search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் குழாய் உடைப்பு"

    • அனல் மின்நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியது.
    • ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் வெளியேறியதால் பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அனல் மின்நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியது. ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் வெளியேறியதால் பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது. இதனால் காடையாம்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மின்மோட்டாரை ஆப் செய்து தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர்.

    குடிநீர் குழாய் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை தொடர்ந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது. பழுதான ராட்சத குழாயை நீக்கி புதிய குழாய் அமைத்தால் உடைப்பு ஏற்படாது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • முத்தரசநல்லூர் காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து சுமார் 780 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
    • கோடைகாலம் என்பதால் அடிக்கடி காவிரி குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும்.

    திருப்பத்தூர்:

    காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கீழக்கரை, சிவகங்கை, ஆகிய 5 நகராட்சிகளும், முதுகுளத்தூர், மண்டபம், சாயல்குடி, கமுதி, அபிராமம், இளையான்குடி, திருப்பத்தூர், நெற்குப்பை, உள்ளிட்ட 11 பேரூராட்சி களும், 18 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 3,163 கிராமங்களும் பயன்பெற்று வருகின்றன.

    இதற்காக தினமும் திருச்சி அருகே உள்ள முத்தரசநல்லூர் காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து சுமார் 780 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலமாக இந்த பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

    அவ்வப்போது குழாய்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும், முறையான பராமரிப்பு இல்லாததாலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்லும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. நேற்று மாலை திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியில் புதுக்கோட்டை நெடுஞ்சாலை அருகே பதிக்கப்பட்டிருந்த காவிரி கூட்டு குடிநீர் குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களும், பஸ்களும் மேற்கொண்டு செல்ல முடியாமல் நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த திருப்பத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். குழாய் உடைப்பின் காரணமாக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சென்றது. சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் சிறுவர், சிறுமியர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

    இதையடுத்து திருச்சியில் உள்ள பம்பிங் ஸ்டேஷனில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. கோடைகாலம் என்பதால் அடிக்கடி காவிரி குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த நிலையில் கிராமத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
    • தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே உள்ள மருதேரி தென்பெண்ணையாற்றில் வீரமலை பஞ்சாயத்து கரடியூர் கிராம மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக மருதேரி ஆற்றில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் உறை கிணறு அமைக்கப்பட்டு இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த நிலையில் கிராமத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மருதேரி உயர் மட்ட ஆற்றுப்பாலத்தின் மீது செல்லும் இரும்பு குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விண்ணை நோக்கி பாய்கிறது. அவ்வாறு பாயும் தண்ணீர் வீணாக ஆற்றில் கலக்கிறது. இதனால் வீரமலை கிராம மக்கள் குடிநீர் இன்றி பெரும் அவதியுற்று வருகின்றனர். மேலும் இந்த குழாய் உடைப்பு ஏற்பட்டு இதுவரை எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    எனவே குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் வரை தார்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ஜேசிபி இயந்திரம் மூலம் குழி ேதாண்டிய போது குடிநீர் பைப்புகள் நெடுகிலும் உடைந்துவிட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் வரை தார் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது .இந்த தார் சாலை விரிவாக்க பணியை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் செய்து வருகிறார். இந்நிலையில் தார் சாலையின் ஓரத்தில் மாணிக்கநத்தம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாய் பாதிக்கப்பட்டு அந்தக் குழாயின் வழியாக பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தார் சாலை விரிவாக்க பணிக்காக தார் சாலையின் ஓரத்தில் நெடுகிலும் குழி தோண்டப்பட்டு வருகிறது .

    இதன் காரணமாக தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி ேதாண்டிய போது குடிநீர் பைப்புகள் நெடுகிலும் உடைந்துவிட்டது. இதனால் மாணிக்கநத்தம் ஊராட்சி பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குடிதண்ணீர் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    குடிநீர் குழாய் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தற்பொழுது தான் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து போடப்பட்டது. குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    அதேபோல் பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு இருப்பது குறித்து ஊராட்சித் தலைவர் வேலுசாமி புகார் செய்தார். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கேட்டு ஊராட்சி தலைவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் .எனவே நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த குடிநீர் குழாய் மாற்றி பொது மக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

    • 4வது குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
    • நீரேற்று நிலையங்கள் தயார்படுத்தும் பணி ஆகியன பெருமளவு நிறைவடைந்துள்ளது.

    திருப்பூர :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 4வது குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.இதில் மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து குடிநீர் கொண்டு வந்து வினியோகிக்கும், 4வது குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.பிரதான குழாய்கள் பதிப்பு பணி, சுத்திகரிப்பு மையம் மற்றும் நீரேற்று நிலையங்கள் தயார்படுத்தும் பணி ஆகியன பெருமளவு நிறைவடைந்துள்ளது.இப்பணிகள் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தனர். தற்போதுள்ள பணிகள் நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.மேலும் 4வது குடிநீர் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை விரைவுபடுத்தி வருகிற 15-ந் தேதி வெள்ளோட்டம் நடத்தும் வகையில் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.மேலும் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய்கள் பதிப்பு பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். இப்பணியின் போது ஏற்படும் குடிநீர் குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.தெரு விளக்குகள் புதிதாக பொருத்துதல், பழுதான விளக்குகள் உடனுக்குடன் மாற்றுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

    ×