ணாடியால் குத்தி உள்ளார். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் ஜெய்குமார், தனது உடலிலும் கண்ணாடியால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் ஆரல்வாய்மொழியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ஆரல்வாய்மொழி போலீசார் ஜெய்குமாரை மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.

    சம்பவம் குறித்து போலீஸ் நிலைய வரவேற்பாளர் அஜய் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெய்குமார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜெய்குமார் மீது, கோட்டார் போலீஸ் நிலையத்திலும் 2 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • காதல் மனைவியை பார்க்க அனுமதிக்காததால் மனவேதனை அடைந்த பிரபு, மாமியார் வீட்டின் முன்பு திடீரென பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.
    • உடல் கருகிய வாலிபருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேல்மலையனூரை சேர்ந்தவர் பிரபு (வயது33). இவர் சென்னை விருகம்பாக்கத்தில் தங்கி வெல்டிங் கடையில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அதே பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபு தினசரி மதுகுடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டு வந்ததால் விரக்தி அடைந்த காயத்ரி கடந்த 6 மாதத்துக்கு முன்பு கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    மேலும் காயத்ரியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்ற பிரபுவை அவரது மாமியார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பிரபு, மாமியார் வீட்டின் முன்பு திடீரென பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • காளிபிரகாஷ் சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.
    • காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினை காரணமா? என்று பல்வேறு கோணங்களில் அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சிவகாசியை சேர்ந்தவர் காளி பிரகாஷ் (வயது24) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் கடந்த 3 மாதங்களாக சென்னை ஆழ்வார்திருநகர் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் நண்பர்கள் 2 பேருடன் தங்கி அதே பகுதியில் உள்ள "லிப்ட்" கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு காளி பிரகாஷ் திடீரென அறையில் இருந்த "தின்னர்" திரவத்தை உடலின் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    தீ மளமளவென எரிந்ததால் அலறி துடித்த காளி பிரகாஷ் வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் ஓடினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளி பிரகாசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காளிபிரகாஷ் சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினை காரணமா? என்று பல்வேறு கோணங்களில் அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை தலைக்கேறிய நிலையில் வாலிபர் திடீரென மதுபாட்டிலை உடைத்து தன்னைத்தானே குத்தி கொண்டார்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கலையரங்கம் அருகே டாஸ்மாக் பார் உள்ளது. இந்த பாரில் தேனியை சேர்நத திப்புசுல்தான் என்பவர் மதுகுடிக்க வந்தார். நேரம் செல்ல செல்ல போதை தலைக்கேறிய நிலையில் அவர் திடீரென மதுபாட்டிலை உடைத்து தன்னைத்தானே குத்தி கொண்டார். இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக கொடைக்கானல் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் கூக்கால் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் வேலைபார்த்து வந்தது தெரியவந்தது.

    எதற்காக அவர் தற்கொலை செய்ய முயன்றார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×