என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    • சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்திட்டு பகுதி வரை பரிசல் இயக்கப்படுகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலங்களில் மழையின் அளவு குறைந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு 17,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் இன்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தன. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே நேற்று கனமழை பெய்ததால் காவிரி ஆற்றில் இன்னும் கூடுதலாக தண்ணீர் வரத்து கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலுவில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீராலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும் படிப்படியாக அதிகரித்து இன்று வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நீர்வரத்தானது கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீராலோ அல்லது ஆங்காங்கே காவிரி கரையோர பகுதிகளில் பெய்யக்கூடிய மழையினாலோ நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்ற போதிலும் சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்திட்டு பகுதி வரை பரிசல் இயக்கப்படுகிறது.

    தொடர்ந்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்வதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில், காவிரி ஆற்றில் குளிக்க 27-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருகை தந்தனர். ஆனால், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் நீர்வரத்து காவிரி ஆற்றில் அதிகரிப்பதும் குறைவதும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவைப் பொறுத்து உள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை பெறவே தமிழ் புதல்வன் திட்டம் என குற்றம் சாட்டினார்.
    • தமிழ்ப் புதல்வன் என்பதற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று வைக்க முடியுமா என கேள்வி கேட்டுயுள்ளார்.

    தருமபுரி:

    கோவை அரசு கலைக்கல்லூரியில் இருந்து, நேற்று தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்தினை தெரிவித்தார்.

    உலக பழங்குடியினர் தினத்தை ஒட்டி, தருமபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சி பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அவர் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை பெறவே தமிழ்ப் புதல்வன் திட்டம் என குற்றம்சாட்டிய சீமான், தமிழ்ப்புதல்வன் என்பதற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று வைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

    திராவிட கட்சிகள் காசே இல்லாமல் கூட்டத்தை கூட்டினால் கட்சியை கலைத்துவிட்டு செல்வதாக சவால் விட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். நாதக, பாஜகவின் B டீம் அல்ல என்றும் திமுக தான் பாஜகவின் மெயின் டீம் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகா அணிகளில் இருந்து நேற்று மீண்டும் நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
    • மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. அதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகள் நிரம்பி அதில் இருந்து உபரி நீர் தொடர்ந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடி அளவில் இருந்து 2 லட்சம் கனஅடி அளவு வரை அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து நீர்வரத்து படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்தது நேற்று நிலவரப்படி வினாடிக்கு 8ஆயிரம் கன அடி வரை வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் கர்நாடகா அணிகளில் இருந்து நேற்று மீண்டும் நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தானது படிபடியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்ற போதிலும் சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்திட்டு பகுதி வரை பரிசல் இயக்கப்படுகிறது.

    தொடர்ந்து 20 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்வதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில், காவிரி ஆற்றில் குளிக்க 26-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் நீர்வரத்து காவிரி ஆற்றில் அதிகரிப்பதும் குறைவதும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவைப் பொறுத்து உள்ளது என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • 8000 கன அடியில் இருந்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
    • பரிசல் பயணம் துவங்கிய நிலையில், மீண்டும் தடை விதிக்க வாய்ப்பு.

    ஒகேனக்கல் ஆற்றில், நீர் வரத்து வினாடிக்கு 8000 கன அடியில் இருந்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதனால், ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாலை வரை 8000 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளது.

    இதனால், நீர் வரத்து குறைந்ததால் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    25 நாட்களுக்கு பிறகு 2 நாட்களாக பரிசல் பயணம் துவங்கிய நிலையில், மீண்டும் தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறையத் தொடங்கி உள்ளது.
    • பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

    ஒகேனக்கல்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

    கர்நாடக மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது.

    இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் ஒகேனக்கலில் வரலாறு காணாத அளவு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    ஆற்றில் வினாடிக்கு 2.30 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் கடந்த 23 நாட்களாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டது. தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால். ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது.

    நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்த இன்று காலை நிலவரப்படி 8 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

    இதனையடுத்து ஒகேனக்களுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து நீடிக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இதனையடித்து பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே. மணி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன் மற்றும் சகிலா ஆகியோர்கள் ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்மேடு வரை பரிசல் பயணத்தினை தொடங்கி வைத்தனர்.

    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
    • நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    அதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் இன்று வினாடிக்கு 38, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் தருமபுரி மாவட்ட ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்து இருந்த நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 24 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, சினிப்பால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிக அளவில் வருவதால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்கவும் பரிசல் இயங்கவும் விதிக்கப்பட்ட தடையானது 24-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.

    மேலும் நீர்வரத்து காவிரி ஆற்றில் அதிகரிப்பதும் குறைவதும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவைப் பொறுத்து உள்ளது என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    • கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
    • நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, சினிப்பால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    அதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் உபரி நீரானது 38,315 கன அடி உபரி நீர் வெளியேற்றப் பட்டது

    இதனால் தருமபுரி மாவட்ட ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்து இருந்த நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 60ஆயிரம் கன அடியாக குறைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி நிலவரப்படி 55 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

    நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, சினிப்பால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிக அளவில் வருவதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்கவும் பரிசல் இயங்கவும் விதிக்கப்பட்ட தடையானது 22-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.

    காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • யானை ஒன்று வாழை மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது.
    • யானை தாக்கியதில் விவசாயியின் வலது கால் முறிவு ஏற்பட்டுள்ளது .

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே தொன்ன குட்டஹள்ளி குட்டக்காடு பகுதியைச் சேர்ந்த சின்ன ராஜ். இவரது மகன் செல்வகுமார், இவர் அவருடைய விவசாய நிலத்தில் சுமார் 4 ஏக்கரில் வாழை மரங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அடிக்கடி ஒற்றை யானை ஒன்று அவரது விவசாய நிலத்தில் உள்ள வாழை மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது. அதேபோல் நேற்று இரவு ஒற்றை யானை வாழை தோட்டத்தை சேதப்படுத்தி விட்டு விவசாயி தூங்கி கொண்டிருந்த போது விவசாயியை தாக்கியுள்ளது. அருகிலுள்ள விவசாயிகள் இதனைக் கண்டு சத்த மிட்டத்துடன் பட்டாசுகளை வெடித்து அங்கிருந்து யானையை விரட்டி அடித்தனர்.

    பின்னர் காயம் அடைந்த விவசாயியை 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். யானை தாக்கியதில் விவசாயியின் வலது கால் முறிவு ஏற்பட்டுள்ளது .

    இந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக வனத்துறையினர் ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • ஐந்தருவியில் பாறைகள் தெரியாதபடி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
    • காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    அதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 84 அடி நீர் இருப்பு 80.60 அடி நீர் இருப்பு உள்ளது அணைக்கு வரும் நீர்வரத்து 32 ஆயிரத்து 559 கனஅடி நீரானது அணைக்கு வருகிறது. அணையில் இருந்து நேற்று 33 ஆயிரத்து 771 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையானது 124.80 அடி கொள்ளளவு கொண்டது அணையின் நீர்மட்டம் 122.24 அடி அளவில் தண்ணீர் உள்ளது.

    அணைக்கு வரும் நீர் வரத்தானது 73 ஆயிரத்து 500 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் நேற்று 57 ஆயிரத்து 398 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் உபரி நீரானது 91,169 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள இரு அணைகளில் இருந்து கடந்த 2 தினங்களாக ஒரு லட்சம் கனஅடிக்குள் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதால், தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்ட ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 1.35 லட்சம் கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 80ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி மேலும் சரிந்து நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து சற்று குறைந்து வந்தபோதிலும், ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிப்பால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    ஐந்தருவியில் பாறைகள் தெரியாதபடி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நீர் வரத்து தொடர்ந்து அதிக அளவில் வருவதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்கவும் பரிசல் இயங்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18 நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் போலீசார், வருவாய் துறையினர், தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் ஊர் காவல் படையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 6 மாதத்திற்கு முன்பு இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
    • சாமி ஊர்வலத்தை காண ஏராளமானோர் திரண்டனர்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ பட்டாபிராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை, மாலை என 2 வேளை பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த ஸ்ரீ பட்டாபிராமர் கோவில் செயல்பட தொடங்கியது.

    கடந்த இரண்டு நாட்களாக ஆடிப்பெருக்கு தினத்தில் ஸ்ரீ பட்டாபிராமர் சாமி கோவிலுக்கு அருகில் உள்ள அனுமன் தீர்த்தம் பகுதியில் உள்ள அனுமந்தீஸ்வரர் ஆலயத்தில் கொண்டு சென்று புனித தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நொச்சிப்பட்டி கிராம பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் தங்கள் பகுதிக்கு தற்பொழுது வரையிலும் சுவாமி ஊர்வலம் வந்ததே இல்லை. எனவே, தங்கள் ஊர் பகுதியில் சாமி ஊர்வலம் வருவதற்கு அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அளிக்கப்பட்ட உத்தரவின் பேரில் ஸ்ரீ பட்டாபிராமர் சாமி ஊர்வலம் நொச்சிப்பட்டி கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. இப்பகுதி மக்களுக்கு பிரமிக்கும் வகையில் காட்சி யளித்தார். சாமி ஊர்வலத்தை காண அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.

    200 ஆண்டுகளாக சாமி ஊர்வலம் காணாத அப்பகுதி மக்கள் தற்போது தங்களது ஊரில் சாமி திருவீதி உலா வருவதை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ஒகேனக்கல் பகுதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
    • கரையோரங்களில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

    ஒகேனக்கல்:

    ஆடி, புரட்டாசி, தை ஆகிய தமிழ் மாதங்களில் வரும் மகளாய அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்தால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஐதீகம். மேலும் நாம் முன்னோர்களை நினைத்து செய்யும் பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம் நம்பிக்கையும் உண்டு .

    அதன்படி ஆடி அமாவாசை இன்று தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய் பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விடுவர்.

    இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக உள்ளதால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் வாகனம் மடம் சோதனை சாவடியில் திருப்பி அனுப்பப்படுகிறது.

    மேலும் பஸ்சில் தர்ப்பணம் கொடுக்க வரும் மக்களை கரையோர பகுதிகளான சத்திரம், நாகர்கோவில், முதலைப்பண்ணை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.

    இதன் காரணமாக உள்ளூர் மக்கள் மட்டுமே கரையோரங்களில் பூஜை செய்து வழிபட்டனர். இதனால் ஒகேனக்கல் ஆடி அமாவாசை என்று வெறிச்சோடி காணப்பட்டது. 

    • அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
    • 16 வது நாளாக குளிக்க தடை

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, ஹாசன், மாண்டியா, உத்தரகான்ட், தட்சண கன்னடா, உடுப்பி, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அதி தீவிரமாக கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று மாலை வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டன. அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாகவும், தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

    இந்த நீர்வரத்து காரணமாக மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளை தண்ணீர் மூழ்கடித்தவாறு செல்கிறது.

    மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதைகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீரானது திறந்து விடப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லில் மேலும் நீரின் அளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 16 வது நாளாக நீடித்து வருகிறது.

    மேலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் கரையோரங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகள் தனியார் விடுதிகளை ஆற்று நீர் வெள்ளம் சூழ்ந்தது.

    மேலும் ஒகேனக்கல்லில் இருந்து அஞ்செட்டி வழியாக ஓசூர் செல்லக்கூடிய பிரதான சாலையில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை கண்டு கொள்ளாமல் ஆபத்தையும் உணராமல் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தண்ணீர் சூழ்ந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

    மேலும் 2 லட்சத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுக்கும் பட்சத்தில் கரையோர பகுதியில் வாழும் குடியிருப்புகளை சேர்ந்த மக்களை அப்புறப்படுத்தும் சூழல் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×