என் மலர்
நீங்கள் தேடியது "பலாப்பழம் சீசன்"
- ஒரு சில நேரங்களில் யானைகள் கூட்டமாக வந்து லாரிகளில் உள்ள கரும்புகளை ருசித்தும் வருகின்றன.
- அந்தியூர் மற்றும் பர்கூர் பகுதிகளில் பலாபபழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளன.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் 33 குட் கிராமங்கள் உள்ளன. இந்த வனப் பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள்வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதிகளில் உள்ள யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி ரோட்டில் சுற்றி திரிகிறது. இதே போல் மலைலப்பகுதி வழியாக வரும் வாகனங்களை வழி மறித்து கரும்பு உள்ளிட்ட உணவுகள் உள்ளதா எனவும் யானைகள் தேடி வருகிறது. ஒரு சில நேரங்களில் யானைகள் கூட்டமாக வந்து லாரிகளில் உள்ள கரும்புகளை ருசித்தும் வருகின்றன.
மேலும் பலாப்பழங்களை யானைகள் அதிகளவில் உண்டு வருகிறது. வனப்பகுதிகளில் வாகனங்களில் பலாப்பழங்கள் எடுத்து சென்றால் அவைகளை ருசிப்பதற்காக யானைகள் கூட்டம், கூட்டமாக குவிய தொடங்கி விடுகிறது. இதே போல் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளில் பலா பழங்கள் உள்ளன. கிராம பகுதிகளில் யானைகள் புகுந்து அவற்றை தின்று வருகிறது.
தற்போது பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது. இந்த சீசன் ஆனி மாதம் கடைசி வரை இருக்கும். இந்த நிலையில்ஆனி மாதம் தொடங்கி உள்ள நிலையில் அந்தியூர் மற்றும் பர்கூர் பகுதிகளில் பலாபபழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளன. பலாப்பழம் வாசனைக்காக வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் பலாப்பழங்களை ருசிப்பதற்காக யானைகள் வந்து பலாபழத்தை ருசித்து செல்கிறது.
இந்த நிலையில் பர்கூரை அடுத்த துருசன்னம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பலா மரத்தில் பலாப்பழங்கள் பழுத்து தொங்கிக்கொண்டு இருந்தன. இதனை ருசிப்பதற்காக வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக வருகிறது. இதை தொடர்ந்து யானைகள் பலாப்பழத்தை அங்கேயே பறித்து உண்டு ருசித்துச் சென்றது.
அப்போது யானை மிகுந்த சத்தத்தோடு பிளிரிய படி சென்றது. இதனால் பர்கூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்கள் குடியிருப்புக்குள் யானை வந்துவிடுமோ என்ற ஒரு வித அச்சத்தோடு இருந்து வருகிறார்கள்.
பண்ருட்டியில் உள்ள மொத்த வியாபாரிகள் பலாப்பழங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கி வெளி ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பண்ருட்டியில் இருந்து மும்பை, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். மேலும் பல வியாபாரிகள் பண்ருட்டிக்கு வந்து, பலாப்பழங்களை வாங்கிச்செல்கிறார்கள்.
மழையில்லாததால் பலாமரங்களில் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் பலாப்பழங்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து ஒரு டன் பலாப்பழம் ரூ.20 ஆயிரத்துக்கு வியாபாரிகள் வாங்கினர். ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் பலாப்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு வாங்கப்படுகிறது.






