search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cuddalore collector"

    • எனது கணவர் கார்த்திகேயன் 6 மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார்.
    • என்னோடு இணக்கமாக இருந்தால் உன்னை ராணிபோல் வாழ வைப்பேன். இல்லை எனில் உன்னையும், உன் குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மாமனார் மிரட்டினார்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன். அவரது மனைவி ஜெயந்தி (வயது35). இவர் தனது 3 குழந்தைகளுடன் சென்று கலெக்டரிடம் மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கார்த்திகேயன் 6 மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். அது முதல் என் கணவர் வீட்டில் எனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.

    இந்த நிலையில் எனது மாமனார் சுந்தரமூர்த்தி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்னோடு இணக்கமாக இருந்தால் உன்னை ராணிபோல் வாழ வைப்பேன். இல்லை எனில் உன்னையும், உன் குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

    இரவு நேரங்களில் போன் செய்து மிகவும் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டினார். இதனை நான் என்னுடைய செல்போனில் பதிவு செய்து வைத்து உள்ளேன்.

    இது சம்மந்தமாக கடந்த 08.04.2022 காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மாமனார் அவரது ஆசைக்கு இணங்கவில்லை என்று கூறி என் தலையினை பிடித்து இரும்பு கேட்டில் இடித்ததால் என் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. நான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அன்று நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் 19.05.2022 அன்று காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.அவர்கள் பதிவு செய்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.

    இப்போது எங்கள் ஊரின் முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் எனது மாமனாருடன் சேர்ந்து என்னை மிரட்டுகின்றனர். கந்துவட்டிக்காரர் என் மாமனாருக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்ததாகவும்,அந்த பணத்தை நான் கொடுக்கவில்லை என்றால் ஊரில் இருக்க முடியாது என மிரட்டுகின்றனர்.

    எனவே, எனக்கும் எனது குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பாலியல் தொல்லை, பணம் கேட்டுமிரட்டல் போன்ற சம்பவங்களில் இருந்து என்னையும், எனது குழந்தைகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவியை குத்திக்கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கடலூர் கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 49), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கொளஞ்சி (43). இவர்களது மகள் திலகவதி (19).

    இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனிமையில் இருந்த திலகவதியை பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் (19) என்ற வாலிபர் சரமாரியாக குத்தி கொன்றார்.

    இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்ற ஆகாசை கைது செய்தனர். பின்னர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கல்லூரி மாணவி திலகவதி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மாலை கொண்டு சென்றனர்.

    அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும், மாணவியின் உடலை உறவினர்களிடம் கொடுத்தனர். ஆனால், அவர்கள் திலகவதியின் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

    கலெக்டர் அலுவலகம் வந்த கல்லூரி மாணவி திலகவதியின் தாய் கதறி அழுத காட்சி.

    மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு அதன் பின்னர் உடலை வாங்கி கொள்கிறோம் என்று, டாக்டர்களிடம் கூறினார்கள்.

    மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மாணவி திலகவதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர்கள் தாமரைக்கண்ணன், அசோக்குமார், வக்கீல் தமிழரசன் ஆகியோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று காலை 11 மணிக்கு வந்தனர்.

    பின்பு அங்கிருந்த கலெக்டர் அன்புச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோரிடம் மாணவி திலகவதியின் பெற்றோர் கண்ணீர் மல்க ஒரு மனுவை கொடுத்தனர்.

    அதன் பின்னர் அவர்கள் கூறும்போது, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்கள். மேலும் மிரட்டலும் விடுக்கிறார்கள். குற்றவாளியான ஆகாசுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் அன்புச்செல்வன் கூறும்போது, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வேலை தொடர்பாக அரசுக்கு அறிவுறுத்தப்படும் என்றார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறும்போது, இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    மேலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை உடனடியாக பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    அதனை தொடர்ந்து மகளின் உடலை பெற்றுக் கொள்வதாக கூறி விட்டு சென்றனர்.
    கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். #GajaStorm #Schools #Holiday
    கடலூர்:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  

    இந்நிலையில் கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.



    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

    கடலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு, பகலாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூரில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து ஆய்வு செய்த சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, செல்போன்களை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதேபோல் நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால்  மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையை கடக்கும்போது கனமழை பெய்யலாம் என்பதால் ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். #GajaStorm #Schools #Holiday

    கடலூர் மாவட்டத்தில் 14 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.
    கடலூர்:

    குழந்தை மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர்கள் மறுவாழ்வு மற்றும் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    குழந்தை தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் திருத்த சட்டம் 2016-ன்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எவ்வித தொழிலிலும் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

    14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அல்லது வளர் இளம் பருவத்தினரை வேலைக்கு அமர்த்தினால் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது பற்றி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள், கூட்டங்கள், ஆய்வுகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்க அமைக்கப்பட்ட தடுப்பு படைகள் மூலம் 20 கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 14 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 6 கடைகளின் உரிமையாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று வழங்கப்பட்டதுடன், நீதிமன்ற அபராதமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் விதிக்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு அபராதத்துடன் 2 ஆண்டு சிறை தண்டனையும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

    ஆகவே கடலூரை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைத்துத்துறை அலுவலர்களின் பங்கேற்புடன் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், சப்-கலெக்டர் சரயூ, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாயத்தேவர், மாவட்ட தொழில்மைய உதவி இயக்குனர் லட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுகோபன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜெயந்திரவிச்சந்திரன், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரங்கநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    கடலூரை அடுத்த எம்.புதூர் கிழக்குத் தெருவை சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூரை அடுத்த எம்.புதூர் கிழக்குத் தெருவை சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கலெக்டர் தண்டபாணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூரை அடுத்த எம்.புதூர் கிழக்குத் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கு கடந்த 3 மாதமாக மின்மோட்டார் பழுதடைந்து உள்ளது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியாமல் இருந்து வருகிறது. இதனால் எங்கள் பகுதிக்கு கடந்த 3 மாதமாக குடிநீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறோம். இதன் காரணமாக எங்கள் பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் 2 கிலோமீட்டர் நடந்து சென்று விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் பிடித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதே போல பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம் சேர்ந்த பொதுமக்கள் காலிகுடத்துடன் கடலூர் கலெக்டர் தண்டபாணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் கூறியிருப்பதாவது:-

    பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கடந்த 4 மாதமாக குடிநீர் குழாய் உடைந்து எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 3 கிலோமீட்டர் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் குடிநீர் பிரச்சினையை தீர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. #tamilnews
    ×