என் மலர்
கடலூர்
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை முதல் ஏரிக்கு 190 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இதற்கிடையே கோடையின் காரணமாக சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வீராணம் ஏரியில் போதிய அளவில் தண்ணீரை சேமித்து வைத்து வருகிறது.
வீராணம் ஏரியில் 39 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இதன் காரணமாக நீர்மட்டம் அதற்கு கீழே குறையாமல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
நீர்மட்டம் தற்போது வேகமாக குறைந்து வருவதால், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை ஏரிக்கு 190 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து ஏரி நிரம்பும் வரையில் தண்ணீர் வரத்து இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். தற்போது ஏரியில் 45.45 அடியில் தண்ணீர் உள்ளது. சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 41 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இதற்கிடையே கோடையின் காரணமாக சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வீராணம் ஏரியில் போதிய அளவில் தண்ணீரை சேமித்து வைத்து வருகிறது.
வீராணம் ஏரியில் 39 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இதன் காரணமாக நீர்மட்டம் அதற்கு கீழே குறையாமல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
நீர்மட்டம் தற்போது வேகமாக குறைந்து வருவதால், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை ஏரிக்கு 190 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து ஏரி நிரம்பும் வரையில் தண்ணீர் வரத்து இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கொம்பாடி குப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 42). இவர் நெய்வேலி என். எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர்ஜோதி பாசு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தங்கவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் புறவழிச்சாலையில் உடல் அழுகிய நிலையில் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் புறவழிச்சாலையோர பள்ளத்தில் நேற்று அழுகிய நிலையில் ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது பற்றி விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, சப்-இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், மணவாளநல்லூரை சேர்ந்த கல்யாணசுந்தரம்(வயது 60) என்பதும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் என்பதும், தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், நரம்பு தளர்ச்சி காரணமாக கல்யாணசுந்தரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட அவர், புறவழிச்சாலையில் உள்ள ஒரு சர்வீஸ் கடையில் காரை பழுதுநீக்கம் செய்ய நிறுத்திவிட்டு மாயமானதும் தெரியவந்தது.
இது குறித்து கல்யாணசுந்தரத்தின் மகன் கணேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் புறவழிச்சாலையை கடந்தபோது, அவ்வழியே சென்ற வாகனம் மோதி கல்யாணசுந்தரம் இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் ஆலடி ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் அடிப்படை வசதியான குடிநீர் வசதிக்காக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு வீடுகள் தோறும் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதுவும் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை.
இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள கிராமங்களான கொட்டாரங்குப்பம், ராமநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் உள்ள மின் மோட்டார்களுக்கும் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் விருத்தாச்சலம் பாலக்கொல்லை சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலடி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. சுண்ணாம்பு கலந்த குடிநீர் வருவதால் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக கோளாறு சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு உள்ளது. எனவே புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகிப்பதுடன் தட்டுப்பாடின்றி அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பல கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் ஆலடி ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் அடிப்படை வசதியான குடிநீர் வசதிக்காக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு வீடுகள் தோறும் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதுவும் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை.
இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள கிராமங்களான கொட்டாரங்குப்பம், ராமநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் உள்ள மின் மோட்டார்களுக்கும் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் விருத்தாச்சலம் பாலக்கொல்லை சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலடி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. சுண்ணாம்பு கலந்த குடிநீர் வருவதால் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக கோளாறு சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு உள்ளது. எனவே புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகிப்பதுடன் தட்டுப்பாடின்றி அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பல கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் சர்க்கரை ஆலை அதிபரை கைது செய்யக்கோரி கடலூரில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில செயலாளர் சக்திவேல் கடலூர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் சுகுனபூசணன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே இன்று திரண்டனர்.
விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலை அதிபர் மற்றும் வங்கி அதிகாரிகள் கரும்பு ஆலை அதிகாரிகள் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என கூறினார்கள்.
இதையடுத்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தனியார் ஆலை அதிபரை கைது செய்ய வேண்டும் அல்லது எங்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினார்கள்.
அவர்களிடம் உங்கள் கோரிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனை சந்தித்து மனு கொடுங்கள் என போலீசார் அறிவுறுத்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் மனு கொடுக்க சென்றனர்.
இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில செயலாளர் சக்திவேல் கடலூர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் சுகுனபூசணன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே இன்று திரண்டனர்.
விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலை அதிபர் மற்றும் வங்கி அதிகாரிகள் கரும்பு ஆலை அதிகாரிகள் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என கூறினார்கள்.
இதையடுத்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தனியார் ஆலை அதிபரை கைது செய்ய வேண்டும் அல்லது எங்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினார்கள்.
அவர்களிடம் உங்கள் கோரிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனை சந்தித்து மனு கொடுங்கள் என போலீசார் அறிவுறுத்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் மனு கொடுக்க சென்றனர்.
இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவியை குத்திக்கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கடலூர் கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 49), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கொளஞ்சி (43). இவர்களது மகள் திலகவதி (19).
இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனிமையில் இருந்த திலகவதியை பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் (19) என்ற வாலிபர் சரமாரியாக குத்தி கொன்றார்.
இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்ற ஆகாசை கைது செய்தனர். பின்னர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கல்லூரி மாணவி திலகவதி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மாலை கொண்டு சென்றனர்.

மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு அதன் பின்னர் உடலை வாங்கி கொள்கிறோம் என்று, டாக்டர்களிடம் கூறினார்கள்.
மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவி திலகவதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர்கள் தாமரைக்கண்ணன், அசோக்குமார், வக்கீல் தமிழரசன் ஆகியோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று காலை 11 மணிக்கு வந்தனர்.
பின்பு அங்கிருந்த கலெக்டர் அன்புச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோரிடம் மாணவி திலகவதியின் பெற்றோர் கண்ணீர் மல்க ஒரு மனுவை கொடுத்தனர்.
அதன் பின்னர் அவர்கள் கூறும்போது, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்கள். மேலும் மிரட்டலும் விடுக்கிறார்கள். குற்றவாளியான ஆகாசுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர்.
இதனை தொடர்ந்து கலெக்டர் அன்புச்செல்வன் கூறும்போது, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வேலை தொடர்பாக அரசுக்கு அறிவுறுத்தப்படும் என்றார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறும்போது, இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
மேலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை உடனடியாக பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து மகளின் உடலை பெற்றுக் கொள்வதாக கூறி விட்டு சென்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 49), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கொளஞ்சி (43). இவர்களது மகள் திலகவதி (19).
இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனிமையில் இருந்த திலகவதியை பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் (19) என்ற வாலிபர் சரமாரியாக குத்தி கொன்றார்.
இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்ற ஆகாசை கைது செய்தனர். பின்னர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கல்லூரி மாணவி திலகவதி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மாலை கொண்டு சென்றனர்.
அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும், மாணவியின் உடலை உறவினர்களிடம் கொடுத்தனர். ஆனால், அவர்கள் திலகவதியின் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

கலெக்டர் அலுவலகம் வந்த கல்லூரி மாணவி திலகவதியின் தாய் கதறி அழுத காட்சி.
மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு அதன் பின்னர் உடலை வாங்கி கொள்கிறோம் என்று, டாக்டர்களிடம் கூறினார்கள்.
மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவி திலகவதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர்கள் தாமரைக்கண்ணன், அசோக்குமார், வக்கீல் தமிழரசன் ஆகியோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று காலை 11 மணிக்கு வந்தனர்.
பின்பு அங்கிருந்த கலெக்டர் அன்புச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோரிடம் மாணவி திலகவதியின் பெற்றோர் கண்ணீர் மல்க ஒரு மனுவை கொடுத்தனர்.
அதன் பின்னர் அவர்கள் கூறும்போது, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்கள். மேலும் மிரட்டலும் விடுக்கிறார்கள். குற்றவாளியான ஆகாசுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர்.
இதனை தொடர்ந்து கலெக்டர் அன்புச்செல்வன் கூறும்போது, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வேலை தொடர்பாக அரசுக்கு அறிவுறுத்தப்படும் என்றார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறும்போது, இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
மேலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை உடனடியாக பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து மகளின் உடலை பெற்றுக் கொள்வதாக கூறி விட்டு சென்றனர்.
விருத்தாசலத்தில் மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைதான வாலிபர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வீடியோவாக வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் திலகவதி (வயது 19).
இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனிமையில் இருந்த திலகவதியை பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் (19) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டி கொன்றார்.
இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்ற ஆகாசை கைது செய்தனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி திலகவதியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
கைது செய்யப்பட்ட வாலிபர் ஆகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கருவேப்பிலங்குறிச்சியில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதனை தொடர்ந்து பா.ம.க.வினர் மற்றும் மாணவியின் உறவினர்கள் மற்றும் கருவேப்பிலங்குறிச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன், இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டனர்.
மாணவி திலகவதி கொலை செய்யப்பட்டதை கண்டித்து கருவேப்பிலங்குறிச்சியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இதற்கிடையே திலகவதியை கொலை செய்தது தொடர்பாக ஆகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீஸ்கரர் ஒருவர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் வாங்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
3.09 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் திலகவதியை பற்றியும், அவரை எப்படி தெரியும், கொலை செய்தது எப்படி என்பது குறித்தும் பல்வேறு கேள்விகளை போலீஸ்காரர் ஒருவர் கேட்பதும், அதற்கு ஆகாஷ் பதில் அளிக்கும் காட்சியும் அதில் இடம் பெற்று இருக்கிறது.
போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் ரகசியமாக வாங்கப்பட்ட வாக்குமூலம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருப்பது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மாலை கொண்டு சென்றனர்.
அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும், மாணவியின் உடலை உறவினர்களிடம் கொடுத்தனர். ஆனால், அவர்கள் திலகவதியின் உடலை வாங்க மறுத்து விட்டனர்.
மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு அதன் பின்னர் உடலை வாங்கி கொள்கிறோம் என்று, டாக்டர்களிடம் கூறினார்கள்.
மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவியின் சொந்த ஊரான கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் திலகவதி (வயது 19).
இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனிமையில் இருந்த திலகவதியை பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் (19) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டி கொன்றார்.
இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்ற ஆகாசை கைது செய்தனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி திலகவதியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
கைது செய்யப்பட்ட வாலிபர் ஆகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கருவேப்பிலங்குறிச்சியில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதனை தொடர்ந்து பா.ம.க.வினர் மற்றும் மாணவியின் உறவினர்கள் மற்றும் கருவேப்பிலங்குறிச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன், இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டனர்.
மாணவி திலகவதி கொலை செய்யப்பட்டதை கண்டித்து கருவேப்பிலங்குறிச்சியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இதற்கிடையே திலகவதியை கொலை செய்தது தொடர்பாக ஆகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீஸ்கரர் ஒருவர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் வாங்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
3.09 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் திலகவதியை பற்றியும், அவரை எப்படி தெரியும், கொலை செய்தது எப்படி என்பது குறித்தும் பல்வேறு கேள்விகளை போலீஸ்காரர் ஒருவர் கேட்பதும், அதற்கு ஆகாஷ் பதில் அளிக்கும் காட்சியும் அதில் இடம் பெற்று இருக்கிறது.
போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் ரகசியமாக வாங்கப்பட்ட வாக்குமூலம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருப்பது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மாலை கொண்டு சென்றனர்.
அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும், மாணவியின் உடலை உறவினர்களிடம் கொடுத்தனர். ஆனால், அவர்கள் திலகவதியின் உடலை வாங்க மறுத்து விட்டனர்.
மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு அதன் பின்னர் உடலை வாங்கி கொள்கிறோம் என்று, டாக்டர்களிடம் கூறினார்கள்.
மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவியின் சொந்த ஊரான கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரத்தில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் பொன்னம்பலம் நகரை சேர்ந்தவர் ராமநாதன்(வயது 42). இவர் சிதம்பரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு குளிர்பானம் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராமநாதன் தனது வீட்டில் மினி லாரியில் இருந்து குளிர்பான பாட்டில்களை இறக்கி கொண்டிருந்தார்.
அப்போது சிதம்பரம் சிவசக்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் புருஷோத்தமன்(26), சுந்தர்ராஜன்(22), ஓமகுளம் பன்னீர் செல்வம் மகன் முரளி(30), சிதம்பரம் செங்கட்டான் தெருவை சேர்ந்த கணேசன் மகன் பரணிதரன்(28), மணி(53), சுப்புரமணி மகன் சூரியமுர்த்தி(26) ஆகியோர் அங்கு வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் ராமநாதனிடம் தங்களுக்கு பணம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை, நான் எதற்கு உங்களுக்கு பணம் தர வேண்டும், தர முடியாது என்று கூறியுளளார்.
இதனால் ஆத்திரமடைந்த 6 பேரும் சேர்ந்து ராமநாதனை உருட்டு கட்டை, இரும்பு கம்பியால் தாக்கினர். மேலும் அவரது மினி லாரியையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். ராமநாதன் காயத்துடன் கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் புருஷோத்தமன் உள்பட 6 பேர் மீதும் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து, அவர்கள் அனைவரையும் கைது செய்தார்.
விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 50). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கொளஞ்சி.
இவர்களது மகள் திலகவதி (19). இவர் விருத்தாசலம்- எருமனூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை சுந்தரமூர்த்தி வேலை தொடர்பாக வெளியூர் சென்று விட்டார். கொளஞ்சி மயிலாடுதுறையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.
காலையில் மாணவி திலகவதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். வீட்டில் அவர் தனியாக இருந்தார்.
அந்த நேரத்தில் கருவேப்பிலங்குறிச்சி அடுத்த பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் (19) என்ற வாலிபர் வீட்டுக்குள் புகுந்தார். அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திலவதியின் உடலில் சரமாரியாக குத்தினார்.
கத்திக்குத்தில் காயம் அடைந்த திலகவதி கூச் லிட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதையறிந்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவி திலகவதியை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி திலகவதி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் அலறியடித்து கொண்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு பிணமாக கிடந்த மகளை பார்த்து கதறி அழுதனர்.
இந்த கொலை குறித்து விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன், இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது மற்றும் போலீசார் திலகவதியின் குடும்பத்தினரிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ஆகாஷை தீவிரமாக தேடிவந்தனர். இன்று அதிகாலை பேரளையூரில் பதுங்கி இருந்த ஆகாஷை போலீசார் பிடித்தனர். பின்பு அவரை விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆகாஷ் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். பின்பு தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தது தெரிய வந்தது.
மாணவியை ஆகாஷ் கொலை செய்ததற்கு ஒருதலை காதல் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 50). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கொளஞ்சி.
இவர்களது மகள் திலகவதி (19). இவர் விருத்தாசலம்- எருமனூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை சுந்தரமூர்த்தி வேலை தொடர்பாக வெளியூர் சென்று விட்டார். கொளஞ்சி மயிலாடுதுறையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.
காலையில் மாணவி திலகவதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். வீட்டில் அவர் தனியாக இருந்தார்.
அந்த நேரத்தில் கருவேப்பிலங்குறிச்சி அடுத்த பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் (19) என்ற வாலிபர் வீட்டுக்குள் புகுந்தார். அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திலவதியின் உடலில் சரமாரியாக குத்தினார்.
கத்திக்குத்தில் காயம் அடைந்த திலகவதி கூச் லிட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதையறிந்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவி திலகவதியை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி திலகவதி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் அலறியடித்து கொண்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு பிணமாக கிடந்த மகளை பார்த்து கதறி அழுதனர்.
இந்த கொலை குறித்து விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன், இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது மற்றும் போலீசார் திலகவதியின் குடும்பத்தினரிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ஆகாஷை தீவிரமாக தேடிவந்தனர். இன்று அதிகாலை பேரளையூரில் பதுங்கி இருந்த ஆகாஷை போலீசார் பிடித்தனர். பின்பு அவரை விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆகாஷ் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். பின்பு தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தது தெரிய வந்தது.
மாணவியை ஆகாஷ் கொலை செய்ததற்கு ஒருதலை காதல் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது.
இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லமுடியாமல் கடும் அவதியடைந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 7 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. சிறிது நேரத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கத்தது.
பண்ருட்டி, காடாம் புலியூர், புதுப்பேட்டை, கண்டரக்கோட்டை போன்ற பகுதிகளில் இரவு 8 மணியளவில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால் சாலையோரம் நின்ற மரங்கள் சாய்ந்து விழுந்தன.
மரக்கிளைகள், விளம்பர பதாகைகள் காற்றில் பறந்து விழுந்தன. சுமார் 1 மணிநேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. பல இடங்களில் தென்னை, பலா, முந்திரி, வாழை போன்ற மரங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. பண்ருட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய மின்சாரம் தடை ஏற்பட்டது. இந்த பகுதிகள் இருளில் மூழ்கியது.
பண்ருட்டி அருகே உள்ள தெற்கு மே.மாம்பட்டு காலனியில் வேல் என்பவரது வீட்டு முன்பு நின்ற தென்னைமரத்தில் இரவு 9 மணியளவில் இடி விழுந்து தீ பிடித்து எரியதொடங்கியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பண்ருட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். தீ மேலும் அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்து அணைத்தனர்.
பண்ருட்டி - அரசூர் சாலையில் அம்மாபேட்டை அருகே சாலையோரம் நின்ற புளியமரம் ஒன்று சூறாவளிக்காற்றில் சாய்ந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ரமேஷ், மணிகண்டன் ஆகியோர் மீது மரக்கிளை விழுந்ததால் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருத்தாசலம் மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதிகளும் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 30 நிமிடம் பலத்த மழை கொட்டியது. சூறாவளிக் காற்றும் வீசியதால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம், குணமங்கலம், அக்ரஹாரம், எசலூர், புதுக்குப்பம், நாச்சியார்பேட்டை போன்ற பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென்று காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழை கொட்டியது. சுமார் 1 மணிநேரம் மழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல் சூறாவளிக் காற்றும் பயங்கரமாக வீசியது. சாலையோரம் நின்ற மரங்களின் கிளைகள் ஒடிந்து விழுந்தன. ஓட்டு வீடுகளில் இருந்த ஓடுகள் காற்றில் பறந்தன.
ஸ்ரீமுஷ்ணம் பழைய பஸ்நிலையத்தில் உள்ள மேற்கூரையின் கீழ் பயணிகள் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தன. அப்போது வீசிய சூறாவளிக் காற்றில் பஸ்நிலையத்தில் உள்ள மேற்கூரை காற்றில் பறந்தன. இதனால் அங்கு நின்ற பயணிகள் அலறியடித்து கூச்சல் போட்டு ஓடினர்.
சிறுபாக்கம் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணிநேரம் பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
இதேபோல் மாங்குளம், எஸ்.புதூர், மேட்டூர், மா.குடிகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென்று சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. திருக்கோவிலூர் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் குளிர்ந்தகாற்று வீசியது. பின்பு அது சூறாவளிக் காற்றாக மாறியது.
திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1 மணிநேரம் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சூறாவளிக்காற்றில் திருக்கோவிலூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. திருக்கோவிலூர்- விழுப்புரம் நெடுஞ்சாலையில் பெரிய புளியமரம் ஒன்று சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் 2 மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டனர். திருக்கோவிலூர் பகுதியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் பல கிராமங்களுக்கு மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த கிராமங்கள் இருளில் மூழ்கியது.
கடலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது.
இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லமுடியாமல் கடும் அவதியடைந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 7 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. சிறிது நேரத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கத்தது.
பண்ருட்டி, காடாம் புலியூர், புதுப்பேட்டை, கண்டரக்கோட்டை போன்ற பகுதிகளில் இரவு 8 மணியளவில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால் சாலையோரம் நின்ற மரங்கள் சாய்ந்து விழுந்தன.
மரக்கிளைகள், விளம்பர பதாகைகள் காற்றில் பறந்து விழுந்தன. சுமார் 1 மணிநேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. பல இடங்களில் தென்னை, பலா, முந்திரி, வாழை போன்ற மரங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. பண்ருட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய மின்சாரம் தடை ஏற்பட்டது. இந்த பகுதிகள் இருளில் மூழ்கியது.
பண்ருட்டி அருகே உள்ள தெற்கு மே.மாம்பட்டு காலனியில் வேல் என்பவரது வீட்டு முன்பு நின்ற தென்னைமரத்தில் இரவு 9 மணியளவில் இடி விழுந்து தீ பிடித்து எரியதொடங்கியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பண்ருட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். தீ மேலும் அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்து அணைத்தனர்.
பண்ருட்டி - அரசூர் சாலையில் அம்மாபேட்டை அருகே சாலையோரம் நின்ற புளியமரம் ஒன்று சூறாவளிக்காற்றில் சாய்ந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ரமேஷ், மணிகண்டன் ஆகியோர் மீது மரக்கிளை விழுந்ததால் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருத்தாசலம் மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதிகளும் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 30 நிமிடம் பலத்த மழை கொட்டியது. சூறாவளிக் காற்றும் வீசியதால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம், குணமங்கலம், அக்ரஹாரம், எசலூர், புதுக்குப்பம், நாச்சியார்பேட்டை போன்ற பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென்று காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழை கொட்டியது. சுமார் 1 மணிநேரம் மழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல் சூறாவளிக் காற்றும் பயங்கரமாக வீசியது. சாலையோரம் நின்ற மரங்களின் கிளைகள் ஒடிந்து விழுந்தன. ஓட்டு வீடுகளில் இருந்த ஓடுகள் காற்றில் பறந்தன.
ஸ்ரீமுஷ்ணம் பழைய பஸ்நிலையத்தில் உள்ள மேற்கூரையின் கீழ் பயணிகள் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தன. அப்போது வீசிய சூறாவளிக் காற்றில் பஸ்நிலையத்தில் உள்ள மேற்கூரை காற்றில் பறந்தன. இதனால் அங்கு நின்ற பயணிகள் அலறியடித்து கூச்சல் போட்டு ஓடினர்.
சிறுபாக்கம் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணிநேரம் பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
இதேபோல் மாங்குளம், எஸ்.புதூர், மேட்டூர், மா.குடிகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென்று சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. திருக்கோவிலூர் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் குளிர்ந்தகாற்று வீசியது. பின்பு அது சூறாவளிக் காற்றாக மாறியது.
திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1 மணிநேரம் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சூறாவளிக்காற்றில் திருக்கோவிலூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. திருக்கோவிலூர்- விழுப்புரம் நெடுஞ்சாலையில் பெரிய புளியமரம் ஒன்று சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் 2 மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டனர். திருக்கோவிலூர் பகுதியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் பல கிராமங்களுக்கு மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த கிராமங்கள் இருளில் மூழ்கியது.
திட்டக்குடி அருகே துப்பட்டாவால் கட்டிக்கொண்டு காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார்.
கீழகல்பூண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அபிராமி(16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்த போது சிவரஞ்சனுக்கும், அபிராமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில் இருவரும் பொதுத்தேர்வு எழுதி முடித்ததும் விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தனர். இருப்பினும் பல நேரங்களில் சிவரஞ்சனும், அபிராமியும் பொது இடங்களில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிவரஞ்சனையும், அபிராமியையும் சந்திக்க விடாமல் தடுத்து வந்தனர்.
இதை மீறி நேற்று முன்தினம் மாலை சிவரஞ்சனும், அபிராமியும் வீட்டை விட்டு வெளியேறி தொழுதூரை சேர்ந்த வேந்தன் என்பவரது விளை நிலத்துக்கு சென்று தனிமையில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரவில் அங்கு வந்த வேந்தன், அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
ஆனால் காதல் ஜோடி வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் 2 பேரையும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை. இது பற்றி தகவல் அறிந்த வேந்தன் தனது நிலத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அவரது கிணற்றின் அருகில் 2 ஜோடி செருப்புகள் கிடந்தன.
உடனே அவர் போலீசாருக்கும், சிவரஞ்சன், அபிராமி ஆகியோரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது சிவரஞ்சனும், அபிராமியும் துப்பட்டாவால் உடலை சுற்றி கட்டிய நிலையில் நீரில் மூழ்கிக் கிடந்தது தெரிந்தது.
பின்னர் இருவரது உடலையும் கிணற்றில் இருந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதற்கிடையே அங்கு வந்த இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காதலுக்கு அவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இனி சேர்ந்து வாழ முடியாது என்று எண்ணிய இருவரும் ஒன்றாகவே சாவோம் என்ற விபரீத முடிவை எடுத்துள்ளனர். அதன்படி இருவரும் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
புன்னகை மன்னன் சினிமா படத்தில் நாயகனும், நாயகியும் ஜோடியாக மலை உச்சியில் இருந்து குதிப்பார்கள். அந்த சினிமா படத்தை மிஞ்சும் வகையில் இவர்கள் துப்பட்டாவால் தங்கள் உடலை சுற்றி கட்டிக்கொண்டு ஜோடியாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார்.
கீழகல்பூண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அபிராமி(16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்த போது சிவரஞ்சனுக்கும், அபிராமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில் இருவரும் பொதுத்தேர்வு எழுதி முடித்ததும் விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தனர். இருப்பினும் பல நேரங்களில் சிவரஞ்சனும், அபிராமியும் பொது இடங்களில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிவரஞ்சனையும், அபிராமியையும் சந்திக்க விடாமல் தடுத்து வந்தனர்.
இதை மீறி நேற்று முன்தினம் மாலை சிவரஞ்சனும், அபிராமியும் வீட்டை விட்டு வெளியேறி தொழுதூரை சேர்ந்த வேந்தன் என்பவரது விளை நிலத்துக்கு சென்று தனிமையில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரவில் அங்கு வந்த வேந்தன், அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
ஆனால் காதல் ஜோடி வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் 2 பேரையும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை. இது பற்றி தகவல் அறிந்த வேந்தன் தனது நிலத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அவரது கிணற்றின் அருகில் 2 ஜோடி செருப்புகள் கிடந்தன.
உடனே அவர் போலீசாருக்கும், சிவரஞ்சன், அபிராமி ஆகியோரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது சிவரஞ்சனும், அபிராமியும் துப்பட்டாவால் உடலை சுற்றி கட்டிய நிலையில் நீரில் மூழ்கிக் கிடந்தது தெரிந்தது.
பின்னர் இருவரது உடலையும் கிணற்றில் இருந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதற்கிடையே அங்கு வந்த இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காதலுக்கு அவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இனி சேர்ந்து வாழ முடியாது என்று எண்ணிய இருவரும் ஒன்றாகவே சாவோம் என்ற விபரீத முடிவை எடுத்துள்ளனர். அதன்படி இருவரும் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
புன்னகை மன்னன் சினிமா படத்தில் நாயகனும், நாயகியும் ஜோடியாக மலை உச்சியில் இருந்து குதிப்பார்கள். அந்த சினிமா படத்தை மிஞ்சும் வகையில் இவர்கள் துப்பட்டாவால் தங்கள் உடலை சுற்றி கட்டிக்கொண்டு ஜோடியாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இன்று காலை 14 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சாந்தி நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகணேசமூர்த்தி(வயது25). விவசாயி. இவருக்கும் சேத்தியாத்தோப்பை அடுத்த வட்டாத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
அதன் பேரில் இவர்களது திருமணம் சேத்தியாதோப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை நடக்க இருந்தது.
இந்த நிலையில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து கடலூரில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள் மற்றும் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அக்னீஸ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் திரிபுர சுந்தரி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவில் வட்டாத்தூரில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்த சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து விசாரித்தனர். 18 வயது நிரம்பும் வரை சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க கூடாது.
அதை மீறி திருமணம் செய்து வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறுமியின் பெற்றோரிடம் அதிகாரிகள் கூறினர்.
இதை ஏற்று திருமணத்திற்கான ஏற்பாடுகளை உடனே நிறுத்துவதாக சிறுமியின் பெற்றோர் கூறினர்.
இதை தொடர்ந்து அந்த 14 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அந்த சிறுமியை அதிகாரிகள் மீட்டு கடலூரில் உள்ள குழந்தைகள் நலக்காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சாந்தி நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகணேசமூர்த்தி(வயது25). விவசாயி. இவருக்கும் சேத்தியாத்தோப்பை அடுத்த வட்டாத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
அதன் பேரில் இவர்களது திருமணம் சேத்தியாதோப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை நடக்க இருந்தது.
இந்த நிலையில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து கடலூரில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள் மற்றும் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அக்னீஸ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் திரிபுர சுந்தரி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவில் வட்டாத்தூரில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்த சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து விசாரித்தனர். 18 வயது நிரம்பும் வரை சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க கூடாது.
அதை மீறி திருமணம் செய்து வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறுமியின் பெற்றோரிடம் அதிகாரிகள் கூறினர்.
இதை ஏற்று திருமணத்திற்கான ஏற்பாடுகளை உடனே நிறுத்துவதாக சிறுமியின் பெற்றோர் கூறினர்.
இதை தொடர்ந்து அந்த 14 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அந்த சிறுமியை அதிகாரிகள் மீட்டு கடலூரில் உள்ள குழந்தைகள் நலக்காப்பகத்தில் ஒப்படைத்தனர்.






