என் மலர்
கடலூர்
காட்டுமன்னார்கோவிலில் குடும்ப தகராறு காரணமாக 3 வயது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் விஷம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(வயது 38). விவசாயி. இவரது மனைவி கயல்விழி(30). இவர்களுக்கு 3 வயதில் சிவதரஷினி என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்தநிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை தமிழ்செல்வனுக்கும், கயல்விழிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் கயல்விழி மனவேதனை அடைந்தார். சிறிது நேரத்தில் தமிழ்செல்வன் வீட்டை விட்டு வெளியே சென்றார். கயல்விழி வீட்டில் அழுது கொண்டே இருந்தார். கணவர் தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். பின்பு தான் இறந்து விட்டால் தனது 3 வயது பெண் குழந்தை அனாதையாகி விடுமோ என்று கருதினார்.
பின்பு அவர் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள நினைத்தார். பின்பு கயல்விழி மனதை கல்லாக்கி கொண்டு தான் பெற்ற குழந்தையான சிவதரஷினிக்கு விஷம் கொடுத்தார். பின்பு கயல் விழியும் அந்த விஷத்தை எடுத்து குடித்தார்.
சிறிது நேரத்தில் தாயும், மகளும் மயங்கி விழுந்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சிவதரஷினி பரிதாபமாக இறந்தார்.
கயல்விழியின் நிலைமை மோசமாக உள்ளது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தசம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(வயது 38). விவசாயி. இவரது மனைவி கயல்விழி(30). இவர்களுக்கு 3 வயதில் சிவதரஷினி என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்தநிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை தமிழ்செல்வனுக்கும், கயல்விழிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் கயல்விழி மனவேதனை அடைந்தார். சிறிது நேரத்தில் தமிழ்செல்வன் வீட்டை விட்டு வெளியே சென்றார். கயல்விழி வீட்டில் அழுது கொண்டே இருந்தார். கணவர் தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். பின்பு தான் இறந்து விட்டால் தனது 3 வயது பெண் குழந்தை அனாதையாகி விடுமோ என்று கருதினார்.
பின்பு அவர் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள நினைத்தார். பின்பு கயல்விழி மனதை கல்லாக்கி கொண்டு தான் பெற்ற குழந்தையான சிவதரஷினிக்கு விஷம் கொடுத்தார். பின்பு கயல் விழியும் அந்த விஷத்தை எடுத்து குடித்தார்.
சிறிது நேரத்தில் தாயும், மகளும் மயங்கி விழுந்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சிவதரஷினி பரிதாபமாக இறந்தார்.
கயல்விழியின் நிலைமை மோசமாக உள்ளது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தசம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47.30 அடியாக உயர்ந்தது. #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
வீராணம் ஏரி விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் தாகத்தை தீர்த்து வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேரும். பின்னர் வடவாறு வீராணம் ஏரியை வந்து சேரும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மழையின் காரணமாக 2 முறை வீராணம் ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணை மூலம் வீராணம் ஏரிக்கு வந்து அடைந்தது.
இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44.3 அடியாக உயர்ந்தது. சென்னைக்கு தொடர்ந்து 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. பின்னர் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது.
இதையடுத்து வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறையத்தொடங்கியது. இதனால் சென்னைக்கு 68 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் கடந்த 4-ந் தேதி 44.30 அடியாக குறைந்தது.
இந்நிலையில் பானி புயலை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், வீராணம் ஏரி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. மழையின் காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47.30 அடியாக உயர்ந்தது. வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.10 அடியாக இருந்தது. இன்றைய நீர்மட்டம் 46.5 அடியாக உள்ளது. சென்னைக்கு 51 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
விவசாயத்துக்கு வி.என்.எஸ்.மதகு வழியாக 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கோடைகாலத்தில் வீராணம் ஏரி கடல்போல் காட்சியளிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
2013-ம் ஆண்டுக்கு பிறகு கோடைகாலத்தில் வீராணம் ஏரி நிரம்பி உள்ளது. ஏரியில் தண்ணீர் குறைய, குறைய கீழணையில் இருந்து தண்ணீர் பெறப்படும். அதன்மூலம் சென்னையில் குடிநீர் தேவையை ஜூலை மாதம் வரை சமாளிக்கமுடியும் என்று அதிகாரிகள் கூறினார்கள். #VeeranamLake
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
வீராணம் ஏரி விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் தாகத்தை தீர்த்து வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேரும். பின்னர் வடவாறு வீராணம் ஏரியை வந்து சேரும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மழையின் காரணமாக 2 முறை வீராணம் ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணை மூலம் வீராணம் ஏரிக்கு வந்து அடைந்தது.
இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44.3 அடியாக உயர்ந்தது. சென்னைக்கு தொடர்ந்து 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. பின்னர் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது.
இதையடுத்து வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறையத்தொடங்கியது. இதனால் சென்னைக்கு 68 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் கடந்த 4-ந் தேதி 44.30 அடியாக குறைந்தது.
இந்நிலையில் பானி புயலை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், வீராணம் ஏரி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. மழையின் காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47.30 அடியாக உயர்ந்தது. வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.10 அடியாக இருந்தது. இன்றைய நீர்மட்டம் 46.5 அடியாக உள்ளது. சென்னைக்கு 51 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
விவசாயத்துக்கு வி.என்.எஸ்.மதகு வழியாக 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கோடைகாலத்தில் வீராணம் ஏரி கடல்போல் காட்சியளிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
2013-ம் ஆண்டுக்கு பிறகு கோடைகாலத்தில் வீராணம் ஏரி நிரம்பி உள்ளது. ஏரியில் தண்ணீர் குறைய, குறைய கீழணையில் இருந்து தண்ணீர் பெறப்படும். அதன்மூலம் சென்னையில் குடிநீர் தேவையை ஜூலை மாதம் வரை சமாளிக்கமுடியும் என்று அதிகாரிகள் கூறினார்கள். #VeeranamLake
பண்ருட்டி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 40). டாஸ்மாக் ஊழியரான இவர் கடந்த 15-3-2019 அன்று இரவு வியாபாரம் முடிந்ததும் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு பண்ருட்டி ராசாப்பாளையம் கூட்ரோடு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பாஸ்கரனை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த 430 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவுசெய்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பெருமுக்கல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிசாமி மகன் பாலா(வயது 27), செஞ்சி ஜெயம்கொண்டான் கிராமம், மேட்டுதெருவை சேர்ந்த பாலமுருகன்(26) ஆகியோரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்த னர். இவர்கள் மீது பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, செஞ்சி, திண்டிவனம் மற்றும் பண்ருட்டி போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதேபோல் பண்ருட்டி ஆத்திரிக்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்த வசந்திராணி(30) என்பவர் கடந்த 25-3-2019 அன்று சொரத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மேல் அருங்குணம் மேட்டு தெருவை சேர்ந்த சங்கர் என்கிற ஜெய்சங்கர்(35) என்பவர் வசந்திராணியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த கவரிங் நகைகளை வழிப்பறி செய்தார்.
இது குறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவுசெய்து ஜெய்சங்கரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையம், திருப்பாதிரிப்புலியூர், முத்தாண்டிக்குப்பம், காடாம்புலியூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களது குற்ற செயல்களை தடுக்கும் வகையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய் தார். இதை ஏற்று கலெக்டர் அன்புசெல்வன், சிறையில் உள்ள பாலா, பாலமுருகன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.இதற்கான உத்தரவு நகல் சிறை காவலர்கள் மூலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.
பண்ருட்டி அருகே உள்ள பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 40). டாஸ்மாக் ஊழியரான இவர் கடந்த 15-3-2019 அன்று இரவு வியாபாரம் முடிந்ததும் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு பண்ருட்டி ராசாப்பாளையம் கூட்ரோடு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பாஸ்கரனை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த 430 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவுசெய்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பெருமுக்கல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிசாமி மகன் பாலா(வயது 27), செஞ்சி ஜெயம்கொண்டான் கிராமம், மேட்டுதெருவை சேர்ந்த பாலமுருகன்(26) ஆகியோரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்த னர். இவர்கள் மீது பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, செஞ்சி, திண்டிவனம் மற்றும் பண்ருட்டி போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதேபோல் பண்ருட்டி ஆத்திரிக்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்த வசந்திராணி(30) என்பவர் கடந்த 25-3-2019 அன்று சொரத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மேல் அருங்குணம் மேட்டு தெருவை சேர்ந்த சங்கர் என்கிற ஜெய்சங்கர்(35) என்பவர் வசந்திராணியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த கவரிங் நகைகளை வழிப்பறி செய்தார்.
இது குறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவுசெய்து ஜெய்சங்கரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையம், திருப்பாதிரிப்புலியூர், முத்தாண்டிக்குப்பம், காடாம்புலியூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களது குற்ற செயல்களை தடுக்கும் வகையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய் தார். இதை ஏற்று கலெக்டர் அன்புசெல்வன், சிறையில் உள்ள பாலா, பாலமுருகன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.இதற்கான உத்தரவு நகல் சிறை காவலர்கள் மூலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.
சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.
சிதம்பரம்:
சிதம்பரம் தாலுகா ஜெயங்கொண்டபட்டினம் பூக்காரத்தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் விக்னேஷ்(வயது 21). இவர் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் சீர்காழி அருகே உள்ள திருமயிலடி கிராமத்தை சேர்ந்த நண்பர் கணேசன் என்பவருடன், ஒரு மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டினார். சிதம்பரம் அடுத்த கடவாச்சேரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த பஸ் ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கணேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான விக்னேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலியில் கல்லூரி மாணவிகளை கேலி செய்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர்:
நெய்வேலி 21-வது வட்டம் அண்ணாநகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி ஆண்டாள்(வயது48). கடந்த மாதம் 1-ந்தேதி இவரது வீட்டு முன்பு கல்லூரி மாணவிகள் சென்று கொண்டு இருந்தனர். அவர்களை அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ்(25), வெங்கடேசன் ஆகியோர் கேலி செய்தனர். இதை கவனித்த ஆண்டாள், இருவரையும் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் ஆண்டாளை அசிங்கமாக திட்டி, அவரது வீட்டை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிந்திரராஜ் வழக்குப்பதிவு செய்து, விமல்ராஜையும், வெங்கடேசனையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
இந்த நிலையில் விமல்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவுப்படி விமல்ராஜை தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிந்திரராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார். விமல்ராஜ் மீது ஏற்கனவே தெர்மல் போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகள் உள்ளன.
அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகல், கடலூர் மத்திய சிறையில் உள்ள விமல்ராஜிடம் வழங்கப்பட்டது.
கடலூர் செம்மண்டலத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் சாலையில் ஆறாக ஓடியது. கோடையில் தண்ணீர் வீணாவதால் மக்கள் வேதனையடைந்து இருக் கிறார்கள்.
கடலூர்:
கடலூர் நகராட்சி பகுதிகளுக்கு கேப்பர்மலை மற்றும் திருவந்திபுரம் பகுதியில் உள்ள நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கென பிரதான குழாய்கள் மூலம் குடிநீரை எடுத்துவந்து கடலூர் நகர பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி பின்னர் நகரமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகித்து வருகிறது.
சமீபகாலமாக நகர பகுதியில் குடிநீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் செம்மண்டலத்தில் பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதையடுத்து அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் சாலையில் ஆறாக ஓடியது. மேலும் அந்த பகுதியில் குளம் போன்று தண்ணீர் தேங்கி நின்று வருகிறது.
உடைப்பு காரணமாக அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். சிலர் தனியார் குடிநீர் வாகனங்களில் பணம்கொடுத்து குடிநீரை வாங்கி தேவையை பூர்த்திசெய்தனர்.
தற்போது கோடை காலம் என்பதால் மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் நகர பகுதியிலேயே அவ்வப்போது இதுபோன்று குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் சாலையில் வீணாகி வருவது மக்களை வேதனை அடைய செய்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் குறுகிய காலத்திலேயே கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்போடுவோம் என்ற அச்சம் எழுவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். உடைப்பு குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.
இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கடலூர் திருவந்திபுரம் நீரேற்று நிலையத்தில் இருந்து செம்மண்டலம் தீபன் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் எடுத்து வரும் பிரதான குழாயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. தற்போது உடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கும் பணியையும் தொடங்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.
கடலூர் நகராட்சி பகுதிகளுக்கு கேப்பர்மலை மற்றும் திருவந்திபுரம் பகுதியில் உள்ள நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கென பிரதான குழாய்கள் மூலம் குடிநீரை எடுத்துவந்து கடலூர் நகர பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி பின்னர் நகரமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகித்து வருகிறது.
சமீபகாலமாக நகர பகுதியில் குடிநீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் செம்மண்டலத்தில் பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதையடுத்து அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் சாலையில் ஆறாக ஓடியது. மேலும் அந்த பகுதியில் குளம் போன்று தண்ணீர் தேங்கி நின்று வருகிறது.
உடைப்பு காரணமாக அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். சிலர் தனியார் குடிநீர் வாகனங்களில் பணம்கொடுத்து குடிநீரை வாங்கி தேவையை பூர்த்திசெய்தனர்.
தற்போது கோடை காலம் என்பதால் மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் நகர பகுதியிலேயே அவ்வப்போது இதுபோன்று குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் சாலையில் வீணாகி வருவது மக்களை வேதனை அடைய செய்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் குறுகிய காலத்திலேயே கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்போடுவோம் என்ற அச்சம் எழுவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். உடைப்பு குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.
இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கடலூர் திருவந்திபுரம் நீரேற்று நிலையத்தில் இருந்து செம்மண்டலம் தீபன் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் எடுத்து வரும் பிரதான குழாயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. தற்போது உடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கும் பணியையும் தொடங்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.
திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை, கணவரே அடித்துக் கொன்று விட்டு நாடகமாடியது சப்-கலெக்டர் விசாரணையில் அம்பலமானது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பார்த்தீபன்(வயது 27). தொழிலாளி. இவருக்கும், விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்த சிவப்பிரியா(26) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் சிவப்பிரியா கடந்த மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தீபனை கைது செய்தனர். பின்னர் அவரை விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்.
திருமணமான 7 மாதத்தில் சிவப்பிரியா இறந்ததால், இது சம்பந்தமாக சப்-கலெக்டர் பிரசாந்த் விசாரணை நடத்த போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் அவர் விசாரணை நடத்தினார். விசாரணையில், பார்த்தீபன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, சிவப்பிரியாவை அடித்து கொலை செய்துவிட்டு அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. மேலும், சிவப்பிரியாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, இந்த கொலைக்கு பார்த்தீபனின் தாய் கவுரி (50), சகோதரிகள் பானுமதி, நளினி ஆகியோரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பான அறிக்கையை சப்-கலெக்டர் பிரசாந்த் நேற்று வெளியிட்டார். அதன்அடிப்படையில் சிவப்பிரியா இறந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றினர். பின்னர் கவுரியை போலீசார் கைது செய்தனர். மேலும் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பார்த்தீபனை கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பார்த்தீபன்(வயது 27). தொழிலாளி. இவருக்கும், விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்த சிவப்பிரியா(26) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் சிவப்பிரியா கடந்த மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தீபனை கைது செய்தனர். பின்னர் அவரை விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்.
திருமணமான 7 மாதத்தில் சிவப்பிரியா இறந்ததால், இது சம்பந்தமாக சப்-கலெக்டர் பிரசாந்த் விசாரணை நடத்த போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் அவர் விசாரணை நடத்தினார். விசாரணையில், பார்த்தீபன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, சிவப்பிரியாவை அடித்து கொலை செய்துவிட்டு அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. மேலும், சிவப்பிரியாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, இந்த கொலைக்கு பார்த்தீபனின் தாய் கவுரி (50), சகோதரிகள் பானுமதி, நளினி ஆகியோரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பான அறிக்கையை சப்-கலெக்டர் பிரசாந்த் நேற்று வெளியிட்டார். அதன்அடிப்படையில் சிவப்பிரியா இறந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றினர். பின்னர் கவுரியை போலீசார் கைது செய்தனர். மேலும் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பார்த்தீபனை கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோடை விடுமுறை காரணமாக பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு அவர்கள், குடும்பத்துடன் ஆனந்தமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
பரங்கிப்பேட்டை:
சிதம்பரம் அருகே கிள்ளையில் பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந் துள்ளது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த மாங்குரோவ் காடுகள் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதனை சதுப்பு நிலக்காடுகள், அலையாத்திக்காடுகள் என்றும் அழைக்கிறார்கள். இங்கு 1,100 வாய்க்கால்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது மாங்குரோவ், கண்டல் வகை மரங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து, மாங்குரோவ் காடுகளை ரசித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே பள்ளி மாணவ-மாணவிகள், கோடை விடுமுறையை உற்சாகமாக கழித்து வருகிறார்கள். விடுமுறை என்பதால் சிலர் குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழ்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு நேற்று சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக இருந்தது. சுற்றுலாத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தில் பயணிகள் ஏறி, பிச்சாவரத்தின் மொத்த அழகையும் பார்த்து ரசித்தனர்.
மேலும் துடுப்பு படகுகள், மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகு சவாரி செய்து, மாங்குரோவ் காடுகளை ரசித்தனர். அவ்வாறு படகில் செல்லும் போது, மாங்குரோவ் மரங்கள் நம்மை வருடிச்செல்லும். காடுகளுக்கு நடுவே வாய்க்காலில் பயணம் செய்தது புதிய அனுபவமாக இருந்ததாக சுற்றுலா பயணிகள் கூறினர்.
சிதம்பரம் அருகே கிள்ளையில் பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந் துள்ளது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த மாங்குரோவ் காடுகள் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதனை சதுப்பு நிலக்காடுகள், அலையாத்திக்காடுகள் என்றும் அழைக்கிறார்கள். இங்கு 1,100 வாய்க்கால்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது மாங்குரோவ், கண்டல் வகை மரங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து, மாங்குரோவ் காடுகளை ரசித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே பள்ளி மாணவ-மாணவிகள், கோடை விடுமுறையை உற்சாகமாக கழித்து வருகிறார்கள். விடுமுறை என்பதால் சிலர் குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழ்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு நேற்று சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக இருந்தது. சுற்றுலாத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தில் பயணிகள் ஏறி, பிச்சாவரத்தின் மொத்த அழகையும் பார்த்து ரசித்தனர்.
மேலும் துடுப்பு படகுகள், மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகு சவாரி செய்து, மாங்குரோவ் காடுகளை ரசித்தனர். அவ்வாறு படகில் செல்லும் போது, மாங்குரோவ் மரங்கள் நம்மை வருடிச்செல்லும். காடுகளுக்கு நடுவே வாய்க்காலில் பயணம் செய்தது புதிய அனுபவமாக இருந்ததாக சுற்றுலா பயணிகள் கூறினர்.
சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்தபோது முதலை இழுத்துச் சென்ற விவசாயியை தீயணைப்பு படையினர் 2-வது நாளாக தேடி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் அடிக்கடி கரைக்கு வருவது வழக்கம். ஆற்றில் குளிக்க செல்லும் பொதுமக்கள் பலர் கரைக்கு வரும் முதலைகளை பார்த்து அச்சம் அடைந்து வந்தனர். இந்த முதலைகளை பிடிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஆற்றில் குளிக்க சென்ற விவசாயி ஒருவரை முதலை இழுத்து சென்றுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பெராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமணி (வயது 45), விவசாயி. நேற்று அவர் தனது மனைவி முத்து லட்சுமியுடன் பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றார். கணவனும், மனைவியும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஜெயமணியின் காலை திடீரென்று ஒரு முதலை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது. உடனே ஜெயமணி கூச்சல் போட்டார். அங்கு குளித்து கொண்டிருந்த முத்துலட்சுமியும் தனது கணவரை முதலை தண்ணீருக்குள் இழுத்து செல்வதை பார்த்து அவரும் கூச்சலிட்டார்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்து ஆற்றுக்குள் இறங்கி ஜெயமணியை தேடினர். ஆனால் அவர்களால் ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக அவர்கள் இதுகுறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் அங்கு விரைந்துவந்தனர். பின்னர் அவர்கள் படகுகள் மூலம் ஆற்றில் இறங்கி ஜெயமணியை இரவு 7 மணிவரை தேடினர். வெகுநேரம் தேடியும் ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்பு அவர்கள் கரை திரும்பினர்.
2-வது நாளாக இன்று காலை தீயணைப்பு படையினர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் மீனவர்களும் ஆற்றில் இறங்கி தேடி வருகிறார்கள். முதலை இழுத்து சென்ற விவசாயி ஜெயமணியின் கதி என்ன என்று தெரிய வில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.
ஆற்றில் குளித்த விவசாயியை முதலை இழுத்து சென்ற சம்பவம் பெராம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் அடிக்கடி கரைக்கு வருவது வழக்கம். ஆற்றில் குளிக்க செல்லும் பொதுமக்கள் பலர் கரைக்கு வரும் முதலைகளை பார்த்து அச்சம் அடைந்து வந்தனர். இந்த முதலைகளை பிடிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஆற்றில் குளிக்க சென்ற விவசாயி ஒருவரை முதலை இழுத்து சென்றுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பெராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமணி (வயது 45), விவசாயி. நேற்று அவர் தனது மனைவி முத்து லட்சுமியுடன் பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றார். கணவனும், மனைவியும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஜெயமணியின் காலை திடீரென்று ஒரு முதலை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது. உடனே ஜெயமணி கூச்சல் போட்டார். அங்கு குளித்து கொண்டிருந்த முத்துலட்சுமியும் தனது கணவரை முதலை தண்ணீருக்குள் இழுத்து செல்வதை பார்த்து அவரும் கூச்சலிட்டார்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்து ஆற்றுக்குள் இறங்கி ஜெயமணியை தேடினர். ஆனால் அவர்களால் ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக அவர்கள் இதுகுறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் அங்கு விரைந்துவந்தனர். பின்னர் அவர்கள் படகுகள் மூலம் ஆற்றில் இறங்கி ஜெயமணியை இரவு 7 மணிவரை தேடினர். வெகுநேரம் தேடியும் ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்பு அவர்கள் கரை திரும்பினர்.
2-வது நாளாக இன்று காலை தீயணைப்பு படையினர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் மீனவர்களும் ஆற்றில் இறங்கி தேடி வருகிறார்கள். முதலை இழுத்து சென்ற விவசாயி ஜெயமணியின் கதி என்ன என்று தெரிய வில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.
ஆற்றில் குளித்த விவசாயியை முதலை இழுத்து சென்ற சம்பவம் பெராம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டியில் பலாப்பழம் சீசன் களைகட்டியது. ஒரு டன் பலாப்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பண்ருட்டி:
பண்ருட்டியில் உள்ள மொத்த வியாபாரிகள் பலாப்பழங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கி வெளி ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பண்ருட்டியில் இருந்து மும்பை, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். மேலும் பல வியாபாரிகள் பண்ருட்டிக்கு வந்து, பலாப்பழங்களை வாங்கிச்செல்கிறார்கள்.
மழையில்லாததால் பலாமரங்களில் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் பலாப்பழங்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து ஒரு டன் பலாப்பழம் ரூ.20 ஆயிரத்துக்கு வியாபாரிகள் வாங்கினர். ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் பலாப்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு வாங்கப்படுகிறது.
செம்மண் பாங்கான பூமியான பண்ருட்டி, பணிக்கன்குப்பம், சாத்திப்பட்டு, மாளிகம்பட்டு, கீழக்குப்பம், நடுக்குப்பம், பிள்ளையார்குப்பம், கீழ்மாம்பட்டு, மேல் மாம் பட்டு, காடாம்டபுலியூர், மருங்கூர், காட்டுக்கூடலூர், சிறுதொண்டமாதேவி, தாழம்பட்டு, காளிக்குப்பம், நடுவீரப்பட்டு, புலியூர்காட்டுசாகை, அரசடிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பில் பலா மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில்தான் பலாப்பழ சீசன் களை கட்டும்.
கடந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யாததால் பண்ருட்டி பகுதியில் உள்ள பலா மரங்கள் குறைந்த அளவே காய்த்துள்ளன. விளைச்சல் குறைந்திருந்த போதிலும் அறுவடை செய்யப்படும் பலாப்பழங்கள் விற்பனைக்காக வேன்கள், மினி லாரிகள், மாட்டு வண்டிகள் மூலம் தினமும் பண்ருட்டி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் தற்போது பலாப்பழ சீசன் களை கட்டியுள்ளது.
பண்ருட்டியில் உள்ள மொத்த வியாபாரிகள் பலாப்பழங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கி வெளி ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பண்ருட்டியில் இருந்து மும்பை, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். மேலும் பல வியாபாரிகள் பண்ருட்டிக்கு வந்து, பலாப்பழங்களை வாங்கிச்செல்கிறார்கள்.
மழையில்லாததால் பலாமரங்களில் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் பலாப்பழங்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து ஒரு டன் பலாப்பழம் ரூ.20 ஆயிரத்துக்கு வியாபாரிகள் வாங்கினர். ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் பலாப்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு வாங்கப்படுகிறது.
புதுப்பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில், செல்போன் கடையில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுப்பேட்டை:
புதுப்பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் கோவில் எதிரில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த பணத்தை காணவில்லை. இதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள், அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து, கோவிலை பார்வையிட்டு பக்தர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதேபோல் கோட்லாம்பாக்கத்தில் உள்ள ஒரு செல்போன் கடை பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், அங்கு இருந்த 4 செல்போன்கள் மற்றும் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடிச்சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் விரைந்து வந்து, திருட்டு நடந்த கடையை பார்வையிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கை ரேகைகளையும், தடயங்களையும் சேகரித்தனர். முத்துமாரியம்மன் கோவில் மற்றும் செல்போன் கடையில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, மர்மநபர்களை வலைவீசி தேடி வரு கின்றனர்.
புதுப்பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் கோவில் எதிரில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த பணத்தை காணவில்லை. இதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள், அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து, கோவிலை பார்வையிட்டு பக்தர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதேபோல் கோட்லாம்பாக்கத்தில் உள்ள ஒரு செல்போன் கடை பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், அங்கு இருந்த 4 செல்போன்கள் மற்றும் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடிச்சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் விரைந்து வந்து, திருட்டு நடந்த கடையை பார்வையிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கை ரேகைகளையும், தடயங்களையும் சேகரித்தனர். முத்துமாரியம்மன் கோவில் மற்றும் செல்போன் கடையில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, மர்மநபர்களை வலைவீசி தேடி வரு கின்றனர்.
விருத்தாசலம் அருகே உரிய ஆவணமில்லாததால் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திமுக நிர்வாகி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விருத்தாசலம்:
கடலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலுக்காக 6 சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும்படை, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தேர்தல் விதிமுறை மீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் வந்தது. உடனே பறக்கும் படை அதிகாரி சுரேஷ் குமார் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் அவரிடம் விசாரித்தபோது அவர் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள டி.வி. புத்தூரை சேர்ந்த நடராஜன் என்பதும், தி.மு.க நிர்வாகி என்பதும் தெரியவந்தது. அவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து நடராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் சப்-கலெக்டர் பிரசாந்திடம் ஒப்ப டைக்கப்பட்டது.
கடலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலுக்காக 6 சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும்படை, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தேர்தல் விதிமுறை மீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் வந்தது. உடனே பறக்கும் படை அதிகாரி சுரேஷ் குமார் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் அவரிடம் விசாரித்தபோது அவர் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள டி.வி. புத்தூரை சேர்ந்த நடராஜன் என்பதும், தி.மு.க நிர்வாகி என்பதும் தெரியவந்தது. அவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து நடராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் சப்-கலெக்டர் பிரசாந்திடம் ஒப்ப டைக்கப்பட்டது.






